Tuesday, July 12, 2016

இல்யுமினாட்டி ILLUMINATI i ஒரு உண்மை சம்பவம் :-)

இல்யுமினாட்டி ILLUMINATI

ஒரு உண்மை சம்பவம் :-)

சில ஆண்டுகள் முன்பு இல்லுமினாட்டிகள் மாநாடு ஒன்று நடந்ததுஅதில் உலகையே தம் கையில் வைத்திருக்கும் ரகசிய குழுவினரான இல்லுமினாட்டிகள் கலந்துகொண்டார்கள்.

உலகம் நல்லபடி ஆரோக்கியமாக இருக்கிறது. மக்கள் நல்ல உடல்நலனுடன், தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.இது தொடர்ந்தால் நம் ஆதிக்கம் என்னாவது?" என சொல்லி மாநாட்டை துவக்கினார்பிராக்டர_். இவர் _பிராக்டர், காம்பிள் கம்பனியின் முதலாளி.

"உண்மைதான் பிரதர். ஆனால் இதுக்கு என்ன செய்வது?குடிநீரில் எதாவது பாய்சன் கலந்துடலாமா?" என கேட்டார்மொன்சான்டோ.

"அதெல்லாம் வேண்டாம். நம்ம கிளப் விஞ்ஞானி ஆன்சல் கீஸ் ஒரு சூப்பர் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதன்படி உலக ஆரோக்கியம் கெடும். எல்லாரும் நம்மை நம்பி இருப்பார்கள். அது என்னன்னு கீஸ் விளக்குவார்"

கீஸ் மேடையேறினார்....!!

"வணக்கம் இல்யுமினாட்டி குழுவினரே. இத்திட்டத்தின்படி மக்களிடம் கொலஸ்டிரால் கெடுதல் என சொல்வோம். உடனே முட்டை, இறைச்சி, பேகன், லார்ட், பீஃப் போன்ற ஆரோக்கிய உணவுகள் வழக்கழியும்"

"ஆகா" என எழுந்து கைதட்டினார் கெல்லாக்ஸ் இம்யுமினாட்டி. " முட்டையையையும், பேகனையும் ஒழித்தால் கார்ன்பிளேக்ஸை வைத்து நான் உலக சந்தையை கைப்பற்றிவிடுவேன்"

"ஆனால் இது எப்படி நடக்கும்?" என ஆட்சேபம் தெரிவித்தார்பைசர் மருந்து கம்பனி இல்யுமினாட்டி. " மக்கா சோளம் மாடுகளை கொழுக்க போடும் உணவு. முட்டையையும், பேகனையும் விட்டுவிட்டு மக்கள் அந்த சுவையற்ற குப்பையை எப்படி தின்பார்கள்?"

சர்க்கரையை கலந்து, பேக்கிங்கை கவர்ச்சிகரமாக போட்டுவிளம்பரத்துக்கு ஒரு நடிகையை போட்டால் தீர்ந்தது"

"ஆகா... காலையில் 200 கிராம் சர்க்கரையுடன் நாளை மக்கள் துவக்கினால் டயபடிஸ் கும் என ஏறும்... இன்சுலின் விற்பனை, மாத்திரை விற்பனை கொடிகட்டி பறக்கும்" என கைதட்டினார் பைசர் இல்யுமினாட்டி

ஆனால் கொலஸ்டிராலை மோசம் என்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்? இறைச்சி பல லட்சம் ஆண்டுகளாக நம் உணவு ஆயிற்றே?" என்றார் கொகோ கோலா இம்யுனாட்டி

மக்கள் அந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் எல்லாம் இல்லை.இப்ப பாருங்க உங்க கோக் என்பது என்ன?"

தண்ணிஉப்புசக்கரைகார்பன்டைஆக்சைடு.தண்ணில ஏழு ஸ்பூன் உப்பை அள்ளிபோட்டு, உப்பின் சுவை தெரியகூடாதுன்னு 15 ஸ்பூன் சக்கரையை போட்டு, அதை கார்பநேட் செய்து விளம்பரத்துக்கு விளையாட்டு வீரர்களையும்நடிகைகளையும் வைத்து விற்கிறோம். உப்புதண்ணியை குடிச்ச மக்களுக்கு மேலும் தாகம் எடுக்கும். மேலும் கோக் குடிச்சுகிட்டே இருப்பாங்க..." என்றார்கோக் இல்யுமினாட்டி

"பாத்தீங்களா.... இந்த உப்புதண்ணிய பாட்டிலுக்கு 30 ரூபா கொடுத்து வாங்கிகுடிக்கறான். மக்கா சோளத்தையா தின்னாம இருப்பான்" என சிரித்தார் கெல்லாக் இல்யுமினாட்டி

கூட ப்ரோட்டின்னு சொல்லி இந்த சோயா புண்ணாக்கை_யும் கலந்துடுங்க. சோயாபீன் ஆயில் எடுத்தபின் நெறைய சோயா புண்ணாக்கு மீதமாகுது. _மாடு எல்லாம் அதை சாப்பிடமாட்டேங்குது. வாயில் வெக்க முடியாத அளவு கேவலமான டேஸ்ட். அதை மனுஷர்களுக்கு தள்ளிவிட்டால் என்ன?" என்றார்மான்சன்டோ இல்யுமினாட்டி

முட்டை, மட்டன்ல இல்லாத ப்ரோட்டினா? அது கெடுதல்னுட்டு இந்த புண்ணாக்கை தின்ன சொன்னால் எவன் திம்பான்" என்றார் மேகி நூடில்ஸ் இல்யுமினாட்டி

"அதுக்கு தான் நாம கொலஸ்டிரால் எனும் பிரம்மாஸ்திரத்தை வெச்சிருக்கமே? சோயா புண்ணாக்கு டேஸ்ட் கருமாந்திரம் மாதிரி இருக்கும்தான். அதுக்கு தான் கூட இந்த கெமிக்கலை எல்லாம் கலந்து, செயற்கை சுவையை கொண்டுவந்துடலாம்டோபு, மீல்மேக்கர், டெம்பே_ன்னு சந்தைபடுத்தி ப்ரோட்டின்னு சொன்னா எல்லாரும் விழுந்தடிச்சு வாங்குவாங்க" என்றார் _மன்சான்டோ இல்யுமினாட்டி

கூட கொஞ்சம் மரத்தூளையும் கலந்திடுங்க. அதை செல்லுலோஸ்னு இன்க்ரிடியண்ட் பட்டியலில் போடுவோம். மரத்தூளை தின்னால் பேதியாகும். தினமும் காலையில் டூ பாத்ரூம் தவறாம போனால் மக்கள் சீரியலை ஆரோக்கிய உணவுன்னே நம்பிடுவாங்க" என்றார் கீஸ்.

" அப்புறம் யாரும் சாப்பிடாததால் மிச்சமாகும் பால், முட்டை, மட்டனையெல்லாம் என்ன பண்றது?" என்றார்மான்சான்டோ இல்யுமினாட்டி.

அதை எல்லாம் ப்ராசஸ் செய்து ப்ரோட்டின் பவுடர்னு கிலோ மூவாயிரம் ரூபாய்க்கு சந்தைக்கு கொண்டுடுவந்துடமாட்டொம்" என சொல்லி விழுந்து, விழுந்து சிரித்தார் ஆம்வே இல்யுமினாட்டி

தப்பி தவறி கூட நாம யாரும் இந்த புண்ணாக்கு, தவிடையெல்லாம் தின்னுட கூடாது" என எச்சரித்தார் கோக் இல்யுமினாட்டி. "அதெல்லாம் மக்களுக்கு நாம் விடும் கதைதான்"

என்ன பிரதர். அதையெல்லாம் நாம என்னிக்கு சாப்பிட்டிருக்கோம்? எந்த மல்டிநேஷனல் கம்பனி முதலாளியாவது குண்டா இருந்து பார்த்ததுண்டா?பில்கேட்ஸ், கோக், மெக்டானல்ட்ஸ், மார் சுக்கர்பெர்க், ரத்தன் டாட்டான்னு நம்ம இல்யுமினாட்டிகள், குப்பை உணவு கம்பெனி இல்யுமினாட்டிகள் எல்லாம் எத்தனை ஒல்லியா இருக்காங்க?"

"ஆனால் இதை நம்பி குண்டாகி, வியாதிகளை வரவழைத்துகொள்ளப் போகும் ஜனங்களை நினைச்சால் சிரிப்பே நிக்கமாட்டேங்குது" என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார்கள் இல்யுமினாட்டிகள்.

இது கற்பனை அல்ல.. உண்மை..