Monday, August 31, 2015

கூந்தல் பராமரிப்பு

குளித்த பின் தான் எண்ணெய் தடவ வேண்டும்! 


தலைமுடி தொடர்பான அடிப்படை சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும், 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, சென்னையைச் சேர்ந்த டிரைக்காலஜிஸ்ட் மருத்துவர் எஸ்.முருகசுந்தரம்: 


தினமும் எண்ணெய் தடவுவதால் முடி வளரும் என்பது, ஆண்டாண்டு காலமாக வளர்த்து விடப்பட்டிருக்கும் தவறான நம்பிக்கை. நம் மண்டை ஓட்டில் இயல்பிலேயே, எண்ணெய் சுரப்பி இருக்கிறது என்பதால், எண்ணெய் வைக்கத் தேவையில்லை.


எண்ணெய், இயற்கையான கண்டிஷனர் என்பதால், முடிக்கு மட்டும் பயன்படுத்தலாம். 


குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவி விட்டுக் குளிப்பது தவறு. குளித்த பின் தான் எண்ணெய் தடவ வேண்டும்.


எல்லா ஷாம்புகளுமே, சோடியம் லாரைல் சல்பேட் என்ற தவிர்க்க முடியாத கெமிக்கல் தன்மை கொண்டவைகளாக உள்ளன. எனவே, வாசனையும், வீரியமும் குறைவாக இருக்கும், 'மைல்டு' ஷாம்புவாகப் பார்த்துப் பயன்படுத்தலாம். 


அதேபோல், ஹேர் டிரையரை கையில் வைத்துப் பயன்படுத்தாமல், அதை சுவரில் மாட்டி விட்டு, 2 அடி இடைவெளி விட்டு நின்று பயன்படுத்தலாம். 


ஈரமான கேசத்தில் டிரையர் பயன்படுத்தினால், ஹேர் மாலிக்யூல்ஸ் பாதிப்படைந்து முடி உடைந்து விட வாய்ப்புகள் அதிகம். 


அத்துடன், டிரையரில், 'ஹாட் ஏர்' பயன்படுத்தாமல், நார்மலான, 'ரூம் டெம்பரேச்சர் ஏர்' பயன்படுத்தலாம். இத்தனை சிக்கல்கள் இருப்பதால், என்றாவது அவசியத் தேவைக்கு ஹேர் டிரையர் பயன்படுத்தலாம்; வாடிக்கையாக உபயோகிக்க வேண்டாம். 


முடியைச் சுற்றிப் படர்ந்துள்ள, 'இன்டக்ரல் லிபிட் லேயர்' என்ற எண்ணெய் படலம் பாதிக்கப்படுவதாலும், இதன் எதிர்விளைவாக முடியைப் பாதுகாக்கும், 'கியூட்டிக்கிள்' பாதிக்கப்படுவதாலும், முடியின் நுனிப் பகுதியில் பிளவு ஏற்படுகிறது.


முடி வறட்சியைத் தவிர்க்க, கண்டிஷனர் பயன்படுத்தலாம். விலை மலிவான, சிறந்த இயற்கை கண்டிஷனர் எண்ணெய் தான். இதுதவிர, தலைக்கு குளிக்கும்போது, ஷாம்பு பயன்படுத்திய பின் கண்டிஷனர் பயன்படுத்துவதும், முடியை, 'சாப்ட்' ஆக்கும்.ரசாயன கண்டிஷனர்களை விட, முட்டை வெள்ளைக்கரு, ஊற வைத்து அரைத்த வெந்தய விழுது போன்ற இயற்கை கண்டிஷனர்களைத் தேர்வு செய்யலாம்.


மேலும், வீட்டில் உள்ள அனைவரும் தனித் தனியாக சீப்பு பயன்படுத்துவது தான் நல்லது. பொடுகு, ரேஷஸ் என்ற ஒருவரின் பிரச்னை மற்றவருக்குத் தொற்றாமல் இது தவிர்க்கும்.


முடி அதிகமாக கொட்டுவதற்கு, 'ப்ரீ ஹேர்' மட்டுமே காரணம் கிடையாது. எண்ணெய்ப் பிசுக்கு, சுற்றுப்புற மாசு, பொடுகுத் தொல்லை, வறட்சி என தலைமுடியை லுவிழக்க, பல காரணங்கள் உள்ளன.



SRI SAI SATCHARITRA PARAYANA - The Benefits

SRI SAI SATCHARITRA PARAYANA - The Benefits

 

1.     After bathing in the sacred Godavary and after taking the darshan of the Samadhi in the Samadhi Mandir at Shirdi, you should read or hear the Satcharitra. If you do this all your threefold afflictions will vanish.

 

2.    Casually thinking of about the stories of Sai, you will get interested in spiritual life, and if you go through it with love and reverence, all your sins will be destroyed.

 

3.    If you wish to get rid of the cycle of birth and deaths, read Sai stories and remember Him always, and get yourself devoted to His Feet.

 

4.    If you dive into the sea of Sai's stories, and then give them out to others, you will get an ever-new flavour of them and save the hearers from future misery.

 

5.    If you go on meditating on Sai's Form, it will, in course of time, lead you into self-realization.

 

6.    It is very hard to know or realize the nature of Self of Brahma; but if you approach through the Sagun Brahma (Sai's Form) your progress will be easy.

 

7.    If the devotee completely surrenders himself to Him, he will loose his individual ego and be merged in Him and be one with him, as the river becomes cone with the sea.

 

8.    If you thus become merged with Him in any of the three states, viz., waking, dream and sleep, you get rid of the bond of Samsar.

 

9.    If anybody, after bathing, reads this with love and faith, and completes it within a week, his calamities will disappear.

 

10. If he hears or reads it daily and regularly, all his dangers will be warded off.

 

11.  He will get the reward according to his faith and devotion.

 

12. If you read this with reverence Sai will be pleased, and by removing your ignorance and poverty, will give you knowledge, wealth and prosperity.

 

13. With concentrated mind, if you read a chapter daily, it will give you unbounded happiness.

 

14. One, who has his own welfare at heart, should study it carefully and then, he will ever remember Sai gratefully and joyfully in birth after birth. 

 

15. By its study, the diseased and sick will get health, the poor wealth, the mean and afflicted the prosperity, and the mind will get rid of all futile and get steadiness.

 

(Extracted from Sri Sai Satcharitra, Epilogue)

The story of the picture: Portraid sent to Sadhu Bhayya by Baba.

Ghanashyama Sundara Shridhara - song

Ghanashyama Sundara Shridhara 

Ghanashyama sundara shridhara arunoday zhala
Uthi lavkari vanmali udayachali mitra aala

aaaaa……

Anand kanda prabhat zhali uthi sarali raati
Kaadhi dhaar kshirpaatr gheuni dhenu hambarati
Lakshataati vaa sure hari dhenu stanapaanala
Uthi lavkari vanmali udayachali mitra aala

Ghanashyama sundara

Saayankali ekemeli dwijagan avghe vrukshi
Arunoday hotachi udaale charavaya pakshi
Prabhaat kaali uthuni kavadi teerth path lakshi
Karuni sada sammarjan gopi kumbh gheuni kukshi
Yamuna jalasi jaati mukunda dadhyo dhan bhakshi

Ghanashyama sundara shridhara arunoday zhala
Uthi lavkari vanmali udayachali mitra aala

 

http://vipmarathi.in/files/download/id/755

 

https://www.youtube.com/watch?v=UaxNOYbHRzg

 

https://www.youtube.com/watch?v=n0-oT6UPsk8  (Amar Bupali with translation)

Sunday, August 30, 2015

Sankhyaa Bodhanam (Numerical Teaching) from Hindu Vedic Scripts

Sankhyaa Bodhanam (Numerical Teaching) from Hindu Vedic Scripts. What are they?  


Part -I

 

1) Trikalam :              

 

Bhootakalam,

Bhavishyatkalam

and

Vartamanakalam

 

2) Trilokam :              

 

Patalalokam,

Manushyalokam

and

wargalokam

 

3) Trimurthys :          

 

Brahma,

Vishnu

and

Maheswarah

 

4) Trimatacharyas:    

 

Sankracharya,

Ramanujacharya

and

Madhwacharya

 

5) Trigunas :              

 

Satwaguna,

Rajoguna

and

Tamoguna

 

6) Trikaranam :          

 

Manah,

Vak (Speech)

and

Kriya (Action)

 

7) Chaturvedah :        

 

Rugvedah, 

Yajurvedah,

Samavedah

and

Adharvanavedah

 

8)  Kavitrayam :         

 

Nannayya,

Tikkanna

and

Yerrapraggada ( from Andhra Scripts)

 

9)  Vayo Avasthah:     

 

Balyaavastha,

 Kaumaram,

Yavvanam

and

Vardhakyam

 

10) Purushardhah :    

 

Dharah,

Artha,

Kamah

 and

Mokshah

 

11) Panchabhootah :  

 

Bhoomih,

Water,

Agni,

Vayuh

and

Akasam

 

12) Pancha Gangah :  

 

Ganges,

Godavari, 

Krishna,

Tungabhadra

and

Cauveri (Kaveri)

 

13) Pancha Pranah :   

 

Pranam,

Apana,

Vyana,

Vudana

and

Samana

 

14) Pancha Pitarah (fathers) : 

 

His own father (given birth to him), The Guru (teacher) who gave him education and wisdom, who made him to get education, rescued him from the troubles and distress,  the King who rules his country ( or kingdom)

 

15) Pancha Matarah ( five mothers)  : 

 

His own mother (gave birth to him), the lady who brought him up , The Guru's wife (teacher's wife), eleder brother's wife (sister-in-law), His wife's own mother (mother-in-law)

 

Part –II

 

1) Panchangam :              

 

Tidhi,

Vaaram (week),

Nakshatram,

Yogam

and                

Karanam

 

2) Panchamrutam :          

 

Milk,

Curd,

Ghee,

Honey

and

Coconut water or Sugar water

 

3) Pancha Maha Papah (great sins) :  

 

Who steals the Gold, drinking liquor adyapanam Brahma Hatya ( killing Vedic purusha or killing the Cow , killing a pregnant lady or killing his own parents etc), coition with his teacher's wife, and friendship with wicked people (scoundrels)

 

4) Karmendriyas :              

 

Vaak (speech),

 Pani,

Padah,

Payuvu

and

Upashtam

 

5) Arishadvargah :              

 

Kama,

Krodha,

Lobha,

Moha,

Mada, 

and

Matsarya m

 

6) Sapta MahaRushayah (Great Sages) : 

 

Gowtama Maharshi,

Viswamitra maharshi,

Bharadwaja Maharshi,

Atri Maharshi,

Vasishta Maharshi,

Kasyapa Maharshi,

and

Jamadagni Maharshi

 

7) Sapta Lokas (Voordhwa) : 

 

Bhoolokam,

Bhuvarlokam,

Suvarlokam,

Maharlokam,

Janolokam ,

Tapolokam

and

Satyalokam     

 

8) Sapta Lokas ( Adholokah) : 

 

Atalam,

Vitalam,

Sutalam,

Rasatalam,

Talaatalam,

Mahatalam

and

paatalam                                        

 

Part –III

 

1) Sapta Dweepah :         

 

Jamboo Dweepa,

Paksha  Dweepa,

Saaka Dweepa,

Krouncha

Dweepa,

Saalmalee Dweepa,

Pushkara Dweepa,

Yu Dweepa

 

2) Sapta Vyasanas :         

 

Drinking of toddy (Alcohol),

Gambling,

Carnal Desire for woman,

(Vices) Hunting,

Cruality,

theft

and

Accusing others.

 

3) Ashta Kashtam (hardship) : 

 

Penury (Poverty), Slavery, a widower , Without help from any one everything he has to work for himself and otherself, Begging , Totally failure of all efforts, Suffering with chronical disease, 

 

4) Nava Rasas (discernments) :  

 

Amorousness (Srungaram),

Comicness (Haasyam),

 Compassion (Karuna),

Valour (Veeram),

Fierce (Rowdram),

Frightness (Bhayanakam),  

Horrorism (Bheebhatsam),

Marvellous (Adhbhutam),  

Peaceness (Santham) 

 

5) Nava Ratnas (Gems) :       

 

Diamond (Vajram),  

Lapis Lazuli  (Vaidhooryam),

Greencoloured topaz, (Gomedhikam)                                                                                      

Topaz (Pushyaragam),

Emerald (Marakatam),

Ruby (Manikyam),  

Blue Supphire (Indra Neelam),

Pearl (Mowktikam),

Coral (Pravalam)

 

 

6) Nava Dhanyam (Grains) ;    

 

Paddy (Vadlu),

Horsegram (Vulavalu),

Greengram (Pesalu) (Pulses)                           

Blackgram (Minumulu),

Gingili seeds (Nuvvulu), 

 Wheat (Godhuma),

 Cowgram (Anumulu) (called  as Dolichos loblob),

Red gram (kandulu) and 

Bengal gram (Senagalu or Chana )

 

7) Ashtadasa Puranas   :         

 

Bhagavatam,

Naradeeyam,

Markendeyam,

Agneyam,

Brahma (Eighteen Mythologies) Puranam,

Padma Puranam,                                             ,                                                   

Vaishnava Puranam,   

Saivapuranam,

Bhavishyatpuranam,

Brahmandapuranam,

Brahmavaivartaka Puranam,

Lingapuranam,

Varahapuranam,

kaandapuranam,

Koormapuranam,

Vamanapuranam,

Matsyapuranam,

 Gaarudapuranam   

Blessed Devotee who Experienced Baba’s Miracle before 1918

Blessed Devotee who Experienced Baba's Miracle before 1918

A caesarian section changed to normal baby birth

 

In 1917, a 'Maha Mandal' in honour of the Bharadwaj Gotra was conducted in Babol village in Vengurla taluka, Ratnagiri. They invited Dabholkar to preside and become its president. As always, Dadbholkar consulted Baba who refused permission. The same thing happened the following year. So, he dropped the idea. Baba then appeared in his dream and told him to take up the position of president, the following year. So, he did just that.    Dabholkar's    daughter became mentally imbalanced and started clinging to her father. She would not listen to anybody, but him. As president, it was required of Dabholkar to go to Babol. So, with Baba's permission, he left and returned in four days. During that period, his daughter was quite normal. But after his return, she relapsed again. To add to all this, she started getting convulsions and couldn't be controlled by anyone. Dabholkar was quite upset as his daughter was pregnant at that time and everyone was worried about the baby.

 

Being a kind and caring father, he got three famous gynecologists to examine her. Each of them advised a caesarian to safely deliver the baby, but thought that the mother's life may be in jeopardy. The very next day, a doctor came to his home on his own accord and advised him to seek divine help. This was easy for Dabholkar and he at once prayed to Baba to help both mother and child. She then delivered a normal baby without the help of surgery or the doctors. After some time, both mother and child came to Shirdi. The merciful Baba blessed her and said that all would go well. After that, all her sufferings came to an end.

 

Leela- 61 in Ambrosia in Shirdi - Part-I

(Baba's Leelas before 1918)

வெற்றி மந்திரங்கள்!


வெற்றி மந்திரங்கள்!

புத்தகத்தின் பெயர்: தந்தா – ஹெள குஜராத்திஸ் டூ பிசினஸ்

ஆசிரியர்: ஷோபா பொன்ரே (மராத்தி மூலம்);  ஷலாக்கா வாலிம்பே (ஆங்கிலம்)

பதிப்பாளர்: ராண்டம் ஹவுஸ் இண்டியா


ந்தியாவில் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் எதுவென்று கேட்டால், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது குஜராத்தும், மகாராஷ்ட்டிரமும்தான்.   2011-ல் `தி எக்கானமிஸ்ட்' பத்திரிகை தயாரித்த அறிக்கையின்படி, இந்தியாவின் `குவாங்டாங் (Guangdong)' என அழைக்கப்பட்ட மாநிலம் குஜராத்தான்! 

இந்த மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல்களும், ஷாக்களும் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி அதில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அப்படி அவர்கள் தங்களது தொழிலில் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதை ஏறக்குறைய 280 பக்கங்களில் தெளிவாக, எளிமையாக, `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல ஐந்து தொழிலதிபர்களின் அனுபவங்களையும், அவர்களின் வெற்றி மந்திரங்களையும் பதிவுசெய்து சமீபத்தில் வெளியாகி இருக்கிறது `தந்தா' (Dhandha) என்கிற புத்தகம். `தந்தா' என்றால் இந்தியில் `வியாபாரம்' என்று அர்த்தம்.


இந்தப் புத்தகம் பிரபல மராத்தி எழுத்தாளர் ஷோபா பொன்ரேவால் எழுதப்பட்டு, ஷலாக்கா வாலிம்பேயால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து பேரில் முதலாமவர் பீம்ஜிபாய் பட்டேல் என்கிற பிரபல வைர வியாபாரி. சூரத் நகரில் 120 ஏக்கர் பரப்பளவில் வைர வியாபாரம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவுகளையும் கொண்ட டைமண்ட் நகரின் துணை நிறுவனர். (பின்னாளில் இவருக்கும் இன்னொரு நிறுவனருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இவர் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார்).

இவருடைய இளமைப் பருவத்தில் இவர் படாத சிரமங்கள் இல்லை. பத்திரிகை வாசிப்பின் மூலம் தனது வாசிப்புத் திறமை யையும், உலக ஞானத்தையும் வளர்த்துக்கொண்டவர். பெரும்பாலான நாட்கள் தனது கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துவந்ததால், பள்ளிக்கூடம் செல்லவியலாத நிலை. தனது நண்பன் மூலம் மறுநாள் வகுப்புத் தேர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு பள்ளிக்குச் சென்ற இவர் தேர்வை நன்கு எழுதி அதிக மதிப்பெண் பெற்றார். இருந்தாலும் `வருகைப்பதிவு' குறைவு என்பதால் அப்போதிருந்த தலைமையாசிரியர் இவரை இனிமேல் பள்ளிக்கு வரவேண்டாமென்று கூறிவிட்டார். மொத்தமாக தனது வாழ்நாளில் இவர் பள்ளிக்கூடத்துக்கு சென்ற நாட்கள்  பதினைந்துதான்!


தனது கிராமத்தில் இருந்த நண்பர் மூலம் சூரத் சென்று அங்கு பிரபலமாக இருக்கும் `டைமண்ட் கட்டிங்' தொழிற்சாலை ஒன்றில் சேர்ந்து அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் (கட்டிங், பாலிஷிங், க்ரேடிங் போன்றவை) வேலை செய்து முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அதன்பின் தனியாக பிசினஸ் செய்யத் தொடங்கினார். தனது சகோதரர்கள் மூவரையும் அந்தத் தொழிலில் ஈடுபடுத்தினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவில் நிபுணர்கள் ஆனார்கள். தொழில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றது. சில ஆண்டுகளில் சூரத்தில் 60 லேத் மெஷின், 120 பாலிஷிங் மெஷின், 300 தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ஆனார்.


1970-ம் ஆண்டு மும்பையில் வீடு வாங்க ஆரம்பித்தார்.  டில்லியில் ஒரு கிளை அலுவலகத்தைத் திறந்தார். அதன்பின் சிகாகோ, லண்டன், ஆண்ட்வெர்ப் (உலக அளவில் வைரத் தொழில் ஜொலிக்கும் நகரம், பெல்ஜியம் நாட்டில் உள்ளது) என அவரது சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது.


இப்போது இவர் தனது எழுபதுகளில் இருக்கிறார். தன்னால்தான் படிக்க முடியாமல் போய்விட்டது அந்த நிலை தனது கிராமத்தைச் சார்ந்த மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இவருடைய அம்மாவின் நினைவாக ஹாஜிராதர் என்கிற இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். அதில் இன்றைக்கு ஏறக்குறைய 700 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.


அடுத்து, மோகன்பாய் பட்டேல். இவர் இங்கிலாந்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். 1960-களில் டாடா நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து, அதன்பின் சொந்தமாக பட்டேல் எக்ஸ்ட்ரூஷன் க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரிஸின் கீழ் 11 நிறுவனங்களை நடத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்று உலகளவில் புகழ்பெற்ற மெட்டல்பாக்ஸ் நிறுவனத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். 


தான் சொந்த நிறுவனம் ஆரம்பித்து நடத்துவதற்கு முன்பாக டாடா நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ய விரும்பி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோது அவரது உயர் அதிகாரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, பகுதி நேர வேலை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், சம்பளத்தில் மாற்றம் இல்லை. இதுபோல மூன்று முறை இவரது ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டு, இறுதியாக பல வருடங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக கடிதம் கொடுக்கப்பட்டபோது மோகனின் பிடிவாதத்தின் பேரில் அவருடைய ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

டூத்பேஸ்ட் மற்றும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான `கொலாப்சபில் அலுமினியம் ட்யூப்' உற்பத்தியில் உலக அளவில் புகழ் பெற்ற நிறுவனம் இது. இவர் தனது வெற்றிக்கு காரணமாக சொல்வது விடாமுயற்சி, எடுத்துக்கொண்ட விஷயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, எப்போதும் எளிமையு டனும், மரியாதையுடனும் நடந்துகொள்வது போன்றவைகளைத்தான். திமிராக நடந்துகொண்டால் அது எதிரியைத்தான் உருவாக்கும் என்பது இவர் மற்றவர்களுக்கு சொல்லும் பாடம்.


மூன்றாவதாக, தள்பட்பாய் பட்டேல். இவர் பரோடா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர். இன்றைக்கு இவரும், இவருடைய உறவினர்களும் சேர்ந்து ஏறக்குறைய 65 மோட்டல்களை (சாலையோர ஹோட்டல்களை) வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் அமெரிக்கர் ஒருவரால் நஷ்டத்தில் இயங்கி வந்த 29 அறைகள் கொண்ட `இம்பீரியல் இன்' என்கிற மோட்டலை 1970-ல் தனது சேமிப்பு, சகோதரியின் சேமிப்பு, கடன் என பலவகையிலும் பணம் திரட்டி அதை 1,85,000 டாலருக்கு வாங்கினார்.

ஆங்கிலமே தெரியாத மனைவியை மோட்டலின் ரிசப்ஷனில் உட்கார வைத்து, மோட்டல் ஒரு ஸ்திரநிலையை அடையும்வரை தான் பார்த்து வந்த வேலையைத் தொடர்ந்தார். மொழி தெரியாத தனது மனைவி சந்தித்த பல கஷ்டங்களையும், நிறம் மற்றும் கலாசார வேறுபாட்டால் எதிர்கொண்ட சவால்களையும், அதை சமாளித்த விதத்தையும் நூலாசிரியர் மூலம் விளக்கியிருக்கிறார் தள்பட்.


ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டால் வெற்றி நிச்சயம் என்பது இவருடைய வெற்றியின் சூத்திரம்.

இந்த மோட்டல் உரிமையாளரின் புகழ் அவர் வசித்துவந்த பகுதியில் பரவியது. அதை அறிந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை மேயர் பதவிக்கு போட்டியிடும்படி கூற, அவரும் தயக்கத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்று மேன்ஸ்ஃபீல்ட் டவுன்ஷிப்பின் மேயர் பொறுப்பை ஏற்றார். இன்றைக்கு அமெரிக்காவில் விருந்தோம்பல் (Hospitality) தொழிலில் பட்டேல், ஷாக்களின் பங்கு ஏறக்குறைய 55 சதவிகிதம்!


நான்காவதாக, மேக்ஸ் நியூயார்க் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட்டான ஜெய்தேவ் பட்டேல். இவர் கடந்த முப்பது ஆண்டுகளில் விற்பனை செய்த பாலிசிகளின் மதிப்பு சுமார்  2.5 பில்லியன் டாலர். (அதாவது, 16,000 கோடி ரூபாய்). முதல் வருடத்திலிருந்து முப்பது ஆண்டுகள் வரை இவர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் `மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள்' அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். ஒருகட்டத்தில் அதன் `பிரசிடென்ட்'-ஆகவும் இருந்தவர். இவர் இந்த வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இரண்டு வருடத்தில் எட்டு நிறுவனங்களில் வேலை பார்த்தார். அது இவருடைய நேர்மைக்கு கிடைத்த பரிசு(!).


இறுதியாக, இன்ஷூரன்ஸ் சம்பந்தமாக எதுவுமே தெரியாத இவர், அந்த நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்து, தேர்வு எழுதி ஏஜென்ட்டாகச் சேர்ந்தார். விற்பனையாளருக்குத் தேவையான பேச்சுத் திறமையெல்லாம் இவரிடம் அப்போது இல்லை. மிகவும் அமைதியாக, குறைவாகவே பேசக் கூடியவர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல தனது திறமையை வளர்த்துக் கொண்டார். அமெரிக்காவில் தொழில் நிமித்தமாக ஏறக்குறைய 200 நாட்கள் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு பரபரப்பாக செயல்பட்டார்.

இவரிடம் பாலிசி எடுத்தவர்களின் குடும்பத்தில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இன்ஷூரன்ஸ் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு விடும். இவருடைய வெற்றிக்கான மந்திரம் எதையும் சாதிக்க முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கை, நெருங்கிப் பழகி பாலிசிதாரர்களிடம் உறவை வளர்த்துக் கொண்டதுதான்!


இறுதியாக, ஹெர்ஷா குழுமத்தைச் சேர்ந்த ஹாசு ஷா அவரது மனைவி ஹெர்ஷா ஷா மற்றும் அவர்களது மகன்கள் ஜே ஷா, நீல் ஷா. இவர்களும் குஜராத்திலிருந்து சென்று அமெரிக்காவில் ஹோட்டல் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். 1979-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பியவுடன் ஹாசு முன்பு வேலை பார்த்துவந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையிலேயே வேலை கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் கண்ணில் ஹாரிஸ்பர்க்கில் 11 அறைகளைக் கொண்ட `ஸ்டார்லைட்' மோட்டல் விற்பனைக்கு என்கிற விளம்பரம் கண்ணில்பட, அதை 80,000 டாலர் கொடுத்து வாங்கினார்.


அதன்பின் படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஹெர்ஷா குழுமம் ஆனது. அதன் கீழ் விருந்தோம்பல், கட்டுமான தொழில் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டன. இன்றைக்கு இவர்களுக்குச் சொந்தமாக 100 ஹோட்டல்கள் இருக்கின்றன.


இவர்கள் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள். இவர்களின் வெற்றிக்கு காரணம் புரொஃபஷனல் அணுகுமுறை, ஆத்மார்த்தமான சேவை, பணியாளர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு  எனலாம். (1999-ல் அவர்கள் பங்குகளை வெளியிட்டபோது அனைத்துப் பணியாளர்களுக்கும் பங்குகளை ஒதுக்கித்தந்து பணியாளர்களுக்கு பங்குதாரர்கள் என்கிற அங்கீகாரத்தைத் தந்தது)


இந்த ஐந்து பேர்களுடைய வெற்றிக்குப் பின்னால் பொது வாக உள்ள விஷயங்கள் இரண்டு:

1. `ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்' என பொதுவாக சொல்வதுண்டு. ஆனால், இவர்களின் கதையில் இவர்களுக்குச் சமமாக இவர்கள் வீட்டுப் பெண்களும் கஷ்ட, நஷ்டத்தை பகிர்ந்து கொண்டிருக் கிறார்கள். இது குஜராத்தியர் களுக்கே உரிய குணாதிசியம்.

2. தான் ஒரு நிலைக்கு வந்த பிறகு தனது உற்றார், உறவினருக் கும் உதவும் மனப்பான்மை. அவர்கள் நன்கு வளர்ந்துவிட் டால் நமக்குப் போட்டியாக வந்துவிடுவார்களே என்கிற எண்ணம் சிறிதும் அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. இது தள்பட்டின் விஷயத்தில் பளிச்சிடுகிறது. இதுவும் குஜராத்தியர்களின் தனித்தன்மை யாக இருக்கக்கூடும்.


இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருப்பவர்கள் இன்றைய பிரதமர் நரேந்திர மோடியும், சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சனும்!


Saturday, August 29, 2015

மொபைல் பேங்கிங்... ஷாக் ரிப்போர்ட்...

மொபைல் பேங்கிங்... ஷாக் ரிப்போர்ட்... பாதுகாப்பான பணப் பரிமாற்றத்துக்கு எச்சரிக்கை டிப்ஸ்!

து மொபைல் யுகம். உள்ளங்கையில்  ஆண்ட்ராய்டு மொபைல் போன் இருந்தாலே போதும், அத்தனை விஷயங்களையும் இருந்த இடத்தில் இருந்தபடியே செய்துவிட முடியும் என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இந்த நிலையில், வங்கிச் சேவை மட்டும் மொபைலில் வராமல் போய்விடுமா என்ன? பணம் எடுத்தாலோ அல்லது பணம் நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டாலோ அனைத்துக்கும் எஸ்எம்எஸ் வருவது தொடங்கி, மொபைல் பேங்கிங் ஆப்ஸ், இன்டர்நெட் பேங்கிங், இ-வேலட் வரை  பல்வேறாக கிளைத்து வளர்ந்து வருகிறது வங்கித் துறை.

இன்றைய தேதியில் இந்தியாவில் 92 கோடி செல்போன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. மத்திய ரிசர்வ் வங்கியின் கணக்கின்படி, இந்தியாவில் தற்போது 57.08 கோடி டெபிட் கார்டுகளும், 2.14 கோடி கிரெடிட் கார்டுகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. பணத்தை கையில் வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லை. எனவே, வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து அதை கார்டு மூலம் எடுத்துக்கொள்வோம் என்கிற நிலை போய், தற்போது கார்டைவிட மொபைல் இ-வேலட்டில் பணத்தை வைத்துக்கொண்டால்தான் ஓ.கே என்கிற மனநிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள். 

இதனால் மொபைல் பேங்கிங் அசுர வேகத்தில் காற்றைப்போல எங்கும் பரவி வருகிறது. இந்த மொபைல் பேங்கிங்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல இன்று சந்தையில் இ-வேலட்கள் நிறையவே வந்துவிட்டன. பேடிஎம் (Paytm), பேயூமணி (Payumoney), பாக்கெட் ஐசிஐசிஐ பேங்க் (Pocket ICICI Bank), ஆக்ஸிஜன் வேலட்  (Oxygen  wallet), மொபிவிக் வேலட்(Mobiwik wallet) போன்ற முன்னணி இ-வேலட்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

மொபைல்மயம்!

தனியார் நிறுவனங்களே கோலேச்சி வந்த இந்தத் தறையில் தற்போது பொதுத் துறை வங்கிகளும் காலடி எடுத்து வைக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எஸ்பிஐ படி (SBI Buddy) என்கிற பெயரில் தன் இ-வேலட்டை தொடங்கி இருக்கிறது. இதன் தொடக்க விழாவில் பேசிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா,  "இனி மொபைல்தான் பணப் பரிமாற்றத்தின் மையமாக இருக்கும்'' என்று சொல்லி இருக்கிறார்.

இந்திய அளவில் மட்டும் இல்லாமல், உலக அளவிலும் இனி மொபைல் பேங்கிங் வங்கிச் சேவைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதை கணித்திருக்கிறார்கள். உலக மொபைல் பேங்கிங் (World Mobile Banking) அறிக்கையின்படி, அடுத்த நான்கு ஆண்டுகளில் மொபைல் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 180 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 25 சதவிகிதத்துக்கும் மேல். மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்துவதில் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. 

இந்த அசுர வளர்ச்சியால் எந்த அளவுக்கு நம் வேலை சுலபமாகிறதோ, அதே அளவுக்கு ஆழம் தெரியாத ரிஸ்க் இருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மை. பணத்தின் மறுபிம்பமாக இருக்கக்கூடிய வங்கிகளுக்கும், வங்கிச் சேவைகளை செல்போன் மற்றும் இணையம் மூலம் பயன்படுத்தும் வாடிக்கையாளர் களுக்கும் இன்று பெரும் பிரச்னையாக உருவெடுத்தி ருக்கிறது  மொபைல் போன்கள். 

வைரஸ் அபாயம்!

இன்றைய தேதியில் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 70 சதவிகித வங்கிகளின் ஆப்ஸ்கள் வைரஸ்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக விஜிலென்ட் (Wegilant) ஐ.டி செக்யூரிட்டி ரிசர்ச் நிறுவனம் கண்டறிந்து சொல்லி இருக்கிறது. இந்த வங்கிகள் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் எஸ்எஸ்எல் (SSL - Secure Socket Layer) என்கிற சான்றிதழ்கள் பெறாமல் இருப்பதாகவும் அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. எஸ்எஸ்எல் சான்றிதழ் இல்லாத ஆப்ஸ்களை பயன்படுத்தும்போது விவரங்களை மிக எளிதாக ஹேக் செய்துவிடலாம். வங்கி வாடிக்கையாளருக்கும் இணையத்துக்கும் இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாப்பதுதான் எஸ்எஸ்எல்-ன் முதல் பணி.

விஜிலென்ட் நிறுவனம் சொல்லும் இன்னொரு முக்கியமான தகவல், இந்தியாவில் உள்ள 33 வங்கிகளின் ஆப்ஸ்களை பரிசோதித்ததில் 29 வங்கிகளின் ஆப்ஸ்கள் வைரஸ்களால் பாதிப்படையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்லி இருப்பதுதான். இதில் 5 வங்கிகளின் ஆப்ஸ்கள் மிக எளிதில் வைரஸ்களால் பாதிப்படையும் வகையில் இருக்கிறதாம்!

ஹேக்கர்கள்... உஷார்!

இன்றைக்கும் பலரும் பொது இடத்தில் கிடைக்கும் வைஃபை வசதியைக் கொண்டு  மொபைலிலிருந்து வங்கிச் சேவையைப் பயன்படுத்து கிறோம். அப்படி பயன்படுத்தும் போது நம் விவரங்கள் திருடப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம், வைஃபை மூலம் இணையத்தை வழங்குபவர் ஹேக்கராக இருந்தால், நம் லாக் ஃபைல்களை (log file) திருட வாய்ப்பு இருக்கிறது. இந்த லாக் ஃபைல்கள் இருந்தாலே, நம் போன் மூலம் என்ன செய்தோமோ, அதை நம் போன் இல்லாமலேயே ஹேக்கரால் செய்ய முடியும்.

இத்தனை நாளும் இணையத்தில்தான் வைரஸ்களின் அட்டாக் இருந்தது. ஆனால், இன்று நமது செல்போனில் இருக்கும் நிதி சார்ந்த விவரங்களை மட்டும் ஹேக் செய்வதற்கும், நம் பணத்தை நம் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை திருடவும் பல வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஃபிஸ்ஸிங் மற்றும் ஸ்பூஃபிங் (Phising, Spoofing) என்கிற முறையில், நம் போனுக்கோ அல்லது கம்ப்யூட்டருக்கோ வைரஸ்களை தாக்கவிட்டு, நம் விவரங்களை நமக்குத் தெரியாமலேயே எடுத்துக் கொள்கிறார்கள் ஹேக்கர்கள். 

நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் தெரிந்துகொண்டு நம் வங்கியிலிருந்து மெயில் அனுப்புவதுபோல ஹேக்கர்கள் ஒரு மெயிலை அனுப்புவார்கள். நாமும் அந்த மெயில் உண்மையாகவே வங்கியிடமி ருந்துதான் வந்தது என்று எண்ணி, அந்த மெயிலுக்குப் பதிலளிப்போம். அப்படி அளித்துவிட்டால் அதன்பிறகு வங்கிக்குப் பதிலாக எப்போதும் அந்த ஹேக்கரிடம்தான் நாம் தொடர்பு கொள்ளவேண்டி இருக்கும். இந்த வகையான பாதிப்புகளை 'ரீப்ளே அட்டாக்' (Replay attack) என்கிறார்கள்.

இந்த மெயிலுக்கு பதில் அளிக்கும்போது நம்முடைய முக்கிய வங்கிக் கணக்கு விவரங்களான டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், பாஸ்வேர்டுகள், நெட் பேங்கிங்  செய்வதற்கான யூசர்நேம் பாஸ்வேர்டுகள் போன்றவை களை டைப் செய்யும்போது, வைரஸானது அந்த ரகசிய விவரங்களை ஹேக்கர்களுக்கு அனுப்பிவிடும். இதனால் நம் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை நாமே திருட வழி சொல்லியது போல் ஆகிவிடுகிறது. கிடைத்த விவரங்களை வைத்து நமக்கு பதில் ஹேக்கர் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வார். இதை  'அன் ஆத்தரைஸ்டு ஆக்சஸ்' (Unauthorised access) என்பார்கள்.

எஸ்எஸ்எல் சான்றிதழ் இல்லாத வலைதளங்கள் மற்றும் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது, வாடிக்கையாளருக்கும், இணையத்துக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது நமக்கே தெரியாமல் நம் ரகசிய தகவல்களைத் திருட முடியும். இந்த வகையான தாக்குதல்களை 'மேன் இன் தி மிடில் அட்டாக்' (Man in the middle attack) என்பார்கள். இந்த பாதிப்புதான் அதிக அளவில் நடைபெறுகிறது. எனவே, இதை தடுக்க எஸ்எஸ்எல் சான்றிதழ் உள்ள ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வது அவசியம். அதோடு வங்கியின் அதிகாரப்பூர்வமான வலைதளத்திலும், கூகுள் ப்ளேஸ்டோர், ஆப்பிள் ஐடியூன்ஸ் போன்ற நம்பகமான ஆப்ஸ் ஸ்டோர்களிலிருந்து டவுன்லோடு செய்தால் வைரஸ் தாக்குதல்களின் அளவை கணிசமாகக் குறைக்க முடியும்.

பாதுகாப்புக்கு வழி!

சமீபத்தில் கான்ஃபிக்கர்  (Confickr) என்று ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ்களால் ஒரு மொபைல் பாதிக்கப்பட்டால், அதன்பிறகு ஆண்டிவைரஸ்களை கூட அந்த போனில் அப்டேட் செய்ய முடியாது. ஆண்டி வைரஸ்களை அப்டேட் செய்ய முடியவில்லை என்றால், சாதாரண வைரஸ்கள்கூட மொபைல் போனுக்குள் நுழைந்து முக்கியத் தகவல்களை வேட்டையாடத் தொடங்கி விடும். ஏடிஎம் பின், கிரெடிட் கார்டு பின், நெட்பேங்கிங், யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு என்று அனைத்தையும் நாம் மொபைல் போனிலேயே வைத்திருப்பதால், சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்ட மாதிரி ஆகிவிடும். கான்ஃபிக்கர் மட்டும் அல்ல, ஐலவ்யூ (Iloveyou), பாட்நெட் (botnet), கோட்ரெட் (codered) என்று தினமும் பல புதிய வைரஸ்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

மொபைல் போனில் பணப் பரிமாற்றம் செய்யும்போது இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அது இல்லாமல் இனி இருக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். இனி இணைய வெளியில் வங்கிப் பரிமாற்றங்களை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது என்பது முக்கியமான விஷயம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்கிறது என்கிற கேள்வியை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payment Corporation of India - NPCI) அமைப்பின் இம்மீடியட் பேமென்ட் சர்வீஸ் துறையின் (IMPS - Immediate Payment service) தலைவர் ராம் ரஸ்தோகியிடம் கேட்டோம்.

"நம் மொபைல் போன்கள் வைரஸ்களால் பாதிப்படைய பல காரணங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் செய்யும் தவறுகளை சரிசெய்து கொண்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும்.

ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் வரும் வைரஸ்கள்! 

மால்வேர் வகையான வைரஸ்கள் நம் மொபைல் போன்களைத் தாக்கினால் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத வலை தளங்களில்தான் அதிக மால்வேர்கள் இருக்கும். எனவே, அங்கீகரிக்கப்படாத வலை தளங்களில் உலாவுவதை நிறுத்தினாலே ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் ஏற்படும் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

ஹார்டுவேர் மற்றும் அப்ளிகேஷன்கள் மூலம் வரும் வைரஸ்கள்! 

பொதுவாக, நம்பகத்தன்மை இல்லாத எஸ்எஸ்எல் சான்றிதழ் அளிக்கப்படாத அப்ளிகேஷன்களைத் தவிர்ப்பது நல்லது.

அதேபோல, சிம் தொலைந்துவிட்டால் அதே எண்ணை வாங்குவதற்காக சிம் குளோனிங் செய்கிறார்கள் சிலர். இப்படி செய்யப்படும் சிம் கார்டை பயன்படுத்துவதால்,  வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, சிம் கார்டு தொலைந்து விட்டால், வேறு ஒரு புதிய எண்ணை வாங்கிக் கொள்வது நல்லது.

அத்துடன் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்யும்போது அந்த ஆப்ஸ்களில் பிஐஇ (Position Independent Executable) எஸ்எஸ்பி (Stack Smashing Protection) போன்றவைகள் இருக்கிறதா என்பதை எல்லாம் உறுதி செய்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.

புரோட்டோக்கால்களில் உள்ள தவறு!

சில மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்தவுடனேயே வாடிக்கையாளரிடம் வரவேற்பு கிடைக்காமல் ஃபெயிலியர் மாடலாகிவிடும். இப்படி ஃபெயிலியர் ஆகும் மாடல்களில் சில போன்களின் புரோட்டோகால்கள் (விதிகள்) தவறாக எழுதப்பட்டிருக்கும். இந்த போனில் தரப்பட்டுள்ள அல்காரிதம்களும் வலுவில்லாத தாகவே இருக்கும் (Weak Cryptographic algorithms).

எனவே, அந்த போனை பயன்படுத்தி இணையத்தில் உலவும்போது, நம் முக்கியமான ஃபைல்களை எல்லாம் லாக் செய்துவிடுவார்கள். இப்படி தவறாக புரோட்டோகால் எழுதப்பட்ட போன்களை வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.

வாடிக்கையாளர்களின் பிரைவஸி மற்றும் நம்பகத் தன்மையை அதிகப்படுத்த ஒன்டைம் பாஸ்வேர்டு (OTP) போன்ற வசதிகள் எல்லாம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

ஒருவேளை நீங்கள் வங்கிப் பரிமாற்றம் செய்யும்போது உங்களுக்கு ஓடிபி வரவில்லை என்றால் உடனே வங்கியுடன் தொடர்புகொண்டு ஏன் வரவில்லை என்று விசாரியுங்கள்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்கள் அதிகாரப்பூர்வமான அப்ளிகேஷன்களை வடிவமைக்கும் பணியை ஐபிஎம் (IBM), எஃப்எஸ்எஸ் (FSS), இன்ஃபோசிஸ் (Infosys) போன்ற நிறுவனங்களிடம் தந்திருக்கின்றன.

சமீபத்தில் இதுபோன்ற ஆப்ஸ் வடிவமைப்பு பணிகளுக்கு புதிய   ஸ்டார்ட் -அப்களான மொபிமி (Mobime), ஃபொனேபைஸா (Fonepaisa), ஜிஐகேஷ் (GI cash) போன்ற நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன.

செக்யூரிட்டி சிஸ்டம்!

வங்கி தவிர மற்ற நிறுவனங்களும் ஆப்ஸ்களை வடிவமைப்பதுடன் வேறு நிறுவனங்களின் சர்வர்களையும் பயன்படுத்தி வருகின்றன. பல வங்கிகள் வெளிநாட்டு சர்வர்களையும் பயன்படுத்துகின்றன. இப்போது ஒருபடி மேலே போய் க்ளவுட் ஸ்டோரேஜ்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வங்கிகளின் ஆப்ஸ்கள் அங்கீகரிக்கப்பட்ட செக்யூரிட்டி லேப்களில் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். அதோடு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வங்கி தரும் ஆப்ஸ்களையும் அதிகாரப்பூர்வ வலைதளத்தையும் சரிபார்க்க வேண்டும். இந்த நடவடிக்கை களை இந்தியாவில் உள்ள பல வங்கிகள் செய்துவருகின்றன.அதுமட்டுமல்லாமல், அரசு மொபைல் மற்றும் இணைய வங்கிப் பரிமாற்றங்களுக்கு என்றே பல வழிமுறைகளை சொல்லி இருக்கிறது. இந்த வழிமுறைகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டும் வருகிறது.

வங்கிகளும் தங்கள் மொபைல் ஆப்ஸ்களை பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகுதான் இயக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு வங்கியிலும் தனியாக ஐ.டி செக்யூரிட்டி மற்றும் ரிஸ்க் துறைகள் இருக்கின்றன.

இவை இன்று சந்தையில் நிலவும் ஐ.டி சவால்களை எல்லாம் சந்தித்து வாடிக்கையாளரின் பணப் பரிமாற்றத்துக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது" என்று சொல்லி முடித்தார்.

(ராம் ரஸ்தோகி கூறியுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்களே. இதற்கும் அவர் பணிபுரியும் நிறுவனத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.)

மொபைல் பேங்கிங் தொழில்நுட்பத்தில் புதிது புதிதாக பிரச்னைகள் வந்துகொண்டிருந்தாலும், அதற்கான தீர்வுகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

மேற்கூறிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மொபைல் போன் மூலம் நம் பணப் பரிமாற்றங்களை பாதுகாப்பாக மேற்கொள்வோமே!

ஆண்ட்ராய்டில் அதிரடி அட்டாக்!

இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் மொபைல் பேங்கிங் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவை ஸ்வ்பென்க் (Svpeng) என்கிற மால்வேர் தாக்கி இருக்கிறது என்கிற செய்தியை அமெரிக்கன் பேங்கர் (American Banker) என்கிற வலைதளம் வெளியிட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆண்ட்ராய்டு போன்களை குறிவைத்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த வைரஸ்களால் நம் போன் பாதிக்கப்பட்டால் போனின் மொத்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டுவிடும்.

இன்று உலகில் அதிக அளவிலான மக்கள் ஆண்ட்ராய்டு போன்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஜூலை 2015 கணக்கின்படி, இந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் 62.3 சதவிகித நபர்களின் மொபைல்கள் ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தை கொண்டது என்று ஸ்டாடிஸ்டா(Statista) என்கிற நிறுவனம் கணித்திருக்கிறது.

ஆண்ட்ராய்டு போன்களைத் தாக்குவதுதான் மால்வேர் (Malware) வகை வைரஸ்களின் முதல் இலக்கு. இந்த மால்வேர் வகையில் பல வைரஸ்கள் இருக்கின்றன. இந்த மால்வேர் வகையான வைரஸ்கள் நம் போனை தாக்கினால் போன்தான் நம் கையில்தான் இருக்கும். ஆனால், நம் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கையில் இருக்கும் என்கிறார்கள். இதுபோன்ற வைரஸ் தாக்குதல்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகளை அறிவது அவசியம் .

ஏன் லேட்டு?

'ஏன் லேட்டு?'

'லேட் ஆயிடுச்சு சார்!'

இந்தப் பள்ளிக்கூடத்து வசனங்களை, வளர்ந்த பின்பும் பலர் தொடர்வர்!
'லேட்டாக்கிட்டேன்... தப்பு தான்...' என்பது தானே சரியான பதில்! நான், இனி என்னை திருத்தி கொள்வேன் என்று உத்தரவாதம் தரப்பட்டதாக அமையும்!
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல், வளராத நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாட்டினர் கூட, குறித்த நேரம் என்பதற்கு அபார முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்வதை, வெட்கக்கேடான செயலாகக் கருதுகின்றனர்.

இந்(திய)த மண்ணில் மட்டும் தான், தாமதமாக ஒரு கூட்டத்திற்கு வருவோரை, 'நீங்க கெட்டிக்காரர்; சரியா ஆரம்பிக்கிற நேரத்துல நுழையுறீங்க...' என்று பாராட்டி, மகிழ்கிறோம்.

தமிழகத்தில், பல நேரங்களில் தாமதமாக வருபவர்கள் நுழைந்ததும் தான் கூட்டமே ஆரம்பிக்கிறது. நேரம் கடந்தாலும், சபை நிறைந்ததும் தான், நாடகத்திற்கு பூஜை மணி அடிக்கப்படுகிறது.

ஒரு முறை, ஈரோட்டில் உள்ள ராணா அரங்கில், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கூட்டம் நடந்தது. தாமதமாக வருபவர் எவராக இருப்பினும், பின் வரிசையில் தான் அமர வேண்டும் என்பதும், தாமதமாக வருகிற எவருக்கும், எந்த முன்னுரிமையும் கிடையாது என்பதையும் அங்கு கண்டேன்.

நேர உணர்வு வளராத அக்காலத்திலேயே, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவங்கும் பண்பை கடைபிடித்தவர், கம்பன் அடிப்பொடி, சா.கணேசன்!

ஒருமுறை, அப்போது முதல்வராக இருந்தவர் குறித்த நேரத்திற்கு வராமல் போக, 'கம்பன் அடிப்பொடி இன்று என்ன செய்யப் போகிறார் பாப்போம்...' என்று, கூட்டத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, 'ஆரம்பியுங்கள் கூட்டத்தை...' என்றார்.
'விழாத் தலைவர்... அதுவும் முதல்வர்! அவர் வராமல் எப்படி...' என, விழாக் குழுவினர் திகைக்க, 'பரவாயில்ல; நமக்கு குறித்த நேரம் தான் முக்கியம்...' என்று சொன்ன, துணிச்சல் மனிதர், சா.கணேசன்.

சமூகத் தொண்டு நிறுவனங்களாக, உலக அளவில் சிறந்து விளங்கும் சில சங்கங்களின் தமிழகக் கிளைகள் கூட, அரசியல் கூட்டங்கள் போல் ஆகிவிட்டன. நூற்றுக்கு, 90 கூட்டங்கள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படுகின்றன; நடத்தப்படுகின்றன.

உலகச் சங்கங்களின் அங்கங்கள் என்கிற போது, நாமும் உலகோடு ஒட்டொழுக வேண்டாமா... உள்ளூர் அரசியல் கூட்டங்கள் போலவா நடத்துவது!
'மணி, 7:00 தானே ஆகுது... 7:30க்குத் தான் ஆரம்பிப்பர்...' என்கிற தவறான உணர்வை, உறுப்பினர்கள் மத்தியில் பதித்தால், அது யாருடைய குற்றம்?
போதுமான உறுப்பினர்கள் வந்துவிட்டால் கூட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டியதுதானே... சபை நிறைய வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லையே!

தாமத வருகைக்கு பெரும்பாலும், நம்மவர்கள் சொல்லும் காரணம், 'ஏகப்பட்ட, 'டிராபிக்ஜாம்' என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்பர். மோசமான போக்குவரத்தை எதிர்பார்த்து, கூடுதல் நேரம் ஒதுக்கிப் புறப்பட வேண்டியது தானே!

வண்டி பஞ்சர், ரயில்வே கேட் மூடுதல் என, எதிர்பாராததை எல்லாம் எதிர்பார்த்து, அதற்கும் நேரம் ஒதுக்கியல்லவா, புறப்பட்டிருக்க வேண்டும்!
'கிளம்புற நேரத்துல ஒருத்தர் வந்து தொலைச்சுட்டார்... என்ன செய்ய சொல்றீங்க...' என்பர் ஒரு சிலர்.

நம்மிடம் முன் அனுமதி பெறாமல், தகவல் தெரிவிக்காமல் வருவோருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லையே... 'அவசரமாக் கிளம்புறேன்; நீங்களும் என்னுடன் வருகிறீர்களா?' என்று கேளுங்கள், அவரே நழுவி விடுவார்.
காபி கலந்து கொண்டிருக்காமல், பச்சைத் தண்ணீரோடு ஆளைக் கை கழுவுங்கள்; நீண்ட உரையாடலும் வேண்டாம்; உங்கள் அவசரத்தை அவசியம் புலப்படுத்துங்கள்.

வருகிற வழியில் வேறு வேலைகளை வைத்துக் கொள்ள கூடாது. வழியில் வைத்துக் கொள்ளும் எந்த ஒரு வேலையும், தறிகெட்டு ஓடும் வாகனத்தின் போக்கிற்கு சமம். நேரே இலக்கு தான்; இலக்கு முடிந்ததும் தான் வழிப் பணிகள்.
தாமதக்காரர்களிடம் ஒன்று கேட்கிறேன்... நம் முதல்வருடன் அப்பாயின்மென்ட் என்றால் தாமதம் செய்வீர்களா... முன்னதாகவே போய் விட மாட்டீர்கள்?
ஒப்புக்கொள்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் தாருங்கள். 'லேட்டாப் போனா என்ன, தலையை சீவிடுவாங்களா...' என்கிற தத்துவத்தை மூட்டை கட்டுங்கள்.

ஜேம்ஸ் ஹெச்.வேல்ஸ் என்கிற அமெரிக்கப் பணக்காரர், 'நான் வருகிறேன் என்று சொன்ன நேரம் கடந்து விட்டதா... ஜேம்ஸ் செத்துப் போயிட்டான் என்கிற முடிவிற்கு வந்து விடுங்கள்...' என்று கூறினார்.

இதுவன்றோ குறித்த நேரத்திற்கு முக்கியத்துவம் தரும் அழகு! 

லேனா தமிழ்வாணன்

Friday, August 28, 2015

Yajur Upakarma (Avani Avittam)-2015 – Text and MP3 Downloads

Yajur Upakarma which is performed in the month of Sravana, on the full moon day. This year, it  falls on 29th August, 2015

It is very important that all of us perform this ritual without fail and do prayshchita for removal of all the sins and secure the divine blessings.

PDF and Audio Downloads

The complete Upakarma vidhi is available in Tamil and Sanskrit as downloadable pdf files for the help of all devotees. The Audio recording for the same has also been provided for the benefit of devotees. The Mantras have been rendered by Sri V.Sriram Ghanapatigal

NOTE: While the below PDF and Audio Files will be helpful for the devotees to perform Avani Avittam at the comfort of their home by following these, it is for those who are hard pressed for time and are  in remote places where there are not many Vadhyars and also community members to get together and perform this at a common place.  Atleast on this day, it would be better if the members and devotees of our community come together at a place like a Temple, Community Halls, River banks, Veda Patasala etc and perform Avani Avittam, and attain the blessings of the Almighty. This would also serve our community to get together and stronger and save our ancient traditions and culture and do Dharma Karyams.

In case of difficulty or break ups in audio streaming, please download the entire mp3 to your local drive and play.

Download PDF in Tamil  | Download PDF in Sanskrit

Audio Files :

  1. Prarthana : 
     | Download MP3
  2. Introduction :  
     | Download MP3
  3. Samitadanam :  
     | Download MP3
  4. Kamokarshit Japam:  
     | Download MP3
  5. Brahma Yagnam:  
     | Download MP3
  6. Deva-Rishi Tarpanam:  
     | Download MP3
  7. Pitru Tarpanam:  
     | Download MP3
  8. Mahasankalpam:  
     | Download MP3
  9. Yagnopaveetha Dharanam:  
     | Download MP3
  10. Kandarishi Tarpanam:  
     | Download MP3
  11. Vedarambham:  
     | Download MP3
  12. Conclusion:  
     | Download MP3
  13. Gayathri Japa Sankalpam :  
     | Download MP3