Monday, May 17, 2010

(தி.மு) திருமணத்திற்கு முன் (தி.பி) திருமணத்திற்குப் பின்

(தி.மு) திருமணத்திற்கு முன்

(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள்   : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன்   : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள்    : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன்    : ஆமாம், இன்றும், என்றென்றும்

அவள்     : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன்     : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள்     : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்     : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள்     : என்னை திட்டுவாயா ?

அவன்     : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின்

கீழிருந்து மேலே படியுங்கள்