Saturday, September 10, 2016

நம்பிக்கை நலமாகும்!

நம்பிக்கை நலமாகும்!

பைலட்டைப் பற்றி எதுவும் தெரியாதபோதும், விமானத்தில் செல்லும்போது நாம் கவலை இல்லாமல் ரிலாக்ஸாகச் செல்கிறோம்.

கேப்டனைப் பற்றி எதுவும் தெரியாதபோதும், கப்பலில் அச்சம் இல்லாமல் ரிலாக்ஸாகத்தான் பயணிக்கிறோம்.

ரயிலில் செல்லும்போதும் இன்ஜின் டிரைவரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. எனினும், நாம் ரிலாக்ஸாகத்தான்  செல்கிறோம்.

அப்படியே, டிரைவரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாத நிலையிலும், நாம் பேருந்தில் பயணிக்கும்போது ரிலாக்ஸாகவே இருக்கிறோம்.

அப்படியிருக்க, நமது வாழ்க்கையை இயக்கிச் செல்பவர் கடவுள் என்று தெரிந்திருந்தும், வாழ்க்கையில் நாம் ஏன் ரிலாக்ஸாக இருக்கக்கூடாது. கடவுளிடம் நம்பிக்கை வைப்போம்; அவர், நம்முடைய வாழ்க்கையை அழகாகவும் இனிமையாகவும் நடத்திச் செல்வார்.