Sunday, May 29, 2011

முதலீட்டுத் திட்டங்கள் தயார்..! - வரி சேமிக்க ரெடியா?


உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்பார்கள் அனுபவசாலிகள். மாதச் சம்பளக்காரர்களின் முதல் செலவு, வரி சேமிப்புக்கான முதலீடாக இருக்கட்டும் என்பார்கள் நிதி ஆலோசகர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வரியை சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மவர்களுக்கு வருவது ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான். வாங்குகிற சம்பளத்தில் பாதியை வரி சேமிக்கக் கொடுத்துவிட்டு, சண்டை சச்சரவுகளுடன் நாளைக் கடத்துவதைவிட இன்றே, இப்போதே திட்டமிட்டால் கடைசிநேர டென்ஷனும் இருக்காது. நல்ல லாபம் தரும் திட்டத்திலும் முதலீடு செய்து அதிக லாபத்தையும் சம்பாதிக்க முடியும்.

வரி சேமிப்புக்கான முதலீடு செய்வதற்குமுன் முக்கியமாக இரண்டு விஷயங்களை ஒருவர் செய்தாக வேண்டும். அதில், முதலில் வருவது ஆயுள் காப்பீடு பாலிசி. இதுநாள் வரை நீங்கள் ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்த தில்லையா? முதல் காரியமாக அதை எடுங்கள். அதன் கவரேஜ் உங்கள் ஆண்டு சம்பளத்தைப்போல் பத்து மடங்குக்கு மேல் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் முடியும் பட்சத்தில் கூடுதல் பிரீமியம் கட்டி கவரேஜை அதிகரித்துக் கொள்ளுங்கள். அல்லது புது பாலிசியை எடுங்கள். குறைந்த செலவில் அதிக கவரேஜ் என்கிறபோது டேர்ம் பிளான் சரியானதாக இருக்கும்.

இரண்டாவது, மருத்துவச் செலவு என்பது ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கும் நிலையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியத்திலும் அவசியம். இந்த இரண்டு விஷயங் களையும் நீங்கள் ஏற்கெனவே செய்து முடித்தாகி விட்டது எனில், இனி அடுத்த விஷயங்களுக்குப் போகலாம்.

நடப்பு 2011-12 ஆண்டில் வரியை மிச்சப்படுத்த எந்தெந்த வழிகள் இருக்கின்றன என்ற விவரம் இதோ..!

பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்)

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% சம்பளத்தில் பிடிக்கப்படும். இந்த முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. இதில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு இப்போது 9.5% வட்டி கொடுக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இந்த வட்டி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக கொஞ்சம் பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்வது லாபமாக இருக்கும். முற்றிலும் பாதுகாப்பான முதலீடு இது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்றது.

பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்)

அமைப்பு சாராத தொழிலா ளர்களுக்காக கொண்டு வரப்பட்டி ருக்கும் இந்த திட்டத்தில் யார் முதலீடு செய்தாலும் வரிச்சலுகை கிடைக்கும். நிதி ஆண்டில் அதிகபட்சம் 70,000 ரூபாய் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு மட்டும்தான் வரிச்சலுகை பெற முடியும். இதுவும் முற்றிலும் பாது காப்பான முதலீடு. 15 ஆண்டுகாலத் திட்டமான இதில், வட்டி 8%தான் என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம். வருமானத்துக்கு வரி இல்லை.  


ஃபிக்ஸட் டெபாசிட்

ஐந்தாண்டு காலம், லாக் இன் பீரியட் கொண்ட வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து வரிச்சலுகை பெறலாம். வட்டி 8.5-9%. மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி. பி.பி.எஃப்.வுடன் ஒப்பிடும்போது, குறைந்த லாக் இன் பீரியட். ஆனால், வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்.எஸ்.சி)

தபால் அலுவலக சேமிப்பு பத்திரத்தில் செய்யப்படும் இந்த முதலீட்டுக்கு வரிச்சலுகை கிடைக்கும். ஆறு ஆண்டுகாலத் திட்டமான இதில் வட்டி 8% கிடைக்கும். பாதுகாப்பான முதலீடுதான். ஆனால், வட்டிக்கு வரி கட்ட வேண்டி வரும்.  

பென்ஷன் பிளான்

இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் பென்ஷன் திட்ட முதலீட் டுக்கு வரிச்சலுகைக் கிடைக்கும். புதிய பென்ஷன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கும் வரிச்சலுகை உண்டு. பென்ஷன் தொகைக்கு வரி உண்டு. பி.எஃப். திட்டத்தில் சேர முடியாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் இவற்றில் முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

ஐந்தாண்டுகள் 'லாக் இன் பீரியட்' கொண்ட மூத்த குடி மக்கள் சேமிப்புத் திட்டம் தபால் அலுவலங்களில் இருக்கிறது. இதில் 9% வட்டி கிடைக்கும். வருமானத் துக்கு வரி உண்டு.  

வரி சேமிப்பு ஃபண்ட்

அதிக வருமானம் வேண்டும், வருமானத்துக்கு வரி இருக்கக் கூடாது. ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை என்கிறவர்களுக்கு ஏற்ற வரிச் சேமிப்பு முதலீடாக 'பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்' (இ.எல்.எஸ்.எஸ்) திட்டம் இருக்கிறது. ஒரு நேரத்தில் குறைந்தது 500 ரூபாய்கூட இதில் முதலீடு செய்யலாம் மூன்றாண்டு கால 'லாக் இன் பீரியட்', டிவிடெண்ட் மற்றும் வருமானத் துக்கு வரி இல்லை. ஆனால், பங்குச் சந்தை சரியும் பட்சத்தில் நம் முதலீடு கொஞ்சம் குறையவும் வாய்ப்புண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

ஆயுள் காப்பீடு பாலிசிகள்

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரிச்சலுகை இருக்கிறது. டேர்ம் பிளான், எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளுக்கு கட்டப்படும் பிரீமியம் மற்றும் ஆதாயத்துக்கு வரி இல்லை.

வீட்டுக் கடன் அசல்

குடியிருப்பதற்காக வீட்டைக் கடனில் வாங்கியிருந்தால், திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இருக்கிறது. கணவன்/மனைவி சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடன் வாங்கி, தனித் தனியாக வரி விலக்கு கோரினால் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும்.

கல்விக் கட்டணம்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மகன்/மகளுக்கு பெற்றோர் கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச்சலுகை கோரலாம். இந்த சலுகை இரண்டு பிள்ளைகளுக்குதான் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் வருமானம் ஈட்டும் பட்சத்தில் இரு பிள்ளைகள் என்றால் ஒருவருக்கு தந்தையும், மற்றவருக்கு தாயும் வரிச்சலுகை பெறலாம்.

மேற்கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து நிதி ஆண்டில் 80 - சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்.

செலவுகளுக்கும் வரிச்சலுகை

நாம் செய்யும் பல முக்கிய செலவுகளுக்கும் வரிச்சலுகை கிடைக்கும்.

வீட்டு வாடகை - 10 (13 ஏ)

வசிக்கும் வீட்டுக்கு கொடுக்கும் வாடகைக்கு வரி தள்ளுபடி பெறமுடியும். வசிக்கும் நகரம், பணியாளர்பெறும் வீட்டு வாடகைப்படி ஆகியவற்றைப் பொறுத்து இந்த வரிக் கழிவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிட மிருந்து ரசீது பெறுவதோடு, அவரின் பான் எண்ணை குறிப்பிட வேண்டும்.

மெடிக்ளைம் - 80 டி

தனக்கு மற்றும் தன் குடும்பத்துக்கான மெடிக்ளைம் பிரீமியத்தில் ஆண்டுக்கு 15,000 ரூபாய் (மூத்த குடிமக்களுக்கு 20,000 ரூபாய்) வரை வரிச்சலுகை கிடைக்கும். பெற்றோருக்கு கட்டும் பிரீமியத்துக்கும் சேர்த்து பிள்ளைகள் வரிச்சலுகை பெற முடியும்.


கல்விக் கடன் - 80 இ

வரி கட்டுபவர் தன் உயர் கல்விக்காக வாங்கும்/வாங்கிய கடனில் வட்டியில் வரிச்சலுகை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு கட்டும் வட்டிக்கு மட்டுமே வரிச்சலுகை கிடைக்கும். திரும்பக் கட்டும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை.

வீட்டுக் கடன் வட்டி - 24 பிரிவு

திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் வட்டியில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 1.5 லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும். வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத் தில் முழுவட்டிக்கும் வரிச்சலுகை உண்டு. ஆனால், வாடகையை வருமானமாக காட்டியிருக்க வேண்டும்.

கவனிக்க..!

புதிய வருமான வரிச் சட்டம் 2012-13-ம் ஆண்டில் அமல் படுத்தப்பட இருக்கிறது. அதில், தற்போதுள்ள பல விஷயங்கள் மாற்றப்படுகிறது. குறிப்பாக, இன்ஷூரன்ஸ் பாலிசியில் டேர்ம் பிளான் மற்றும் ஆண்டு பிரீமியத்தைபோல் 20 மடங்கு கவரேஜ் இருக்கும் பாலிசிகளுக்கு தான் வரிச்சலுகை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு இப்போதே பாலிசி எடுப்பது அவசியம்.  

இதேபோல் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டுக்கு தற்போதைய நிலையில் புதிய வருமான வரிச் சட்டத்தில் வரிச்சலுகை இல்லை. எனவே, ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்பவர்கள், 2012 மார்ச் மாதம் முடியும்படி பார்த்துக் கொள்ளவது நல்லது.

சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு. இனி உடனடியாக களத்தில் இறங்க வேண்டியது நீங்கள்தான்!

'ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!' - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது. நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.

பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.

சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள். அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.

நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள்.  

அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.

''நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது. இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.

தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம். சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

Saturday, May 28, 2011

Scientists create synthetic brain cell

Scientists create synthetic brain cell

Washington, April 25 (IANS) Researchers have for the first time created a synthetic synapse circuit whose behaviour duplicates the function of a brain cell.

A synapse is a junction that permits a neuron to pass an electrical or chemical signal to another nerve or brain cell.

The team, led by professors Alice Parker and Chongwu Zhou at the University of Southern California Viterbi School of Engineering, combined circuit design with nanotechnology to address the complex problem of capturing brain function.

Carbon nanotubes are molecular carbon structures a million times smaller than a pencil point. These nanotubes can be used in electronic circuits, acting as metallic conductors or semiconductors, according to a California statement.

'This is a necessary first step in the process,' said Parker, who began looking at the possibility of developing a synthetic brain in 2006. 'We wanted to answer the question: Can you build a circuit that would act like a neuron? The next step is even more complex.'

'How can we build structures out of these circuits that mimic the function of the brain, which has 100 billion neurons and 10,000 synapses per neuron?'

Parker emphasized that the actual development of a synthetic brain, or even a functional brain area is decades away.

The human brain continually produces new neurons, makes new connections and adapts throughout life, and creating this process through analog circuits will be a monumental task, according to Parker.

She believes the breakthrough could have long-term implications for everything -- from developing prosthetic nanotechnology to heal traumatic brain injuries to developing intelligent, safe cars that would protect drivers in bold new ways.

These findings were presented at the IEEE/NIH 2011 Life Science Systems and Applications Workshop in the US.

 


திருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்

திருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்!

திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக  இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2,3 அல்லது 4-வது  பாதம் என்று இருந்தால், மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.

அதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3. ராட்சஸ கணம்.

தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.

3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.

5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் - குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி, மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம், சுவாதி - எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை - மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி - சிங்கம்.

இந்த மிருக அம்சங்களில், குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு - எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி - பாம்பு, மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம்மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.

8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு - சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு - கடகம், துலாம்; மிதுனத்துக்கு - கன்னி; கடகத்துக்கு - விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு - துலாம்; கன்னிக்கு - மிதுனம், மீனம்; துலாத்துக்கு - கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு - கடகம், கன்னி; தனுசுக்கு - மீனம்; மகரத்துக்கு -  மேஷம், கும்பம்; கும்பத்துக்கு - மேஷம், மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால், அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.

இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

10. நாடிப் பொருத்தம்: அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.