Monday, October 31, 2016

வகுப்பு வருகை பதிவேடு.

வகுப்பு வருகை பதிவேடு.
==================
பள்ளியின் பெயர் - "வாழ்க்கை";
வகுப்பில் இருப்பவர்கள் - 40வயதுக்கு மேற்பட்டவர்கள்;
கோபம் - உள்ளேன் ஐயா!
டென்ஷன் - உள்ளேன் ஐயா!
தனிமை - உள்ளேன் ஐயா!
ஆசைகள் - உள்ளேன் ஐயா! (கோரஸாக);
வெறுப்பு - உள்ளேன் ஐயா!
மாத தவணை - உள்ளேன் ஐயா! மீண்டும் கோரஸாக
அலுவலக டென்ஷன் - உள்ளேன் ஐயா!
கவலை - உள்ளேன் ஐயா;
சோகம்-உள்ளேன் ஐயா!
நிலையற்ற தன்மை - உள்ளேன் ஐயா!
மகிழ்ச்சி - ??????
(ஆசிரியர் மீண்டும் ஒருமுறை)
மகிழ்ச்சி - ??????
மகிழ்ச்சி - வரவில்லை ஐயா!
நிம்மதி - வரவில்லை ஐயா!
திருப்தி - வரவில்லை ஐயா!
இதுதான் நிலை.
வகுப்பு ஆசிரியர்:-
வாழ்வில் கவலை என்ற ஒன்று என்றுமே இல்லை. ஒன்று சந்தோஷம் இருக்கக்கூடிய மனநிலை, இரண்டாவது சந்தோஷத்தை தொலைத்த மனநிலை.
வாழ்க்கை மிக எளியதானது. ஆனால் அந்த எளிய நிலை பெற பலர் வளையத்துக்குள் சென்று எளிதாக முயலாமல் திணறுகின்றனர்.
ஹிட்லர் சொன்னார்: "ஒருவன் இறந்த பொழுது அவன் வங்கி கணக்கில் இருக்கும் பணம் அவன் தேவைக்கு மேல் அதிகமாக வாழ்வதற்கு சம்பாதித்தது" என்று.
தேவையற்ற பலவற்றை உள்ளே வைத்து, தேவையானவைகளை நாம் வெளியே வைத்து, நாமே தொலைத்து விட்டு, தொலைந்தது போல தேடிக்- கொண்டிருக்கிறோம்.
கவலை என்பது ஒரு வலை. மாயவலை.
நீ வலைக்குள் இருக்காதே என்றும் உன் நிலைக்குள் இரு. நிம்மதி உன்னை நேசிக்கும்.
உன் வாழ்க்கை உன் கையில்.
உன் சந்தோஷம், நிம்மதி உன் கையில்.
"ஜீவன் இருக்கு மட்டும் 
வாழ்க்கை நமக்கு மட்டும்" இதுதான் ஞானசித்தர் பாட்டு....
இந்த பூமி சமம் நமக்கு
நாம் பிறக்கையில் 
கையில் என்ன கொண்டு வந்தோம் 
கொண்டு செல்ல...."

வாழ்க வளமுடன்