Friday, October 5, 2012
Doctors often ask for needless tests
"On many occasions, doctors ask for tests that are unnecessary. Similarly, there are drugs that have become outdated or whose efficacy isn't proven. But doctors keep prescribing them. Unless there are standard guidelines on treatment of certain illnesses, such misuse will keep happening," said Dr Kameshwar Prasad, head of the clinical epidemiology unit at AIIMS.
With the number of cases involving unwarranted prescriptions of surgical procedures, diagnostic tests and medication increasing, Dr Prasad said patients must ask their doctor about the pros and cons of the treatment offered before making a decision.
To create awareness on the issue, AIIMS will hold an international meet — the first of its kind in the world — where experts will discuss how standard guidelines can be evolved for treating diseases.
Dr Prasad said unnecessary diagnostic tests and surgical procedures not just put additional financial burden but also affect the patient's recovery. "We are also proposing that evidence-based treatment methodologies should be emphasized in medical schools," he said.
AIIMS's neurology department recently screened prescriptions of 250 brain stroke patients referred from different hospitals.
Many drugs, operations prescribed without need
Doctors at AIIMS who recently screened prescriptions of 250 brain stroke patients referred from different hospitals said they found more than 48% of them were prescribed a particular drug which is not approved. "Either the doctor did not know about it or he used it despite knowing that it's not effective for the condition. In both cases, the patient had to suffer," the senior neurologist said.
Experts said among the most misused procedures were hysterectomy (uterus removal), caesarean section and angioplasty for artery blockage. Among drugs, the most commonly misused were vitamins, steroids and antioxidants. According to Dr Paul Glaszious, former director of Oxford University's Centre for Evidence-based Medicine, MRI and CT scan are also being overused. "Vertebroplasty - a spinal procedure where bone cement is injected into fractured vertebra - has proved to be ineffective in many studies. Still, it is being used as a treatment method in patients complaining of backache," he said.
In the case of angioplasties, experts said patients were most often not given time to decide whether they need to go for the procedure or not. For every patient with a blocked artery, there are three lines of treatment open - drug treatment, angioplasty and surgery.
A recent study in US showed that only 36% of patients who had undergone non-emergency angioplasty to clear a clogged artery actually met the criteria for the procedure. In 50% of the cases, there was not enough evidence to show angioplasty would help and in 14%, the procedure was definitely not required. The study was published recently in the Journal of the American College of Cardiology.
In the study, researchers gathered data from more than 24,000 angioplasty patients at 58 hospitals in New York State between 2009 and 2010, and measured how well the physicians stuck to the angioplasty guidelines advised by the American Heart Association and the American College of Cardiology.
Said Dr Ashok Seth, chairman, cardiovascular sciences division at the Fortis Escorts Heart Institute, "Emergency procedures are not required in most cases, except for conditions such as heart attacks and unstable angina (chest pain) where a patient has to undergo stenting or surgery within 12 hours. In my view, anybody who can walk 500 metres without chest pain or exertion can wait. Patients must think over seriously and weigh the benefits of medicine versus surgery versus angioplasty before saying yes to any one treatment."
"Every hospital should conduct an audit of various procedures carried out, say in a month. This would give us much-needed data about how prevalent each procedure is, and whether it is being misused," Dr Prasad said. He also urged patients to question their doctors constantly on their line of treatment and the tests prescribed by them.
Monday, October 1, 2012
விதுர நீதி - ஞான தத்துவப் பொக்கிஷம்
எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது. 'எல்லாம் எனக்குத் தெரியும்' என்று நமக்கு நாமே பெருமை பாராட்டிக்கொண்டாலும், நமக்குத் தெரியாதவை கோடிக்கணக்கில் உண்டு. அதே நேரம், நாம் தெரிந்துகொண்டவற்றால் நம் வாழ்க்கைக்கு ஏதாவது பலன் உண்டா என்பதையும் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வெறும் தகவல் களஞ்சியங்களாக இருப்பதில் என்ன பலன்?
உலகத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் கணினியில் (கம்ப்யூட்டரில்) இருக்கின்றன. அதனால் அந்தக் கணினிக்கு ஏதாவது பலன் உண்டா? இல்லையே!
ஆனால், ஒரு விஷயத்தில் கணினி ஒழுங்காக இருக்கிறது. ஒரு தட்டு தட்டினால், எதைக் கேட்டாலும் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறது. 'எனக்குத்தான் எல்லாம் தெரியும்' என்று குதிப்பதில்லை. ஆனால்... 'நான் நடமாடும் தகவல் களஞ்சியமாக்கும்!' (மொபைல் என்ஸைக்ளோபீடியா) என்று தற்பெருமை பேசிக்கொள்ளும் நாமோ உணர்ச்சிக்குவியல்களாக, ஆசை, வெறுப்பு, கோபம், குழப்பம் ஆகியவற்றின் களஞ்சியங்களாக இருக்கிறோம்; அமைதியின்றித் தவிக்கிறோம். ஏன் இப்படி?
இதற்கான காரணத்தை, நமது முன்னோர்கள் பலவிதங்களிலும் சொல்லி இருக்கிறார்கள். அதுவும்... எளிமையாக, மிகவும் அழகாகக் கதை வடிவில் சொல்லி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்று இது; ஆழமான தத்துவத்தைச் சொல்லக்கூடிய இதை எழுதியவர் யார் என்பதை பார்க்கும்முன், கதையைப் பார்ப்போமே! கதை முடியும் வரை, எந்தவிதமான ஆராய்ச்சியும் வேண்டாம். இதோ கதை...
ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான்.
அப்போது மிகவும் கோரமான- அவலட்சணமான- யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் 'தடக் தடக்' என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது.
''அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்!'' என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே... அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.
அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க... 'கரக்... கரக்...' என்று சத்தம் கேட்டது. பார்த்தால்... அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன.
இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்... உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்... அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான்.
'என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது!' என்றுதானே நினைக்கிறீர்கள்? அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்!
கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.
கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள்- பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம்.
அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம்.
ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம்.
கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன்.
மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்த்தோமே... அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும்.
மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு- வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ் நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.
தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்துவிடுகிறோம். அதாவது... தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பிவிட்டதாக நினைத்து, சின்னஞ்சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம்.
கதை வடிவாகச் சொல்லி இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது, விதுர நீதி. நீதி நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் முதலிடம் பிடித்திருப்பது விதுர நீதிதான். அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்ததான நீதி நூல் இது.
விதுரர், திருதராஷ்டிரனுக்குச் சொன்ன ஞான தத்துவப் பொக்கிஷம் இது. பாரத நாட்டின் பழம்பெரும் பொக்கிஷமாகவே இதை அயல்நாட்டுக்காரர்கள் மதிக்கிறார்கள்.
ஏன் இப்படி வயித்துக்கு வஞ்சனை பண்றீங்க?
சாப்பிடாமல் கொள்ளாமல் கிளம்பினாலோ அல்லது பரபரவென வேறு வேலைகளால் சாப்பிடாமல் இருந்துவிட்டாலோ, மனைவியோ பெற்றவர்களோ நண்பர்களோ அக்கறையுடன் கேட்பார்கள்... 'ஏன் இப்படி வயித்துக்கு வஞ்சனை பண்றீங்க?' என்று.
'அட... பேசிக்கிட்டே இருந்ததுல சாப்பிடணும்கற எண்ணமே மறந்து போயிடுச்சு' என்றோ, 'வேலை மும்முரத்துல சாப்பாட்டு ஞாபகமே இல்லை' என்றோ சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆக, வயிறு என்பதை, சாப்பிடுகிற உணவையெல்லாம் அடைத்து வைத்துக்கொண்டு உடலுக்குத் தெம்பைத் தருகிற ஒரு இயந்திரமாக, சாப்பாடு தேவை என்பதைச் சொல்கிற அலாரமாகப் பார்க்கிறோம். உண்மையில், வயிறு என்பது நம் ஒருநாளின் நிம்மதியைக் கெடுக்கவல்லது அல்லது சந்தோஷத்தைத் தரவல்லது என்பதை அறிவீர்களா?
அந்தக் காலத்திலேயே அழகாகக் சொல்லி வைத்தார்கள்... 'மனச்சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் வரும்' என்று. அதாவது, உடல் மற்றும் மனத்தில் எங்கேனும் ஏதேனும் கோளாறு என்றால், அது உடனடியாக வயிற்றையும் தாக்கும். அந்த அளவுக்கு ரொம்பவே சென்சிடிவ்வான பகுதி அது!
வயிறு என்பதை பண்டம் அடைக்கிற பார்சல் டப்பாவாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர். எண்ணெய்ப் பதார்த்தங்கள் கொண்ட உணவை உட்கொள்ளும் போக்கு சமீபகாலங்களில் அதிகரித்துவிட்டது. இதுமாதிரியான உணவுகள் வயிற்றைப் பதம் பார்ப்பவை; மெள்ள மெள்ள வயிற்றைச் சேதப்படுத்தக் கூடியவை. வயிற்றுக்குச்சிக்கல் ஏற்படுத்தாத உணவுகள் எவை என்பதில் ஒரு தெளிவு நம்மிடையே உடனடியாகத் தேவை.
'என்னன்னே தெரியலை... வயிறு உப்புசம் பிடிச்சது போல இருக்கு. புளிச்ச ஏப்பமா வருது. அடிக்கடி உடம்பே சோர்வாயிடுது. குறிப்பா, சாப்பிட்டு முடிச்சதும் ஒரு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்யமுடியாம முடக்கிப் போட்டுடுது' என்று புலம்புகிற அன்பர்கள் இருக்கிறார்கள்.
காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சரியான நேரத்துக்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், அளவான உணவை மட்டுமே சாப்பிடவேண்டும். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்' என்று நம் முன்னோர்கள் அளவுமீறலை நெத்தியடியாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
கூடுமானவரை பிடித்தமான உணவைச் சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்த உணவு, சத்தானதாக இல்லை, எண்ணெய்ப் பதார்த்த உணவு என்பதாக இருந்தால், அவற்றை முழுவதுமாக விலக்கிவைத்துவிடுங்கள். பிறகு, சத்தான உணவு எவை எவை என்று ஒரு பட்டியல் போட்டுக்கொண்டு, அவற்றில் எது எது உங்களுக்குப் பிடித்தமானதோ அவற்றை காலை, மதியம், இரவு எனச் சாப்பிடுங்கள். 'சத்தான உணவுன்னு நல்லாவே தெரியுது. ஆனா, எதுவும் எனக்குப் பிடிக்கலையே...' என்கிறீர்களா? கொஞ்ச நாளைக்குக் கண்களை மூடிக்கொண்டு, முகத்தைச் சுளித்துக்கொண்டு, கடகடவெனக் கசப்பு மருந்தைச் சாப்பிடுவதுபோலச் சாப்பிட்டுவிடுங்கள். நாளாக ஆக, அந்த உணவே உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக மாறியிருக்கும், பாருங்களேன்!
பொதுவாக, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் விருந்து தடபுடலாக இருக்கும். வழக்கத்தைவிடக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவோம். வழக்கத்தைவிட நாலு கவளம் சாதம் அதிகமாக இறங்கியிருக்கும். முக்கியமாக சாம்பார், ரசம், மோர் என்கிற வரிசையில், சாம்பாருக்கு முன்னதாக பருப்பு, ரசத்துக்கு முன்னதாக மோர்க்குழம்பு அல்லது காரக்குழம்பு, தவிர, எலுமிச்சை, புளியோதரை, ஃப்ரைடு ரைஸ் என ஒரு சித்ரான்னம் என தடபுடலான விருந்தும், ஆளை அசத்துகிற உணவு வகைகளுமாக இருக்க... நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுகிற ஆசை யாருக்குத்தான் இருக்காது?!
ஆனாலும், இங்கே கொஞ்சம் நிதானம் தேவை. நாம் வழக்கமாகச் சாப்பிடுகிற மொத்த அளவில் இருந்து கொஞ்சமும் கூடுதலாகாமல், அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவதே புத்திசாலித்தனம். இல்லையெனில் வயிற்றுக்குத்தான் சங்கடம்! 'வயிற்றுக்குத்தானே... பார்த்துக் கொள்ளலாம்' என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். வயிற்றில் ஏதும் கோளாறு என்றால், அது ஒட்டுமொத்தமாக உங்களையும் உங்கள் உடம்பையும் தாக்கும். உங்களின் ஒரு நாளையே பாழாக்கிவிடும்.
ஆகவே, வயிற்றுப் பகுதியையும் இடுப்புப் பகுதியையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு. வயிற்றுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, அமைதிப்படுத்துவது மிக மிக அவசியம்.
விரிப்பு ஒன்றில் மல்லந்து படுத்துக்கொள்ளுங்கள். மொத்த உடலையும் தளர்த்திக் கொண்டு, கண்களை மூடிக் கொள்ளுங்கள். கால்களைப் பிரித்து வைத்துக்கொண்டு, தளர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
பாதங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். 'ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிர் ஓட்டம் ஆகியவை சீராக நடைபெறுகின்றன. பாதங்கள் போதிய வலுவும் பலமும் பெறுகின்றன. பாதங்கள் ஓய்வு பெறட்டும், ஓய்வு பெறட்டும், ஓய்வு பெறட்டும்... ஓய்வு ஓய்வு ஓய்வு' என்று மனத்துக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள்.
அதேபோல்... கெண்டைக்கால், முழங்கால், தொடைப் பகுதி, இடுப்பு என ஒவ்வொரு பகுதியையும் கூர்ந்து நோக்கியபடி, கண்களை மூடி, மனத்தால் கவனித்து, ஒவ்வொன்றும் ஓய்வு எடுத்து வருவதாகச் சொல்லிக் கொள்ளுங்கள்.
அடுத்து, வயிற்றுப் பகுதியையும் தளர்த்திக் கொள்ளுங்கள். 'என் வயிற்றுப் பகுதியும் வயிற்றின் உள்உறுப்புகளும் சீராக இயங்கிக்கொண்டிருக்கின்றன' என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். 'வயிறு மற்றும் உள் உறுப்புகள் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றன' என்று சொல்லுங்கள். சன்னமான குரலில், 'ஓய்வு ஓய்வு ஓய்வு...' என்று மனத்துக்குள் மந்திரம் போல் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருங்கள்.
பாதங்களும் கால்களும் கனமே இல்லாதிருப்பதை உணர்வீர்கள். அங்கே இருந்த வலியெல்லாம் எங்கே போயிற்று எனத் தெரியாமல் இருப்பீர்கள். கெண்டைக்காலில் தங்கியிருந்த வேதனையும், முழங்காலில் குடியேறிய வலியும் காணாது போயிருக்கும். எந்நேரமும் இறுக்கமாக இருந்த தொடை தளர்ந்து, வலியற்று, தக்கையாகிக் கிடக்கும்.
'குனிந்தால் நிமிர முடியலை; நிமிர்ந்தால் குனிய முடியலை' என்றிருந்த இடுப்புப் பகுதியில், ஒருவித மலர்ச்சி ஏற்பட்டிருக்கும். குனிந்த முதுகை நிமிர்த்தியோ நிமிர்ந்த முதுகை குனிய வைத்தோ பார்க்க... இறுக்கமும் வலியும் தசைப் பிடிப்பும் எங்கோ பறந்து போயிருப்பதை உணர்ந்து சிரிப்பீர்கள்; சிலிர்ப்பீர்கள்!
உடலுக்குத் தருகிற ஓய்வு, நம் மொத்த மகிழ்ச்சிக்கும் சிரிப்புக்கும் அஸ்திவாரம் என்பதை உணர்கிறீர்கள்தானே?!
