Saturday, August 27, 2016

நான்... நான்... நான்...

நான்... நான்... நான்...

நான் சம்பாதித்தேன், 
நான் காப்பாற்றினேன், 
நான் தான் வீடு கட்டினேன், 
நான் தான் உதவி செய்தேன், 
நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!!!!!

நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான்என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!...

*நான்*தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? 

நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?? 

நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ? 

நான் தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

நான் தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? 

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும்அன்பாக இருங்கள்.
அன்பே அனைத்து துன்பப் பூட்டையும் திறக்கும் திறவுகோல்.

ஆகையால் நாம் அன்பை பரிமாறிக் கொள்வோம்
அன்புடன்
*நான்*