Saturday, September 18, 2010

மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.

பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

Ø
துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்?

உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு :

வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்

Ø
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை;

தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்

Ø
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள்.

குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள்.

முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

Ø
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது.

அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

Ø
பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்.

ஒன்று அழகானவர்கள்.

மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

Ø
அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

Ø
பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

Ø
நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்

ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø
சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø
வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.

பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø
மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது

நண்பனைப் பற்றி நல்லது பேசு.

விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø
அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø
நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø
பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல,

தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது.

ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.