Tuesday, July 23, 2013

கலியுகத்தை எவ்வாறு தாண்டிச் செல்வது?

துவாபர யுகத்தின் முடிவில், நாரதர் பிரம்மாவிடம் சென்றார்.

''தந்தையே! எல்லா இடங்களிலும் சுற்றி வருகின்ற நான், கலியை (தோஷங்கள் மிகுந்த கலியுகத்தை) எவ்வாறு தாண்டிச் செல்வேன்?' என்று கேட்டார்.

அதற்கு பிரம்மதேவர், ''நாரதா! எல்லா வேதங்களின் ரஹஸ்யமான தாத்பர்யத்தைச் சொல்கிறேன், கேள். அதனால், நீ கலியின் துன்பத்தை அடைய மாட்டாய். பகவானும் ஆதி புருஷனுமான நாராயணனின் நாமத்தைச் சொன்ன மாத்திரத்தில், கலி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்!'' என்றார்.

''அப்படிப்பட்ட நாமம் எது?'' என நாரதர் கேட்க... அதற்கு பிரம்மா,

' 'ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!'

என்ற இந்தப் பதினாறு நாமங்களையும் சேர்த்துச் சொன்னால், கலியின் தோஷம் நாசமாகிவிடும். சகல வேதங்களும் இதைத் தவிர வேறு வழி இல்லை என்றே கூறுகின்றன'' என்று பதில் சொன்னார்.

'கலி சந்தரனோபநிஷத்' சொல்லும் கதை இது.