Saturday, June 20, 2015

மவுன விரதம்

ஜென் குருவிடம், அவர் மாணவன் ஒருவன், 'குருவே... மாதம் ஒரு நாள் மவுன விரதம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்...' என்றான்.

'உன்னால முடியாது...' என்றார் குரு.

'ஏன் குருவே?'

'மவுன விரதம் இருக்கப் போவதாக சொல்கிறாயே... அது தவறு; மவுனமாக இருக்கப் போகிறேன் என்று சொல். ஏற்கிறேன்...' என்றார்.
ஜென் குரு கூறியதன் விளக்கம்: சிலர், மவுன விரதம் இருப்பர். இது எதற்கு... ஓய்வு வாய்க்கா, நாக்கிற்கா, தொண்டைக்கா... நிச்சயமாக, மனதிற்கு இல்லை. அடுத்தவர்கள் புகழ வேண்டும் என்பதற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ இருக்கலாம். அப்படியானால், அதுவே, மனதின் ஓய்வுக்கு எதிரான எண்ணம். மனம் எண்ணமற்று இருப்பது அல்லது எண்ணங்கள் குறைவாக இருப்பது தான் விரதம்.
போலி மவுன விரதத்தை கடைபிடித்து, எண்ணங்களை அலைபாய விடுவதை விட, பேசிக் கொண்டிருப்பது நல்லது!