Monday, June 27, 2016

மனைவியின் பிரார்த்தனை


சுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு

வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார்.

 வழியில் சிக்னலுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு அசாரிரி ! நில் சிக்னல் போட்டவுடன் போகாதே !

இரண்டு நிமிடம் கழித்து செல் என்றது!

அவரும் அதே போல் செல்ல, இவருக்கு முன் சென்ற ஓருவர் லாரி மோதி பலியாகி விட்டதை கண்டு,

சற்று பதட்டத்துடன் அலுவலகம் வந்து சேர்ந்தார்.

இவரது அலுவலகம் 7வது மாடியில்,

லிப்டுக்குச் செல்ல உள்ளே புகும் நேரத்தில்,

ஒரு கை அவரை வெளியில் பிடித்து இழுத்து, வாருங்கள் நடந்தே செல்லலாம் என்றது.

வந்தவரும் சுரேசும் படிக்கட்டு வழியாக நடந்து 3வது மாடி செல்லும் போது லிப்ட் கம்பி

அறுந்து அதில் சென்ற 4 பேர் மரணம் !

சுரேஸ்  : அய்யா, நீங்கள் யார் ? என்னை ஏன் காப்பாற்றீனீர்கள் ?

வந்தவர் : நான் தான் கடவுள் !

சுரேஸ் : அப்படியா ! இப்போது வந்து காப்பாற்றினீகளே ! ஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை!

கடவுள் : உன் மனைவியின் பிரார்த்தனையே!  உன்னை அப்போதும், இப்போதும் காப்பாற்றியுள்ளது.