Friday, June 3, 2016

என்னைக்கவர்ந்த பகிர்வு! படித்ததில் பிடித்தது.

என்னைக்கவர்ந்த பகிர்வு! படித்ததில் பிடித்தது.

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே

🎲🎲🎲🖥🎲🎲🎲

ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த கடவுளிடமிருந்து என்ன விதமான கருணையை எதிர் பார்க்கிறீர்கள்?

🏓🏓🏓🖥🏓🏓🏓

கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.

🏵🏵🏵🖥🏵🏵🏵

ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.

🎯🎯🎯🖥🎯🎯🎯

சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது இராவணனின் கற்பு.

🎾🎾🎾🖥🎾🎾🎾

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.

🏈🏈🏈💻🏈🏈🏈

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.

⏰⏰⏰🖥⏰⏰⏰

ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.

🛢🛢🛢🖥🛢🛢🛢

உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.

♻♻♻🖥♻♻♻

ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.

🖥🛢🖥🛢🖥🛢🖥

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.

🍱🍱🍱💻🍱🍱🍱

நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.

📲📲📲💻📲📲📲

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹