Sunday, June 16, 2013

தைரியம் அளிக்கும் ஏஞ்சலினா ஜோலி








தலைமுடி நரைத்தாலே, அது யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கும் நடிகர்கள் மத்தியில் உலகப்புகழ் பெற்ற ஆங்கில நடிகை, ஏஞ்சலினா ஜோலி சமீபத்தில், அறிக்கையை வெளியீட்டு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். 

மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட ஏஞ்சலினா, சமீபத்தில், இரு மார்பகங்களையும் அப்புறப்படுத்தி விட்டார். இந்த தகவலை, ரசிகர்கள் முன் கூறி, அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். 

"உலகப்புகழ் பெற்ற நடிகையாக இருந்தும், உங்கள் நோயை பற்றி எப்படி கூறினீர்கள்?' என்று கேட்ட போது, "என்னைப் போன்ற பல பெண்கள், மார்பகப் புற்று நோயால் அவதிப்படும் போது, மார்பகங்களை அப்புறப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தைரியம் அளிக்கும் நோக்கத்துடன் தான், பகிரங்கமாக என் நோயை பற்றி கூறினேன்...' என்கிறார் ஏஞ்சலினா.