Saturday, March 31, 2012

Mum-in-law is top reason why couples fight

Apart from household work and money issues, mothers-in-law remain one of the top reasons behind arguments among couples.

A survey has found that they are one of the most common causes of fights between British couples.

The poll of 2,000 adults discovered that only rows over money and disputes concerning household chores occurred more frequently than bickering about each other's relations.

The study by electronics firm Philips found that poor budgeting and a lack of savings regularly cause couples to fall out, as does women being lumbered with too many domestic duties.

The top ten reasons also included drinking habits, hoarding objects, doing the washing up, deciding what to watch on the TV and the time it takes to get ready.

Researchers also found that one in ten of us have a fight with our partner daily, while one in twenty has several fights per day.

"Couples will always argue. Even trivial things - like who looks after the TV remote, leaving wet towels on the floor and taking too long to get ready - rile us," the Daily Mail quoted spokesman Deneice Harwin as saying.

Friday, March 30, 2012

பசி

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது.

உடனே மனம் உடைந்து போனான். அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார்.

அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது.

எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார்.

வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்! ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான். உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது.

அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?. ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

புதிய பாரதி - நவீன உலகம்

புதிய பாரதி - நவீன உலகம்

காலை எழுந்தவுடன் email
வாலைக் குமரியுடன் facebook
சாலை முழுவதும் Mobile Talk
மாலை முடியும் வரை Chit Chat
மாலை முடிந்ததும் Work Hour Start

பொய்யுரை எழுத Status Reports
மெய்யுரை சொல்ல Company Reports
பொய்யை மெய்யாக்க Status Call
மெய்யை உறுதியாக்க Conference Call
பொய்யும் மெய்யும் கலந்த Live Call

டாகுமென்ட் எழுத Copy & Paste
ப்ரோக்ராம் எழுத Cut & Paste
மறந்ததைப் படிக்க E-Learning
படிக்காமல் உறங்க Audio-Learning
படித்ததை நினைவூட்ட Google Search

கூடிப் பேச Conference Hall
கூடாமல் பேச Coffee Break
காதல் செய்ய Live Chat
குறட்டை விட Training Session
அரட்டை அடிக்க Lunch Break

ஓசியில் திங்க Team Lunch
தின்றதைச் செரிக்க Gym Sport
ஊரைச் சுற்ற Team Golf
ஆடிப் பாட Team Outing
ஓடி விளையாட Paint Ball

பொழுது போக்க Birthday Party
இதையும் மீறி Friday Pub
அதையும் மீறி Weekend Party
ஆயிரம் இருந்தும் NO PEACE OF mind

Thursday, March 29, 2012

WAY IN – WAY OUT

WAY IN – WAY OUT

 

 

Once Wealth and Poverty approached a merchant and introduced themselves as Goddesses.

 

The merchant offered his salutations to both of them and said: "May I know what brings you to my humble tenement?"

 

The Goddess of Wealth said: "We want you to judge and tell us as to who is more beautiful between us two?"


The merchant was in a fix. He knew he was between the devil and the deep sea. If he were to declare wealth as more beautiful than poverty, poverty would curse him. If he were to declare poverty as more beautiful, than wealth, wealth would forsake him.


However, he regained his composure and said: "I have great respect for you both. Would you please act according to my instructions? Then only I can judge properly." The Goddesses agreed.


He said: "Mother wealth, would you please go to the entrance (gates) and walk into the house? Mother poverty, would you please walk from here towards the gates? I can have a good look at you both, from near and far."


The two Goddesses did walk as the merchant wished them to.

 

Then the merchant happily declared: "Mother wealth. You appear very beautiful when you enter the house. Mother poverty. You look very beautiful when you leave the house."


The Goddesses appreciated the wit and wisdom of the merchant.

 

The Goddess of wealth happily stayed in his house while the Goddess of poverty cheerfully walked away.


Whenever there comes a difficult testing time, we should learn how to avoid compromising situations without ever telling an untruth. In certain circumstances we will have to conduct ourselves in an extremely careful way. We should know how to use words without hurting people. It has been said that, "He is the fortunate one who knows how to talk without ever hurting anyone." We should neither hurt others nor be hurt by others.

Wednesday, March 28, 2012

30 வகை சிக்கன சமையல் !

காய்கறிகளின் விலை, திடீர் திடீர் என்று நினைத்துப் பார்க்க முடியாத உச்சத்தைத் தொட்டு விடும்போது... 'எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?' என்று மண்டையிடியே வந்துவிடும்தானே! அதற்கு மருந்துபோடும் வகையில், 30 வகை 'சிக்கன ரெசிபி'களை வழங்கி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் 'பட்ஜெட் சமையல் ஸ்பெஷலிஸ்ட்' நங்கநல்லூர் பத்மா.

 

''வாழைத்தண்டு, கீரை, பூசணிக்காய், பப்பாளி, வேப்பம்பூ போன்ற விலை அதிகம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி, சுவையில் சூப்பராக இருக்கும் அயிட்டங்களை தந்துள்ளேன். குறைவான செலவில் இவற்றை செய்து பரிமாறி, நிறைவான பராட்டுக்களை அள்ளுங்கள்''.

 

 

கீரைக்கூட்டு

தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பாசிப்பருப்பு - 100 கிராம், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, தண்ணீர் வடிய விட்டு பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிடவும். நறுக்கிய கீரையுடன் தேவையான உப்பு கலந்து நன்றாக வேக வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வெந்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு தாளித்து இறக்கவும்.

குறிப்பு: அரைக்கீரை கண்ணுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்லது.

 

 

வெஜிடபிள் கோஸ்மல்லி

தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், துருவிய கோஸ், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - தலா ஒரு கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்கு வடித்துவிடவும். துருவிய கேரட், கோஸ், நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இதே முறையில் முளைகட்டிய பயறு வகைகளையும் தயாரித்துச் சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகளை சேர்த்து (வெங்காயம், தக்காளி, பச்சை சோளம்) பச்சையாக சாப்பிடுவதால், அனைத்துச் சத்துகளும் அப்படியே உடலுக்கு கிடைக்கும்.

 

கத்திரிக்காய் ரசவாங்கி

தேவையானவை: கத்திரிக்காய் - 250 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, புளி - நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்,  வெல்லம் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி... உப்பு சேர்த்து, புளியை கரைத்து விட்டுக் கொதிக்க விடவும். தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்திருக்கும் கத்திரிக்காயுடன் சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

குறிப்பு: இதைச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.

 

 

கேழ்வரகு இனிப்பு தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு - 250 கிராம், அரிசி மாவு - ஒரு கப், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 50 மில்லி.

செய்முறை: வெல்லத்தை தூளாக்கி சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். இதில் இரண்டு வகை மாவையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து தோசைகளாக வார்த்து, இருபுறமும் சிறிது நெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

 

 

வாழைப்பூ பொரியல்

தேவையானவை: வாழைப்பூ - ஒன்று (சிறியது), தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளித் தண்ணீர் - சிறிய கப், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மோர் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் நரம்பு போல் உள்ள காம்பை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கி, சிறிது மோர் கலந்த தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து நன்கு பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, மிளகாய் வற்றல் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை, பிழிந்து வைத்திருக்கும் வாழைப்பூ, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: வாழைப்பூவில் உள்ள துவர்ப்புச்சத்து சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு நல்லது. இதை துவையல், உசிலி, கூட்டு என்று பல விதமாகத் தயாரிக்கலாம்.

 

 

வாழைத்தண்டு புளிப்பச்சடி

தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு பெரிய துண்டு, புளி - எலுமிச்சம் பழ அளவு, பொடித்த வெல்லம் - 50 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், மோர் - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டை மேல் தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி நாரை நீக்கிப் பொடியாக நறுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் ஊற்றி நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு வைக்கவும். புளியைக் கரைத்து, நறுக்கிய வாழைத்தண்டை எடுத்து அதனுடன் சேர்த்து, உப்பு போட்டு வேக வைக்கவும். அதில் தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு தாளித்து இறக்கவும்.

குறிப்பு: வாழைத்தண்டு பித்தப்பையில் கல் சேராமல் தடுக்கும். நார்ச்சத்து உடையது. ஜூஸ் செய்தும் குடிக் கலாம்.

 

 

புரோட்டீன் தானிய கூட்டு

தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, மொச்சை, பச்சைப் பட்டாணி, முளைகட்டிய பாசிப் பயறு, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி, மொச்சை, பாசிப் பயிறு, கொள்ளு எல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் சேர்த்து, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து... இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த பயறு வகையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, வேக வைத்த பயறுடன் கலந்து  இறக்கவும்.

குறிப்பு: பயிறு வகைகளில் புரோட்டீன் அதிகம் என்பதால்... சுண்டல், சாலட், அடை, வடை என்று பல விதமாக பயிறு வகைகளைப் பயன்படுத்தலாம்.

 

 

ரத்ன லட்டு

தேவையானவை: கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, சாமை அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, கொள்ளு, சிவப்பரிசி - தலா ஒரு சிறிய கப், பார்லி - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, சர்க்கரை - 250 கிராம்.

செய்முறை: கேழ்வரகு, கம்பு, தினை, சோளம், சாமை அரிசி, பொட்டுக் கடலை, ஜவ்வரிசி, பார்லி, கொள்ளு, சிவப்பரிசி எல்லாவற்றையும் கல் நீக்கி, தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து, அரைத்த மாவுடன் கலந்து, நெய்யை சூடாக்கி விட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு:  விலை மலிவாக கிடைக்கும் இந்த தானியங்களில்  நிறைய சத்துகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு தினம் ஒரு உருண்டை கொடுத்தால், நல்ல வளர்ச்சி இருக்கும். முந்திரி, பாதாம் சேர்த்தும் அரைக்கலாம்.

 

 

 

சோயா  மொச்சை கிரேவி

தேவையானவை: சோயா - 100 கிராம், மொச்சை - 100 கிராம், தக்காளி - 2, மிளகாய் வற்றல் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 2 பல், தயிர் - 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோயா, மொச்சையைக் குக்கரில் வைத்து, தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும் தக்காளி, மிளகாய் வற்றல், தனியா, இஞ்சி, பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, நன்கு வதங்கியதும் வேக வைத்த மொச்சை, சோயாவைப் போட்டுக் கொதிக்க வைத்து, தயிர் விட்டு இறக்கவும்.

குறிப்பு: சோயா மொச்சையுடன் இஞ்சி, பூண்டு சேர்ப்பதால் வாயுத் தொல்லை வராது.

 

 

பிரெட் பக்கோடா

தேவையானவை: பிரெட் - 10 துண்டுகள், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டின் ஓரத்தை கட் செய்து நீக்கவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு  ஆகியவற்றை பிரெட்டுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்ததை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:  சட்னி அல்லது சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

 

 

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 500 கிராம், துருவிய கேரட், துருவிய முள்ளங்கி - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்- ஒரு கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். முள்ளங்கி துருவல், கேரட் துருவல், வெங்காயத்தாள் எல்லாம் சேர்த்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: இதே முறையில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கோஸ் துருவல் போட்டும் தயாரிக்கலாம். புதினா, கொத்தமல்லி நறுக்கிப் போட்டும் தயாரிக்கலாம்.

 

 

முருங்கைக்கீரைப் பொரியல்

தேவையானவை: ஆய்ந்து எடுத்த முருங்கைக்கீரை - 250 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் - ஒன்று, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்கீரையைப் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, வெந்த கீரையை பிழிந்து போட்டு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: முருங்கைக்கீரையில் அடை, வடை, கூட்டு என்று பல விதமாக தயாரிக்கலாம்.

 

 

கார்ன் ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், சோளம் - 2, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து அரைக்கவும். சோளத்தை உரித்து முத்துக்களை எடுத்து தனியாக அரைத்து, மாவுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை உற்றி தோசைகளாக வார்த்து,  இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.

குறிப்பு: சோளம் கிடைக்கும் சமயத்தில் வித்தியாசமான இந்த ஊத்தப்பம் தயாரித்து சாப்பிடலாம்.

 

 

நோன்பு அடை

தேவையானவை: அரிசி - 250 கிராம், சிவப்பு காராமணி- 50 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள், தேங்காய் (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு.  

செய்முறை: அரிசியை ஊற வைத்து களைந்து ஒரு துணியில் பரவலாகப் போட்டு, ஈரம் உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்து, மாவு சல்லடையால் சலித்து, பொன்னிறமாக மாவை வறுக்கவும். ஒரு பங்கு மாவுக்கு ஒன்றரை பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு வெல்லத்தைக் கரைத்து வடிக்கட்டி, சூடாக்கி... கொதிக்கும்போது மாவைத் தூவி கிளற வேண்டும். காராமணியை வறுத்து ஊற வைத்து வேகவிடவும். கிளறிய மாவுடன் ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய தேங்காய், காராமணி சேர்த்துப் பிசைந்து வடை போல தட்டி, இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும்.

குறிப்பு: இதற்கு வெண்ணெய் சிறந்த காம்பினேஷன். இதே முறையில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து உப்பு அடையும் தயாரிக்கலாம்.

 

 

பப்பாளி கூட்டு

தேவையானவை: பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய்  - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய்  - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும் . பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை போட்டு கலந்து... கொதிக்க வைத்து இறக்கவும்.

 

 

மரவள்ளிக்கிழங்கு அடை

தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், மரவள்ளிக்கிழங்கு - ஒன்று, துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய் வற்றல் - மூன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகாய் வற்றல் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து களைந்து தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்று சேர்க்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி, கேரட் துருவியில் துருவி, மாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கறிவேப்பிலை நறுக்கிப் போடவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மரவள்ளிக்கிழங்கு அதிகமாக கிடைக்கும்போது வறுவல் தயாரித்து வைக்கலாம்.  வேக வைத்து வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம்.

 

சோனைக்கிழங்கு சாண்ட்விச்

தேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 2, மிளகாய் வற்றல் - 6, தனியா - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோனைக்கிழங்கை தோல் சீவி பிரெட் ஸ்லைஸ் வடிவத்தில் நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். சோம்பு, கசகசா, பூண்டு, மிளகாய் வற்றல், தனியா, வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைக்கவும். வேக வைத்த சேனைத் துண்டுகளின் இருபுறமும் அரைத்த மசாலாவை தடவி, நான்-ஸ்டிக் தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுத்து இறக்கவும்.

குறிப்பு: மசாலா வாசனையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

 

 

 

பரங்கிக்காய் காரக்குழம்பு

தேவையானவை: பரங்கிக்கீற்று - ஒன்று, புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து, புளியைக் கரைத்து விட்டு, தேவை யான உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கூடவே பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு நன்கு வெந்ததும் பெருங் காயத்தூள் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: விருப்பமான காய்களில் இதே முறையில் காரக்குழம்பு தயாரிக்கலாம்.

 

 

பூசணிக்காய் மோர் கூட்டு

தேவையானவை: பூசணிக் கீற்று - 2, தேங்காய் துருவல், தயிர் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூசணிக்காயை தோல் சீவி, பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து பூசணிக்காயுடன் சேர்க்கவும். பிறகு... தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, தயிர் விட்டு கலக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

 

 

மல்டி பருப்பு வடை

தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், துவரம்பருப்பு, உளுந்து - தலா ஒரு கப் (ஊற வைக்கவும்), மிளகாய் வற்றல் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக் கடலை, கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து... மிளகாய் வற்றல், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதே முறையில் சோளம், முளைவிட்ட பச்சைப் பயறு, மொச்சை போன்றவற்றை வைத்தும் தயாரிக்கலாம்.

 

 

வெங்காயத் துவையல்

தேவையானவை: சின்ன வெங்காயம் - 200 கிராம், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம்பருப்பு - 50 கிராம், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்து,  மிக்ஸியில் அரைக்கவும். சிறிது மசிந்ததும் புளி, உப்பு சேர்த்து அரைத்து, அதற்குப் பிறகு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடக்கூடாது.

குறிப்பு: இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் சிறந்த காம்பினேஷன்.

 

 

கலவைக் காய் சொதிகுழம்பு

தேவையானவை: கேரட், குடமிளகாய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் - தலா ஒன்று, அவரைக் காய் - 4, வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 100 மில்லி, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாய், கத்திரிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் ஓரளவு சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்து காய்களையும் வதக்கி உப்பு சேர்த்து, புளி கரைத்துவிட்டு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பால் விட்டுக் கலக்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: எல்லா காய்களும் மிச்சப்பட்டிருக்கும்போது இந்த குழம்பு தயாரிக்கலாம். தேங்காய்ப் பாலுக்கு பதில் தேங்காயை அரைத்து சேர்த்தும் கொதிக்கவிட்டு இறக்கலாம்.

 

 

 

சுண்டைக்காய் பொரியல்

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுண்டைக்காயை காம்பு ஆய்ந்து சிறிது நசுக்கி,  எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த சுண்டைக்காய், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: வீட்டுக்கு ஒரு சுண்டைச் செடி இருந்தால் போதும்... வற்றல் தயாரித்து வைக்கலாம். பொரியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமாக தயாரிக்கலாம்.

 

 

 

கார்ன்   காலிஃப்ளவர் சூப்

தேவையானவை: காலிஃப்ளவர் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், ஸ்வீட் கார்ன் (உதிர்த்தது) - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு  - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -  சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து, அதில் சோள மாவை  கரைத்து விட்டு... உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் கோஸ் , கேரட், பட்டாணியிலும் சூப் தயாரிக்கலாம்.

 

 

பரங்கிக்காய் ஓலன்

தேவையானவை: பாதி முற்றிய பரங்கிக்காய் - 2 கீற்று, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பரங்கிக்காயை வறுவலுக்கு நறுக்குவது போல நறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய பரங்கிக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

குறிப்பு: சிறிய பரங்கிக்காயில் (பரங்கிப் பிஞ்சு) அடை, பால் கூட்டு தயாரிக்கலாம். பாதி முற்றியதும் ஓலன் தயாரிக்கலாம். நன்கு முற்றியதும் அல்வா, பொரியல், சாம்பார் செய்யலாம்.

 

 

கோவைக்காய் துவட்டல்

தேவையானவை: கோவைக்காய்  - 250 கிராம், பெரிய வெங்காயம் - 2, மிளகாய்த்தூள்  - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த கோவைக்காயையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.

குறிப்பு: இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாதிக்கும் தொட்டு சாப்பிடலாம்.

 

 

வெந்தயக் கீரை பணியாரம்

தேவையானவை: வெந்தயக் கீரை - ஒரு கட்டு, இட்லி மாவு - 250 கிராம், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், எண்ணெய் - 100 மில்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காயத்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, பணியாரக் கல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு குச்சியால் திருப்பி, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன். வெந்தயக் கீரையில் சாம்பாரும் செய்யலாம்.

 

 

எள்ளு சாதம்

தேவையானவை: அரிசி - 250 கிராம், எள்ளு - 50 கிராம், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலை வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் இந்தப் பொடியை சேர்த்து எண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: இதற்கு தயிர் பச்சடி சிறந்த காம்பினேஷன். எள் எலும்புக்கு வலிமை தரும். எள் உருண்டையும் தயாரித்து சாப்பிடலாம்.

 

 

வேப்பம்பூ பச்சடி

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - ஒன்று, எண்ணெய்  - ஒரு டீஸ்பூன், வெல்லம் - 100 கிராம், உப்பு - சிறிதளவு

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து... புளிக் கரைசல், உப்பு சேர்த்து, வெல்லம் போட்டு கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடன் வேப்பம்பூவை வறுத்துப் போட்டு இறக்கவும்.

குறிப்பு: வேப்பம்பூ சீஸனில் வேப்பம்பூவை சேகரித்து வைத்தால்... பொடி, துவையல், ரசம் என்று பலவிதமாக பயன்படுத்தலாம். பித்தத்துக்கு மிகவும் நல்லது.

 

 

கேப்சிகம் ரைஸ்

தேவையானவை: அரிசி - 250 கிராம், குடமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 2, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். குடமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி சாதத்துடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்துமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: குடமிளகாயுடன் பேபி கார்ன், புதினா சேர்த்தும் தயாரிக்கலாம்.

Sunday, March 25, 2012

HAS WATER ENTERED MY SHIP?

HAS WATER ENTERED MY SHIP?

 

In 1923, eight of the wealthiest people in the world met. Their combined wealth, it is estimated, exceeded the wealth of the government of the United States at that time.

These men certainly knew how to make a living and accumulate wealth.

But let's examine what happened to them 25 years later.

1.      President of the largest steel company, Charies Schwab, lived on borrowed capital for five years before he died bankrupt.

2.      President of the largest gas company, Howard Hubson, went insane.

3.      One of the greatest commodity traders, Arthur Cutton, died insolvent.

4.      President of the New York Stock Exchange, Richard Whitney, was sent to jail.

5.      A member of the President's Cabinet, Albert Fall, was pardoned from jail to go home and die in peace.

6.      The greatest "bear" on Wall Street, Jessie Livermore, committed suicide.

7.      President of the world's greatest monopoly, Ivar Krueger, committed suicide.

8.      President of the Bank of International Settlement, Leon Fraser, Committed Suicide.

What they forgot was how to make life! Money in itself is not evil!

Money provides food for the hungry, medicine for the sick, clothes for the needy; Money is only a medium of exchange.

We need two kinds of education.

.....a) One that teaches us how to make a living and
 

......b) one that teaches us how to live.
 
There are people who are so engrossed in their professional life that they neglect their family, health and social responsibilities.

If asked why they do this they would reply that they were doing it for their family.

Our kids are sleeping when we leave home.

They are sleeping when we come home.

Twenty years later, we'll turn back, and they'll all be gone.

Without water, a ship cannot move.

The ship needs water, but if the water gets into the ship, the ship will face problems. What was once a means of living for the ship will now become a means of destruction.
 
Similarly we live in time where earning is necessity but let not the earning enter our hearts, for what was once a means of living will become a means of destruction.

So take a moment and ask yourself……….Has water entered my ship?

வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்த்து வாங்க... பக்குவமாகப் பராமரிக்க...


வரவேற்பறையில் ஒரு மூங்கில் சோஃபா செட், பெட்ரூமில் நேர்த்தியான படுக்கை விரிப்புடன் இருக்கும் கட்டில், சமையலறையில் வரிசையில் அமர்ந்திருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பாத்ரூமில் பேஸ்ட், பிரஷ்களை சுமக்கும் 'மிக்கி' வடிவ குட்டி பிளாஸ்டிக் கூடை..!

 

ஆம்... இப்படி நம் வீட்டுப் பொருட்கள்தான் நம் பொருளாதார நிலைமை, ஒழுங்கு, ரசனை, விருப்பங்களை நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு தெரிவிக்கிற கண்ணாடி! அத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே! உங்கள் வீட்டுப் பொருட்களின் அழகும் ஆயுளும் அதிகரிக்கட்டும்!

 

'ஹவுஸ் கீப்பிங்'-ல் குட் வாங்க..! வீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பரமாரிப்புதான் நம் சுத்தத்தையும், அழகியலையும் சொல்லாமல் சொல்லும். அதற்கு...

 

1. வீட்டை அலங்கரிக்கும் 'ஷோ கேஸ்' பொம்மைகள் அல்லது பொருட்களை அடிக்கடி துடைத்துச் சுத்தப்படுத்தினால், அவை எப்போதும் கண்கவர் அழகில் இருக்கும்.

 

2. ஃப்ளவர்வாஸ் பூக்களை மாதம் ஒருமுறை கொஞ்சம் சோப்புத் தூள் கலந்த தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசினால், புதுப்பொலிவுடன் இருக்கும்.

 

3. திரைச்சீலைகள், குஷன் கவர், சோஃபா கவர், பெட் ஸ்ப்ரெட்... இவற்றை மாதம் இருமுறையாவது மாற்றுவது வீட்டுக்கு அழகை மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.

 

4. வீடு துடைக்கும் 'மாப்'பை பயன்படுத்திய பிறகு, நன்கு அலசி வெயிலில் காய வைத்தால் ஈரவாடை வராது; நீண்ட நாள் உழைக்கும். 'மாப்' தேய்ந்துவிட்டால், அதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம், ஸ்டிக் மாற்றத் தேவையில்லை.

 

5. துடைப்பத்தை படுக்க வைக்காமல், அடிப்பாகம் தரையிலும் நுனிப்பகுதி மேல்நோக்கியும் இருக்குமாறு வைத்தால், அது வளையாமல் எப்போதும் நேராக இருந்து சரியாக சுத்தப்படுத்தும். பாத்ரூம்களில் பயன்படுத்தும் தென்னை துடைப்பத்தை பாத்ரூமிலேயே வைக்காமல் அவ்வப்போது வெயிலில் வைத்தால், ஈரத்தினால் பூஞ்சான் தாக்காது; வாடையும் வராது.

சமையலறை பொருட்கள் பராமரிப்பு...

 

6. ஒவ்வொரு முறை மளிகைப் பொருட்கள் தீரும்போது, அது இருந்த டப்பாக்களில் உடனே மீண்டும் பொருட்களை நிரப்பாமல், அவற்றையெல்லாம் கழுவிச் சுத்தப்படுத்தி காய வைத்து, பின் கொட்டி வைப்பது நலம். எண்ணெய் கன்டெய்னர்களை மாதம் இருமுறை தேய்த்தால், எண்ணெய்ப் பிசுக்கு சேராது.

 

7. பாத்திரம் கவிழ்த்து வைக்க எவர்சில்வர் கூடையைப் பயன்படுத்துபவர்கள், கூடையின் அடியில் ஒரு துணியை விரித்து, பின்பு பாத்திரத்தைக் கவிழ்த்தால், கூடை துருப்பிடிக்காமல் நீண்ட நாள் வரும். அவ்வப்போது துணியை மாற்றினால் போதும்.

 

8. அரிவாள்மனை இப்போதெல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மெட்டீரியலில்தான் அதிகம் வருகிறது. இதனை வாங்கும்போது, முனையில் தேங்காய்த் துருவி இல்லாமல் வாங்குவது, நீண்டநாள் உழைக்க உதவும். காரணம்... தேங்காய் துருவும்போது, அந்த ஆட்டத்தால் ஸ்டாண்ட் உறுதி குலைந்துவிடும் என்பதுதான். தேங்காய் துருவியைத் தனியாகக்கூட வாங்கிக் கொள்ளலாம்.

 

சீப்பு, கண்ணாடியைப் பராமரிக்க...

 

9. அகலமான பற்கள் கொண்ட சீப்பு, நார்மலான சீப்பு, சிக்கெடுக்க, வகிடெடுக்க ஏதுவான 'டெயில் கோம்ப்' எனப்படும் பின்பக்கம் குச்சிபோல் நீண்ட சீப்பு, பேன் சீப்பு, ஆண்களுக்கான வட்ட சீப்பு, குழந்தைகளுக்கான 'சாஃப்ட் பிரஷ்' சீப்பு என்று அனைத்து ரகத்திலும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

 

10. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனித்தனி சீப்பைப் பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். விருந்தினர்களுக்கு என்று ஒரு சீப்பை ஒதுக்கிவிடுவது இன்னும் நலம், நாகரிகம்.

 

11. சீப்புகளை வாரம் ஒருமுறை சோப் நீரில் ஊறவைத்து, அதற்கென உள்ள பிரஷ்ஷில் சுத்தம் செய்துவிட்டால், எப்போதும் சீப்பும் தலையும் சுத்தமாக இருக்கும்.

 

12. வார்ட்ரோப் கண்ணாடி, பீரோ கண்ணாடி, நிலைக் கண்ணாடி என்று எதுவாக இருந்தாலும், அதன்மேல் டால்கம் பவுடரைத் தூவி, ஈரமில்லாத துணியால் துடைக்க, கிரிஸ்டல் கிளியராகும்.

 

'டாய்லெட் செட்'கள் பராமரிப்பு...

 

13. குளிக்கும் சோப்பை வைக்கும் டப்பா, சோப்பைவிட கொஞ்சம் அளவில் பெரியதாக இருந்தால்தான், எடுக்கவும் வைக்கவும் எளிதாக இருக்கும். சோப் வைக்கும் டப்பாக்களில் ஓட்டைகள் இருப்பதுடன், சற்று உயரமாகவும் இருந்தால்தான் நீர் வடிவது எளிதாக இருக்கும்.

 

14. துவைக்கும் சோப்பை அதற்கான வலைபோன்ற பையான 'மெஷ்'ஷில் போட்டுப் பயன்படுத்தலாம். இதனால் அது கைகளில் அலர்ஜியை உண்டாக்குவது தவிர்க்கப்படுவதுடன், சோப்பும் அதிகமாக கரையாது.

 

15. பல் துலுக்கும் பிரஷ்ஷை 3 மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். முழுக்கமுழுக்க தேய்ந்தபின்புதான் மாற்றுவேன் என அடம் பிடித்தால், விரைவில் பல்லையும் மாற்ற வேண்டி வரலாம். அதேபோல, பிரஷ், பேஸ்ட் வைக்கும் ஸ்டாண்ட்டையும் அவ்வப்போது வெந்நீரில் கழுவி வைக்கலாம்.

 

16. வீட்டில் குழந்தைகளுக்கு பிரஷ் வாங்கும்போது வெவ்வெறு நிறங்களில் வாங்கி விட்டால் குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிக்கத் திணற மாட்டார்கள். 'என் பிரஷ்ஷை அவ எடுத்துட்டா' என காலையிலேயே வீட்டில் கச்சேரி ஆரம்பமாவதையும் தடுக்கலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக 'பேபி பேஸ்ட்', அதிக மின்ட், காரம் இல்லாதது. குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.

 

17. பேஸ்ட்டை உபயோகிக்கும்போது, அடியிலிருந்து அழுத்திக் கொண்டு வந்தால் காற்றுப் புகுந்து அதன் தரம் குறையாது.

 

18. பித்த வெடிப்புக்கான 'ஃபுட் ஸ்க்ராப்', 'ப்ஃயூமிக் ஸ்டோன்', உடல் தேய்ப்பதற்கான 'பாடி மெஷ்'... இவற்றையெல்லாம் தேவையைப் பொறுத்து பாத்ரூமில் வாங்கி வைக்கலாம்.

 

பாத்திரங்கள் பத்திரம்!

 

மண்பாண்டங்களைப் புழங்கினார்கள் நம் பாட்டன், பூட்டன்கள். செம்பு, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர், காப்பர் கோட்டட் என்று பரிணமித்து, இப்போது பிளாக் மெட்டல் பாத்திரங்கள் வரை வந்துவிட்டோம் நாம். அந்தப் பாத்திரங்களை வாங்குவதற்கும் பராமரிப்பதற்குமான பக்குவங்கள் இங்கே...

 

19. எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்போது தக்கைபோல் இல்லாமல், நல்ல கனமான பாத்திரங்களாக பார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் சீக்கிரமே நெளிந்துவிடும். பாத்திரத்தின்மேல் போடப்பட்டிருக்கும் பாலீஷ், முழுமையாக எல்லா இடங்களிலும் சரியாக போடப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கினால், வீட்டுக்கு வந்தபின், 'அடக் கடவுளே... என்ன இது? இந்தப் பக்கம் கறுப்பா, மங்கலா இருக்கே' என்று புலம்ப வேண்டியிருக்காது.

 

20. எவர்சில்வர் பாத்திரங்களை சிலசமயம் பால் காய்ச்ச, உணவை சூடுபடுத்த என்று அவசரத்துக்காக அடுப்பில் வைக்கும்போது, உள்ளே கறை படிந்து கறுப்பாகலாம். அதனைப் போக்க, எலுமிச்சை சாறு கலந்த தண்ணீருடன் பாத்திரத்தை சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து, பின் தேய்த்தால் கறைகள் நீங்கும்.

 

21. செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் அதன் அடிப்பகுதி கனமாக இருக்கிறதா, வார்ப்பு, ஃபினிஷிங் சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்த்து வாங்குவது புத்திசாலித்தனம். இல்லை- யெனில், இடையில் வார்ப்பு விட்டுப்போய், கையைப் பதம் பார்க்கலாம்.

 

22. பித்தளைப் பாத்திரங்கள் தண்ணீர், காற்று அதிகம்பட்டுக் கறுத்துப் போய்விடும். அதனைப் போக்க எலுமிச்சை, புளி, புளிச்சக் கீரைத் தண்ணீர் போன்ற புளிப்புத்தன்மை கொண்ட பொருட்களால் துலக்கினால் பளபளக்கும். பித்தளைப் பாத்திரங்களை துலக்குவதற்கென சில பிரத்யேக பவுடர் வகைகளும் மார்கெட்டில் கிடைக்கின்றன.

 

23. இப்போதெல்லாம் 'பிளாக் மெட்டல் பாத்திரங்கள்' என்று கறுப்பு நிறத்தில் அழகழகான சமையல் பாத்திரங்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவையும், அலுமினியம்தான். ஆனால், வழக்கமான பாணியில் அல்லாமல் வேறு வகையில் அலுமினியத்தை உருக்கித் தயாரிக்கப்படும் பாத்திரங்கள். அழகான கிச்சன் லுக் விரும்பவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பராமரிப்பும் எளிதுதான்.

 

24. நான்-ஸ்டிக் பாத்திரங்கள் அடிப்பிடிக்காது என்பதுதான் அதன் ப்ளஸ்! இப்போது இதில் 'டிரிபிள் கோட்டட்' பாத்திரங்கள் வரை வந்துள்ளன. நீண்ட நாள் உழைப்புக்கு இவற்றை நம்பலாம்.

 

25. நான்-ஸ்டிக் பாத்திரங்களை... உப்பு, எண்ணெய், முட்டைப் பசை போன்றவற்றை தாங்குமா என்பதை உறுதிசெய்து வாங்கலாம். ஸ்க்ராட்ச் ப்ரூஃப் டெஸ்ட், சால்ட் டெஸ்ட், ஆயில் டெஸ்ட், எக் டெஸ்ட் போன்றவற்றின் முடிவுகளையும் சில நிறுவனங்கள் விளக்கக் கையேட்டில் கொடுத்திருப்பார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

26. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் தவா, கடாய், ஆப்பச் சட்டி, பேன், ஃப்ரைபேன் என இவற்றில் அதிக வகைகள் உள்ளன. இவற்றின் விலை அதிகம். எனவே, இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் வாங்கி அடுக்காமல், தேவையானதை மட்டும் வாங்குங்கள்.

 

27. நான்-ஸ்டிக் பாத்திரங்களை கரகரப்பான மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் ஸ்க்ரப் கொண்டு துலக்கினால், அதன் ஒரிஜினாலிட்டி போய்விடும். எனவே, ஸ்பான்ச் ஸ்க்ரப்களால் துலக்குவது நலம். கூடவே நான்-ஸ்டிக் பாத்திரங்களில் எவர்சில்வர் கரண்டிகளைவிட, மரக் கரண்டிகளை பயன்படுத்துவதே பரிந்துரைக்கத்தக்கது என்பது, நாம் அறிந்ததுதானே?!

 

28. சாதாரணப் பாத்திரங்களைவிட, காப்பர் பாட்டம் பொருத்தப்பட்டவை, நம்முடைய சமையலை விரைவுபடுத்தும். சீக்கிரமாகவே சூடு ஏறுவதுதான் காரணம். அடுப்பிலும் இருக்கட்டும் அக்கறை!

 

மண்ணெண்ணெய் அடுப்போ, கேஸ் ஸ்டவ்வோ... அதை ஒழுங்காக இயங்க வைப்பதற்கான 'எரிபொருள் டிப்ஸ்'கள் இங்கு...

 

29. மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் அடியில் அழுக்குப் படிந்து, ஸ்டவ் ஓட்டையாகலாம். அதைத் தவிர்க்க, மண்ணெண்ணெயை ஸ்டவ்வில் ஊற்றும் முன், அதை வடிகட்டி ஊற்றினால் நோ பிராப்ளம்.

 

30. ஸ்டவ்வை பற்ற வைப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் குச்சியால் மட்டும் அதை பற்ற வைப்பது, ஸ்டவ்வின் ஆயுள் காலத்தை அதிகரிக்கும். மாறாக, தீக்குச்சிகளைப் கொளுத்திப் போட்டு பற்றவைத்தால், அவை உள்ளே அடைத்துக்கொள்ளும்.

 

31. கண்டிப்பாக செய்யக்கூடாத விஷயம், ஸ்டவ்வை தண்ணீர் விட்டு அணைப்பது. அது திரியையும், ஸ்டவ்வின் மேற்பகுதியையும் சீக்கிரம் கெடுத்துவிடும். பதிலாக, அணைப்பதற்காகவே கொடுக்கப்பட்டுள்ள மூடியைப் பயன்படுத்துங்கள். அதுதான் ஸ்டவ்வுக்கு பாதுகாப்பு.

 

32. கேஸ் ஸ்டவ்களில் இப்போது இரண்டு மேடைகள், நான்கு பர்னர்கள் உள்ள அடுப்புகள் வரை கிடைக்கின்றன. குடும்பத்தின் தேவையைப் பொறுத்து வாங்கிக் கொள்ளலாம்.

 

33. பெரும்பாலும் உள்நாட்டுத் தயாரிப்பு ஸ்டவ்களை பயன்படுத்துவது நலம். இம்ப்போர்டட் ஸ்டவ்களில் நாம் உபயோகிப்பதுபோல டியூப் இணைப்பு பக்கவாட்டில் இல்லாமல், நாம் பார்க்கவே முடியாதபடி கீழே இருக்கும். இதற்குப் பழக்கபடாத நாம், அதைக் கையாள்வதில் திணறும்போது எரிவாயு கசியும் ஆபத்து அதிகம்.

 

34. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு கேஸை கடத்தும் டியூப், உறுதியான ரப்பர் டியூப்பாக இருந்தால் எலிக்கடி, லீக்கேஜ் பிரச்னைகள் இருக்காது. தரமான பலவகை டியூப்களும் தற்போது கிடைக்கின்றன.

 

35. வீட்டுக்கு வெளியே சிலிண்டரை வைத்து, அடுப்புக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் சிலர். 'கசிந்தாலும் வீட்டுக்குள் எந்தப் பிரச்னையும் இருக்காது' என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், சிலிண்டர் மாற்றும்போது ஒயர் இழுக்கப்படுவதால் வீட்டின் உள்ளே ஸ்டவ்வில் பொருத்தப்பட்டிருக்கும் ஒயரின் முனை லூஸாகி, வீட்டுக்குள்ளும் கேஸ் லீக்காகலாம். உஷார்!

 

36. கேஸ் ஸ்டவ்வை சுத்தப்படுத்துவதற்கு தினமும் அதை சோப் தண்ணீரால் அலச வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அதை ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே போதுமானது. சமையலின்போது அதன்மேல் பாலோ, வடிநீரோ பட்டுவிட்டால் உடனே துடைத்து விட, ஈரம் தங்காது. இதனால் பர்னர், ஸ்டாண்ட் துரு பிடிக்காது.

 

37. ஸ்டவ் ஸ்டாண்டுகளை அவ்வப்போது தேங்காய் எண்ணெய் வைத்துத் துடைத்தால், துரு தூர நிற்கும்.

 

38. 'இண்டக்ஷன் ஸ்டவ்' எனப்படும் மின்சார ஸ்டவ் தற்போது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மின்சாரம் அதிக அளவு செலவாவது இல்லை. சாதாரண எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் காப்பர் பாட்டம் பாத்திரங்களைத் தவிர்ப்பது நல்லது.

 

அத்தியாவசியம்... இவை அத்தியாவசியம்! 'இதெல்லாம்கூட இல்லாமலா இத்தன வருஷம் சம்சாரம் பண்ற..?' - இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளாமல் இருக்க, ஆடம்பரப் பொருட்கள் இல்லாவிட்டாலும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்கள்... உங்கள் வீட்டிலும்.

 

39. பிரம்மச்சாரி என்றாலும், பெருங்குடும்பம் என்றாலும் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு இட்லி பாத்திரம், ஒரு தோசைக்கல், ஒரு சப்பாத்திக்கல் ஆகியவை இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள். சிலர் தோசைக்கல்லிலேயே சப்பாத்தியும் சுடுவார்கள். இதனால் அடுத்து அதில் தோசை சுடும்போது, மாவு திரண்டு திரண்டு நின்று படுத்தி எடுக்கும். எனவே, சப்பாத்திக்கு என்று ஒரு தனி கல் வாங்கித்தான் வையுங்களேன்.

 

40. மிக்ஸியில் பருப்பு கடைந்தாலும், கீரை மசித்தாலும் அதன் ஒரிஜினல் சுவை கெட்டு விடும். சில நுண்சத்துக்களும் அழிந்துவிடும். எனவே, பருப்பு மத்து ஒன்று எப்போதும் இருக்கட்டும்.

 

41. என்னதான் மளிகைப் பொருட்களை கடைகளில் சுத்தப்படுத்தி, பாலித்தீன் பைகளில் அடைத்து விற்றாலும் தூசு, தும்பு இருந்தால் புடைக்க ஒரு முறம் வேண்டாமா..? வேண்டும்!

 

42. 'கரன்ட் கட்' - இன்று தமிழக மக்களைப் படுத்தும் வார்த்தை. அவசரத்துக்கு ரசத்துக்கு பூண்டு நசுக்கக்கூட மிக்ஸியை எதிர்பார்த்திருந்தால், வேலைக்கு ஆகாது. எனவே, பெரிய அம்மிக் கல் வாங்கி வைக்க முடியாவிட்டாலும், சின்ன உரல் கல் ரொம்ப ரொம்ப அவசியம்.

 

43. எமர்ஜென்ஸி லைட் சேவை இந்தக் கோடை 'கரன்ட் கட்' காலத்தின் அவசியத் தேவை. கூடவே, எப்போதும் அதில் போதுமான சார்ஜ் ஏற்றி வைப்பதும் முக்கியம்.

 

எலெக்ட்ரானிக் பொருட்களின் அதிக ஆயுளுக்கு! இன்று வீட்டு உபயோகப் பொருட்களில் பதிக்குப்பாதி மின்சாரத்தை நம்பித்தான் இருக்கின்றன. அவற்றை வாங்கும்போதும், பராமரிக்கும் போதும் சில விஷயங்களில் கவனமாக இருந்துவிட்டால், காலத்துக்கும் குடைச்சல், எரிச்சல், துன்பம் இல்லை. அதற்காக...

 

44. மின்சாதனப் பொருட்களை வாங்கினால் நல்ல பிராண்டில், வாரண்டி மற்றும் எளிய சர்வீஸ் வசதிகளுடன் வாங்கவும். 'மின்சாரம் சேமிக்கப்படும்' என்ற உத்திரவாதம் இருந்தால் மிகவும் நல்லது.

 

45. அனைத்து மின்சாரப் பொருட்களுக்குமான மிகமுக்கியப் பாதுகாப்பு, மின் இணைப்பில் 'எர்த்' கனெக்ஷனைக் கட்டாயம் பயன்படுத்துவதும், சரியான ஸ்டெபிலைஸரை உபயோகப்- படுத்துவதுமே.

 

46. வீடு முழுவதும் நெருப்புப்பொறி வராத தரமான சுவிட்சுகளையே பயன்படுத்தலாம். அவை விலை அதிகமென்பதால் குறைந்தபட்சம் கிச்சனில் மட்டுமாவது பயன்படுத்தலாம்.

 

மிக்ஸி:

 

47. அதிகம் சத்தம் போடாத மிக்ஸிகளே நல்லது, 'சிறந்த விமானம் என்பது குறைந்த ஒலியுடன் வேகமாக பறக்கும்' என்ற அறிவியல் விதி, மிக்ஸிக்கும் பொருந்தும்.

 

48. அதிகமாக வைப்ரேட்டாகும் மிக்ஸிகள் நல்லவை அல்ல; அந்த வைப்ரேஷனே மிக்ஸியின் ஆயுளைக் குறைத்து விடும்.

 

49. முன்பெல்லாம் மிக்ஸியின் நடுவே மோட்டாரைப் பொருத்தி இருப்பார்கள். இப்போது அடித்தளத்திலேயே மோட்டார் பொருத்தப்பட்ட வலுவான மிக்ஸிகளும் வந்துவிட்டன. ஆயினும், அந்த மிக்ஸியியை சரியாகப் பயன்படுத்துவதும், பராமரிப்பதும்தான் அதன் ஆயுளை அதிக்கப்படுத்தும்.

 

50. மிக்ஸியைக் கழுவினால், மோட்டாருக்குள் தண்ணீர் புகுந்து பழுதாகும். எனவே, ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே போதும். அதேபோல, சரியான பிளேடுகளைப் பயன்படுத்துவதும் முக்கியம்.

 

கிரைண்டர்:

 

51. கிரைண்டர் வாங்கும்போது, குடும்பம் பெரியதாக இருந்து அதிக மாவு அரைக்க வேண்டும் என்றால் மட்டும், பழைய ஒற்றைக்கல் கிரண்டரை வாங்கவும். 'டேபிள் டாப்' கிரைண்டர்களே இப்போதைய குறுகலான சமையல் கட்டுகளுக்கு நல்லது, அதனைக் கழுவிப் பராமரிப்பதும் எளிது.

 

52. கிரைண்டர் வாங்கும்போது அதன் ஆயுளையும் அதிக வேலைத்திறனையும் தீர்மானிக்கும் R.P.M. எனப்படும் அதன் சுற்றும் திறன் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பொதுவாக 960 R.P.M-ல் ஆரம்பித்து 1,350 R.M.P. வரையுள்ள கிரைண்டர்கள் மார்கெட்டில் உள்ளன.

 

53. கல்லின் இயக்கம் கியர் டைப்பா, பெல்ட் டைப்பா என்பதும் முக்கியம். பெல்ட் டைப்பைவிட, கியர் டைப் சிறந்தது. காரணம், பெல்ட் டைப்பில் அரிசியைப் போட்டுவிட்டு ஆன் செய்தால், கல் நகராது. ஓடும்போதுதான் போட வேண்டும். கியர் டைப்... லோ வோல்டேஜிலும் நன்றாக உழைக்கும்.

 

54. பழைய மாடல்களில் கிரைண்டரின் கீழே வடியும் நீர், நேராக மோட்டாருக்கு சென்று மோட்டார் பழுதாவது நடக்கும். இப்போது மோட்டாருக்கு போகாமல் கீழே வடியும்படி 'டிரைனேஜ்' எனப்படும் வடிகால் அமைப்புகளுடன் கிரைண்டர்கள் வருகின்றன. பார்த்து வாங்கவும்.

 

55. மாவு அரைத்த உடனேயே கிரைண்டரை கழுவிவைப்பதும், மோட்டாரின் திறனுக்கேற்ற அளவில் மாவு அரைப்பதும், கல்லைப் பொருத்தும்போதும் கவனமாக இருப்பதும் கிரைண்டரின் வாழ்நாளை அதிகரிக்கும்.

 

எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள்:

 

56. 'குக்கர் வெடிப்பு' போன்ற பிரச்னைகளை இது தவிர்க்கும். ஆட்டோமேடிக்காக இயங்கும் இதில் அரிசியைப் போடுவது மட்டுமே உங்கள் வேலையாக இருக்கும். வெந்தபின் அதுவே ஆஃப் ஆகிக்கொள்ளும். சில வகைகளில் டைமர்கூட உண்டு. தேவைக்கு ஏற்ப செட் செய்து கொள்ளலாம். கியாரண்டி, சர்வீஸ் போன்றவற்றுடன் 'தரச்சான்று' இருக்கிறதா என்பதையும் கவனித்து வாங்கவும்.

 

ஃபேன்கள்:

 

57. இப்போது 'டேபிள் ஃபேன்'கள் குறைந்துவிட்டன. இடுப்புயர ஃபேன்களையும், சீலிங் ஃபேன்களையும்தான் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். சுற்றிலும் காற்று இருந்து, அதனை ஒரே இடத்தில் குவிக்க வேண்டுமென்றால் இடுப்புயர ஃபேன்கள் பலன் தரும். ஆனால், காற்றை வெளியே இருந்து இழுத்து தர சீலிங் ஃபேன்களே சிறந்தவை.

 

58. சீலிங் ஃபேன்களை பொதுவான அளவில் வாங்காமல், அறையின் அளவுக்கு ஏற்ற ஃபேனை வாங்கினால்தான் நல்ல காற்றோட்டம் தரும்.

 

59. சிறிய அறையாக இருந்தாலும், பெரிய பிளேடுகளுடன் கூடிய சீலிங் ஃபேன் இருந்தால் நிறைய காற்று வரும் என்று சிலர் நினைப்பார்கள். இது தவறு. சிறிய அறையில் பெரிய பிளேடுகளுடன் கூடிய ஃபேன்கள், சுற்றுவதற்கே சிரமப்படும். எனவே, சிறிய பிளேடுகள்தான் பொருத்தமாக இருக்கும்.

 

60. சீலிங் ஃபேன்களை சரியாகப் பொருத்தவும். சுற்ற ஆரம்பித்த உடனேயே 'படக் படக்' என்று சத்தம் வந்தால், சரியாக மாட்டப்படவில்லை என்று அர்த்தம். சரியாக மாட்டப்படாத ஃபேன்கள் பழுதாகும் வாய்ப்புகள் அதிகம்.

 

61. ஃபேனின் விசிறிகளை அடிக்கடி நன்றாகத் துடைக்கவும். தண்ணீர் தொட்டு துடைத்தால் பெயின்ட் பூத்துப் போய்விடும் என்பதால் எண்ணெய் தொட்டுத் துடைக்கவும்.

 

CFC (Compact Fluorescent Lamp) பல்புகள்:

 

62. சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு தராத... மின்சார சிக்கனத்துக்கு மிகவும் ஏற்ற பல்புகள் இவை. நல்ல ஒளியையும் தருகின்றன. மின்சார சிக்கனத்தின் பலனை உணர வீட்டில் ஒரு பல்பை மட்டும் CFC பல்பாக மாற்றினால் முடியாது. எல்லாவற்றையும் மாற்றினால்தான் பலன் தெரியும். சுற்றுச்சூழலின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடாக ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு பல்பையாவது இப்படி மாற்றலாம்.

 

63. CFC பல்புகளின் ஒளி, குண்டு பல்புகளைப்போல எரிச்சலை உண்டாக்குவதில்லை. எனவே, வெயில் காலங்களில் குண்டு பல்புகளைப் பயன்படுத்தாமல் இவற்றைப் பயன் படுத்தும்போது சூழலின் வெப்பம் பெரிதும் குறையும்.

 

அயர்ன் பாக்ஸ்:

 

64. மின்சார சேமிப்பும், அதிக வெப்பத்தில் ஆட்டோமேட்டிக்காக நிற்கும் அமைப்பும் உள்ள சராசரி அயர்ன் பாக்ஸ்கள் வீட்டு உபயோகத்துக்குப் போதுமானவை.

 

65. அயர்ன் பாக்ஸின் ஒயர் அடிக்கடி பிரிந்து பிரச்னை கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்கும் வகையில் அயர்ன்பாக்ஸுடன் ஒயர் இணையும் இடத்தில், பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டவையும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதே சிறப்பு... பாதுகாப்பும்கூட!

 

66. அயர்ன் பண்ணும்போது தண்ணீரை பயன்படுத்தினால், போர் தண்ணீரை தவிர்ப்பது நலம். நீரில் உப்புத்தன்மை இருந்தால், அயன்பாக்ஸில் துரு ஏறி, கொஞ்சம் கொஞ்சமாக பாக்ஸை பதம் பார்த்துவிடும்.

 

டி.வி:

 

67. சேனல் புரோகிராம்ஸ், டி.வி.டி., சி.டி., என்று எந்தப் பயன்பாட்டுக்காக டி.வி. வாங்கப் போகிறோம் என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு டி.வி. செலக்ஷன் செய்வதே சரியாக இருக்கும்.

 

68. சேனல் புரொகிராம்ஸ் பார்க்கத்தான் டி.வி. தேவை என்றால், சாதாரண கலர் டி.வி-க்களே போதும்.

 

69. எப்போதாவது டி.வி.டி-யில் படமும் பார்ப்போம் என்றால், சாதாரண கலர் டி.வி. மற்றும் எல்.சி.டி. டி.வி வாங்கலாம்.

 

70. நல்ல பிரின்ட்டில் உள்ள டி.வி.டி-களையே பார்க்க விரும்புபவர்கள், L.C.D., ஹெச்.டி. (HD-High Definition) ரக டி.வி-க்களை வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.

 

71. அட்வான்ஸான டி.வி-களை வாங்க நினைப்போருக்கு L.C.D. டி.வி-க்கள் சரியான தேர்வு. இவை ஹெச்.டி. டி.வி-க்களைவிட விலை குறைவு.

 

72. எல்.சி.டி. டி.வி-களில் மானிடர் திரைமீது கவனமாக இருங்கள். பழைய கலர் டிவி-க்களை போல இவற்றின் மானிடர்களுக்கு நீண்ட கியாரண்டி கிடையாது. பழுதானால் சரிசெய்து ஆயுளை நீட்டிப்பதும் கடினம். அப்படியே மாற்ற வேண்டியதுதான்.

 

73. இப்போது நேரடியாகவே USB Stick, Data Cable போன்றவற்றை உபயோகிக்கக் கூடிய டி.வி-க்களும் வந்துவிட்டன. விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம். இவற்றில் டி.வி.டி. பிளேயர் இல்லாமலேயே எம்பி-3 பாடல்களைக் கேட்கலாம்.

 

74. டி.வி. விற்பனையில் இன்னும் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. எதுவாக இருந்தாலும் தேவையில்லாமல், அதன் பயன்பாடு தெரியாமல் வாங்கும்போது பணம்தான் வீணாகும்! எனவே, பயன்பாட்டை முடிவு செய்துவிட்டு, டி.வி-யை தேடுவதே சிறந்தது.

 

வாக்குவம் கிளீனர்:

 

75. சோஃபா வாங்குபவர்கள் கூடவே வாக்குவம் கிளீனரையும் வாங்குவது நலம். ஏனென்றால் சோபாவின் அழுக்குகளை முழுமையாக நீக்க, வாக்குவம் கிளீனரால் மட்டுமே முடியும்.

 

76. வாக்குவம் கிளீனர்கள் விளையாடத் தூண்டும் அமைப்பு உடையவை என்பதால், உபயோகத்துக்குப் பின்பு குழந்தைகளிடமிருந்து மறைத்து வைப்பது நலம்.

 

77. வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த உடனேயே வாக்குவம் கிளீனரையும் சுத்தம் செய்யவும். வீட்டுக்கு வெளியே இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 

வாஷிங்மெஷின்:

 

78. பொதுவாக 'எக்ஸ்டென்டட் வாரண்டி' உள்ள வாஷிங்மெஷினை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான முடிவு.

 

79. உப்பு நீர் பகுதியில் உள்ளவர்கள் 'இன்பில்ட் ஃபில்டர்' உள்ள வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுக்கவும்.

 

80. ஏற்கெனவே வாஷிங்மெஷின் வைத்துள்ளவர்கள், உப்புநீர் உள்ள பகுதிகளுக்கு வீடு மாறினால் ஃபில்டரைப் பொருத்தவும். அளவான துணி, சரியான வாஷிங்பவுடர்... இவையே வாஷிங்மெஷினின் ஆயுளை அதிகரிக்கும்.

 

ஃப்ரிட்ஜ்:

 

81. தேவைக்கு சரியான அளவில் ஃப்ரிட்ஜ் வாங்கவும். தரமான பிராண்டும் சர்வீஸும் முக்கியம். மின்சேமிப்பு உத்தரவாதம் இருந்தால் இன்னும் நல்லது.

 

82. ஃப்ரிட்ஜில் 'இன்ஸ்டன்ட் கூலிங்' போன்ற பல நவீன வசதிகள் இப்போது வந்துள்ளன. ஆனாலும் தேவையில்லாமல் அவற்றை உபயோகித்து மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வேண்டாம்.

 

83. நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் கதவைத் திறந்தே வைக்கக்கூடாது. திறக்கும் முன்பே எதை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவுசெய்து, உடனே திறந்து மூடுவது நலம். குட்டீஸ் இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜை லாக் செய்துவிடுவது நலம்.

 

84. ஃப்ரிட்ஜை கட்டாயம் சமையல் அறையில் வைக்கக் கூடாது! எரிவாயு கசிந்தால், ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயுடன் சேர்ந்து வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும். இது ஆபத்தை வரவழைக்கும்.

 

85. ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்தால் அதை வெளியேற்ற, 'டீ-ஃப்ராஸ்ட்' பட்டனை உபயோகிப்பதே சரியான வழி. டீ-ஃப்ராஸ்ட் பட்டன் வேலை செய்யவில்லை என்றால், அதை சர்வீஸ் செய்ய வேண்டுமே தவிர, குச்சி, கரண்டியை வைத்து ஃப்ரீஸரில் குத்தினால் அதற்குள் செல்லும் கனெக்ஷன் பைப்புகள் வெடித்து, ஆபத்தை விளைவுக்கும் ஜாக்கிரதை.

 

ஃபர்னிச்சர் செலக்ஷன் மற்றும் புரொடெக்ஷன்! வீட்டுக்கு ஆசை ஆசையாக ஃபர்னிச்சர்களை வாங்கிப் போடும்போது, இந்த டிப்ஸ்கள் நினைவில் இருக்கட்டும்!

 

சோஃபாக்கள்:

 

86. லெதர் சோஃபாக்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் தன்மையுடைவை என்பதால், ஏ.சி. ஹால்களில் இதைப் பயன்படுத்தலாம்.

 

87. லெதர் சோஃபாக்களில் படுத்துத் தூங்குவது நல்லதல்ல. சூடு நம் உடம்புக்கு ஏறி, வியர்த்து சோஃபா நனைவது மட்டுமல்லாமல், உபயமாக இடுப்பு வலியும் கிடைக்கும்.

 

88. அழகுக்காக ஆசைப்பட்டு, தரையோடு ஒட்டியுள்ள சோஃபாக்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். காரணம்... அதன் அடியில் சுத்தம் செய்வது கடினம்.

 

89. அறைக்கு ஏற்ற அளவில் சோஃபாக்களைத் தேர்ந்தெடுத்தால்... அது அலங்காரம். இல்லையென்றால் அது அவஸ்தை. நம் சின்ன ஹாலுக்கு, பிரமாண்ட சோஃபாக்கள் பொருந்தாது தானே! கூடவே, மூன்று பேருக்கான மர சோஃபா அடைக்கும் இடத்தைவிட, ஒன்றரை மடங்கு அதிக இடத்தை அதே கொள்ளளவுள்ள லெதர் சோஃபா அடைத்துக் கொள்ளும் என்பதையும் அதை வாங்கும் முன் ஒருமுறை யோசியுங்கள்.

 

கட்டில், மெத்தை:

 

90. சொந்த வீடுகளில் உள்ளவர்கள், நிரந்தரமாக பொருத்தக்கூடிய வலிமையான கட்டில்களை வாங்கலாம். வாடகை வீடுகளில் உள்ளவர்கள், பாகம் பாகமாக கழற்றி மாட்டவல்ல கட்டிலை வாங்கலாம்.

 

91. 'சோஃபா கம் பெட்' போன்றவற்றை வாங்குவதைவிட, தனி சோஃபா, தனி கட்டிலே சிறப்பானது. 'மல்டி யூஸ்' எனும்போது அவை பழுதாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதோடு மெத்தையைப் போல உடலோடு உறவாட சோஃபாக்களின் பஞ்சுகளால் முடியாது.

 

92. குழந்தைகள் உள்ள வீடுகளில் உயரம் குறைவான கட்டில்களையே வாங்குங்கள். ஏறவும் எளிது, விழுந்தால் அடிபடுவது பற்றிய பயமும் குறைவு. குழந்தைகளுக்காக தடுப்பு வரம்புகள் அமைக்கப்பட்ட கட்டில்களும் உள்ளன. இவை பாதுகாப்பானவை. ஆனால், விலை அதிகம்.

 

 93. கட்டிலுக்கு அதிக செலவு செய்துவிட்டு, மெத்தையில் கோட்டை விட்டு விடாதீர்கள். தவறான மெத்தையில் படுப்பதைவிட தரையில் படுப்பதே மேல்! உங்களின் உடல் அமைப்புக்கும், உடல் வெப்ப நிலைக்கும் ஏற்ற மெத்தைகளையே வாங்குங்கள். அதன் உள்ளே உள்ள பஞ்சு, நார், ஃபோம், துணி... இவற்றில் உங்களுக்குச் சரியானது எது என்பதை அறிந்தபின்பே முடிவெடுங்கள். இடுப்பு வலி உள்ளவர்கள் இன்னும் அதிக கவனத்தோடு தேர்வுசெய்ய வேண்டும்.

 

புத்தக அலமாரி:

 

94. தினசரிகளையோ, வார, மாத இதழ்களையோ மட்டும் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல டீப்பாயே போதும். ஓரளவுக்கு அதிக புத்தகங்களை வைத்திருப்பவர்கள், ஷோகேஸில் பொருந்தும் படியாகவோ, வார்ட்ரோபின் ஒரு அங்கமாகவோ புத்தகஅலமாரிகளை திட்டமிட்டு பொருத்தலாம்.

 

பீரோக்கள்:

 

95. நம்பிக்கையான பிராண்டுகள் மிக அவசியம். அழகும் பாதுகாப்பும் முதலில் உறுதி செய்யப்பட வேண்டும். லொடலொட கண்ணாடி, உடையும் கைப்பிடி போன்றவற்றை செக் செய்து வாங்குங்கள். 

 

96. ஸ்டீல், மர பீரோக்களுடன் பிரித்து கோக்கக்கூடிய ஜிப் வைத்த 'கவர்' பீரோக்களையும் பயன்படுத்தலாம்.

 

97. ஏ.சி. அறைகளில் இரும்பு பீரோக்கள் வைப்பதைத் தவிர்க்கலாம். அவை அறை குளிர்ச்சியாவதைத் தள்ளிப்போடும். அங்கே, மர பீரோவே உகந்தது.

 

 

புதுசு இது புதுசு! மார்க்கெட்டில் நித்தமும் புதுப்புது வீட்டு உபயோகப் பொருட்கள் தினம் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில உங்கள் அறிமுகத்துக்கு...

 

98. ஹேண்டி சாப்பர்:காய்கறிகளை நறுக்க உதவும் கருவி இது. பார்க்க மிக்ஸியைப்போல இருந்தாலும் எடை குறைவானது. தயிர் கடைய, முட்டைகளைக் கலக்கவும்கூட இவற்றை உபயோகப்படுத்தலாம்.

 

99. ட்விஸ்டிங் சாப்பர்: நாலு பேர் கொண்ட வீட்டின் சமையலுக்குத் தேவையான பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை நறுக்க இது பயனுள்ளதாக இருக்கும். கையால் இதன் மூடியைக் சுழற்றுவதன் மூலமாக சுலபமாக நறுக்கலாம். வெங்காயம் நறுக்கும்போது கண்ணீரைத் தடுக்க உதவும். ஆனால், அதிக சமையலுக்கு உகந்தது அல்ல.

 

100. நூடுல்ஸ் பாத்திரங்கள்: சாதரண கரண்டிகளால் நூடுல்ஸைக் கிண்டுவது கடினம். ஆனால் இந்த பிளவுள்ள கரண்டிகள் நூடுல்ஸ் கிண்டுவதை எளிதாக்குகின்றன. அதே போல நூடுல்ஸை தட்டுகளில் சாப்பிடுவது எளிதல்ல. கின்னங்களில் சாப்பிடுவது கொஞ்சம் எளிதாக இருக்கும். லாவகமாக நூடுல்ஸை சாப்பிடவென்றே நடுவே பள்ளமாக உள்ள நூடுல்ஸ் தட்டுகள் வந்துள்ளன. பள்ளத்தில் நூடுல்ஸை அமிழ்த்தினால் அள்ள எளிதாக இருக்கும்.