Tuesday, June 30, 2015

என் அனுபவம் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்!

நகைச் சீட்டு... நாணயமற்ற போக்கு!

சிதம்பரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் மாதாந்தர சீட்டு கட்டி முடித்து, நகை வாங்க கடைக்குச் சென்றேன். நான் சேர்த்த தொகைக்கு நகையைத் தேர்வு செய்துவிட்டு பணம் கட்ட வேண்டிய இடத்தில் பாஸ்புக்கை நீட்டினேன். உடனே ``மேடம், நகையைத் தேர்வு செய்றதுக்கு முன்னாடியே `சீட்டு'ன்னு சொல்லக் கூடாதா?!'' என்று பதறினார் அந்த ஊழியர். உடனே நான், ``எல்லாமே தங்க நகைகள்தானே... சீட்டுக்குனு தனியா தரமில்லாத நகையா தருவீங்களா?'' என்று கேட்டதும், நான் தேர்வு செய்திருந்த அதே நகையைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

நான் இப்படி செய்ததற்குக் காரணம்... என் தோழி பெற்ற அனுபவம்தான்! ``முதலில் சீட்டைக் காட்டிவிட்டால் அதுக்குன்னு சில நகைகள் வெச்சிருக்காங்க... எல்லாம் பழைய டிசைன். சீட்டுக்கு இதான் என்று தலையில் கட்டிவிடுவார்கள்'' என்று கூறியிருந்தாள்.

ரொக்கத்துக்கு ஒரு மாதிரி, சீட்டு கட்டி நகை வாங்கு வோருக்கு ஒரு மாதிரி என்று ஏன் இப்படி ஏமாற்று வேலையில் இறங்குகிறார்களோ?!

சீட்டு கட்டி நகை வாங்கும் பெண்களே... எச்சரிக்கையாக இருங்கள்.

நம்பிக்கை விளக்கு ஏற்றுங்கள்!

சமீபத்தில் என் கணவருக்கு பாஸ்போர்ட் அப்ளை செய்யச் சென்றபோது, அந்த அலுவலகத்தின் அருகிலிருந்த ஜெராக்ஸ் கடைக்குச் சென்றோம். அங்கிருந்த பெரியவர், என் தோழியின் தந்தை போல் தெரியவே... அறிமுகம் செய்துகொண்டு தோழியைப் பற்றி விசாரித்தேன். ``என் பொண்ணு வர்ற நேரம்தான்" என்றார். சில நிமிடங்களில் அங்கு வந்த தோழி, அன்போடு நலம் விசாரித்தாள்.

"என்னடி, உனக்கு உலகமே தெரியாதுனு நெனைச்சேன். இப்போ முதலாளியா இருக்கே!" என்றேன். அதற்கு அவள், "இல்லடி, எங்கப்பாவுக்கு ஓய்வூதியம் கிடைச்சப்போ எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணினார். நான்தான் `எனக்கு ஜெராக்ஸ், ஜாப் டைப்பிங் கடை வெச்சுத் தாங்க'னு கேட்டேன். இந்த கடையை வெச்சுக் கொடுத்தார். நல்லா போயிட்டிருக்கு. அதுல ரெண்டு பொண்ணுங்க வேலை பார்க்கிறாங்க. என் கல்யாணத்துக்கு தேவையான நகையை இந்த வருமானத்திலயே எடுத்துட்டிருக்கேன். விரைவில் திருமண அழைப்பிதழோட உன் வீட்டுக்கு வர்றேன்" என்றாள்.

பெண்களை நம்பி அவர்களின் பெற்றோர் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால், குடும்ப பாரத்தைக் குறைப்பார்கள் என்பதை கண்கூடாக பார்த்ததில், உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது எனக்கு! 

`மிஸ்டு கால்' வினை!

டி.வி-யில் ஒரு விளம்பரம் கண்டேன். அதில் சமையல் வேலையை சுலபமாக்கும் நவீன வீட்டு உபயோகப் பொருட்களைப் பற்றி பேசினர். ``எங்கள் செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். நீங்கள் விரும்பும் பொருள் பற்றி விரிவாக விளக்கம் தருவோம். பொருளை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு உரிய பணத்தைப் பெற்றுக் கொள்வோம்'' என்றனர். ஒரு பொருள்மீது ஆர்வம் கொண்டு மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன். அதன் பின் கணவரிடம் சொல்ல... அவர், ``இதுபோன்று வாங்கப்படும் பொருட்களில் பலதும் தரமற்றவையாக இருக்கும்'' என்று தமது நண்பர்களின் அனுபவத்தைப் பகிர்ந்தார். இதனால், மேற்கொண்டு அந்தப் பொருளை வாங்க நான் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால், நான் ஆலோசிக்காமல் கொடுத்த மிஸ்டு கால் என்னை பெரும் அவஸ்தைக்கு ஆளாக்கிவிட்டது.

அந்த விளம்பர கம்பெனியினர் தினமும் ஐந்து ஆறு முறை வெவ்வேறு எண்களில் போன் செய்து ``மேடம்... ஆர்வமாக மிஸ்டு கால் கொடுத்தீர்களே! எந்தப் பொருள் வேண்டும்? உங்கள் விலாசத்தைச் சொல்லுங்கள். வீட்டுக்கு கொண்டு வருகிறோம்... அப்போது பணம் கொடுத்தால் போதும்" என்று ஒரு வாரத்துக்கு கேட்டுக்கொண்டே இருந்தனர். கடைசியில் பொறுமை இழந்த நான் மிகவும் கோபமாக பேசியவுடன்... போன் தொல்லை நின்றது.

தோழியரே... என் அனுபவம் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்!

வளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்!

வளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்!

பிறந்த குழந்தைகளில் இருந்து பாட்டிகள் வரை, வளையல் என்பது பெண்களுக்கு ஆபரணம் என்பதற்கு மேலாக, உணர்வுடன் கலந்த விஷயம்!

''வளையல் அணியும் பழக்கத்தை காரணமாகத் தான் ஏற்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர். வளையல் அணிவதால் பெறும் மருத்துவப் பலன்கள் நிறைய!'' என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா, அவற்றை விளக்க விளக்க... சுவாரஸ்யமானோம்!

''வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். நமது எண்ணங்கள் தெளிவு பெறும். மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி அணியப்படும் வளையல், மேலும் கீழுமாக அசைவுறப் பெறுவதால் ஒரு சின்ன சூடு உண்டாகும். இது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.

இப்போது பல வடிவங்களில் வளையல்கள் கிடைக்கின்றன. ஆனால், பாரம்பர்ய வட்ட வடிவ வளையல் அணிவதே சிறந்தது. வளையலின் சிறப்பம்சமே, அதன் வட்ட வடிவம். இதனால் எப்போதும் ஒரு சந்தோஷ மனநிலையிலேயே இருப்போம். தொடர்ந்து குலுங்கக் குலுங்க வளையல் அணிபவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராது. சீரற்ற மாதவிடாய் ஏற்படாமலிருக்கும்.

தங்கம், வெள்ளி, கண்ணாடி மற்றும் பித்தளை வளையல்கள் அணிவது பரிந்துரைக்கத்தக்கவை. பருமனான உடல்வாகு கொண்டவர்கள் செம்பு வளையல்கள் அணியலாம். உடலில் தேவையில்லாத கொழுப்பை கரைக்க அது உதவும். பித்தளை வளையல் கனமாக இருக்கும். அதனால், கைகளில் இருக்கும் பிரெஷர் பாயின்ட்டுக்கு நல்லது. 

`சீ ஷெல்' (சிப்பி, கிளிஞ்சல்) வளையல் கள் அணிந்தால், வாயுத்தொல்லையில் இருந்து  நிவாரணம் கிடைக்கும். பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை'' 


கர்ப்பிணிப் பெண்கள் வளையல் அணிய வலியுறுத்தப்படுவதன் அறிவியல் காரணம் ''கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே பெண்கள் தங்க வளையல் அணிவது நல்லது. தங்கம், ஒரு சிறந்த ஆன்டிபயாடிக்காகச் செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வயிற்றில் இருக்கும் குழந்தையும் நல்ல மூளை செயல்பாட்டுடன் வளரும். பின், வளைகாப்பு நாளில் இருந்து கண்ணாடி வளையல் அணிந்துகொள்ளலாம்.  குழந்தைக்கு அதன் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும், கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.  பிரசவத்துக்குப் பின் ஏதாவது ஒரு வகை வளையல் கண்டிப்பாக அணிய வேண்டும்'' 


வளையல்களை எப்படி அணிய வேண்டும். ''மணிக்கட்டில் இருந்து கைமூட்டு வரை, சின்னதில் இருந்து பெரிதாக வளையல் அணிவது சிறப்பு. தளர்வாக வளையல்கள் அணிய வேண்டாம். கையில் ஒட்டி உரசிக்கொண்டே இருப்பதுபோல, சின்ன வளையல்களாக அணியலாம். ஃபேஷனுக்காக ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரு கையில் மட்டும் வளையல் அணிவதால் எல்லாம் பலன் எதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில், மங்களகரமான நிறங்கள் என்பதால் பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்களைத்தான் சடங்கு, திருமணம், வளைகாப்பு என சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். குணம் பெற உதவும் சக்தி பச்சை நிறத்துக்கு உள்ளது என்பதால்தான் மருத்துவமனைகளில் பச்சை நிறத்தைப் பயன் படுத்தியிருப்பார்கள்.

ஊதா வளையல்கள், முடிவெடுக்கும் திறனை அதிகரிக்க செய்யும். பர்பிள் வளையல்கள், சுய சுதந்திர எண்ணத்தை அதிகரிக்கும். மஞ்சள் நிற வளையல்கள், பாசிட்டிவ் எண்ணத்தைக் கொடுக்கும். கறுப்பு நிற வளையல்கள், மன தைரியத்தை அதிகரிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள், எதிர்மறை எண்ணங்கள் நம்மை அண்ட விடாது!'' 

இனி, ஆரோக்கியத்தை நினைத்தும் அணிவோம் வளையல்!

அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?!

அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?!

''என் 6 வயது மகள், பள்ளிக்குக் கொண்டு செல்லும் மதிய உணவில் முக்கால்வாசியை வீட்டுக்குக் கொண்டுவந்து விடுகிறாள். வீட்டில் நான் போராடுவதுபோல, பள்ளியில் அவள் டீச்சரும் எவ்வளவோ அதட்டிப் பார்த்தும் பலனில்லை. உண்மையில், என் குழந்தையைச் சாப்பிட வைப்பதுதான் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய சவால்!''

- மதுரையைச் சேர்ந்த இந்தத் தாயின் புலம்பலை, உலகத் தாய்களின் பொதுக் கதறல் என்றே சொல்லலாம்.

குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கும், ஜங் ஃபுட் விரும்புவதற்கும், சத்தான உணவுகள் பற்றி அறியாமல் இருப்பதற்கும், டி.வி பார்த்துக்கொண்டே, மொபைலில், `டேப்'பில் விளையாடிக்கொண்டே சாப்பிடுவதற்கும்... இப்படி குழந்தைகளின் தவறான உணவுப் பழக்கங்கள் அனைத்துக்கும் காரணம் குழந்தைகள் அல்ல; பெற்றோர்களே! அதை மறுப்பதை விட்டு, இந்தத் தவறுகளை எப்படி சரிசெய்துகொள்வது என்று பார்ப்போம்!

'பீட்சாவில், என் பிள்ளைக்கு பார்பெக்யூ சிக்கன்தான் பிடிக் கும்', 'நான் அவன் ஸ்நாக்ஸுக்கு `சாக் கோ-பை' முழு பாக்ஸே வாங்கி வெச்சிருவேன்', 'நியூட்ரிலா இல்லாம அவன் இட்லி சாப்பிடவே மாட்டான்' - இப்படி எல்லாம் பேசும், இதையெல்லாம் செய்யும் பெற்றோரின் மனநிலை ஒன்றுதான்... 'நாங்கள் எங்கள் பிள்ளைக்கு விலை உயர்ந்த உணவுப் பொருட்களை வாங்கித் தருகிறோம்!' என்ற பெருமையை வெளிப்படுத்துவது. குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கிய மல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில், ஜங் ஃபுட்கள் வாங்கிக் கொடுத்து, தங்கள் 'ஸ்டேட்டஸ்'ஸை குழந்தைகளின் உணவிலும் நிரூபிக்க விளைகிற பெற்றோர்கள், உண்மையில் உங்கள் பெருமைக்காக அவர்களின் ஆரோக்கியத்தைச் சிதைக்கிறீர்கள் என்பதே உண்மை.

'மேகி' விவகாரம், உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படும்போது நஞ்சாக மாறுவதை உரக்கச் சொல்லிவிட்டது. இன்னமும், 'என் பிள்ளைக்கு பேக்டு ஸ்நாக்ஸ் அயிட்டம் வாங்க சூப்பர் மார்க்கெட் போறேன்!' என்றால், 20 வயதுகளிலேயே அவர்களுக்காக டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டி வரலாம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.

'சத்தான உணவாகக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்' என்றால், 'சத்தான உணவு என்றால் என்ன?' என்கிறார்கள் பெற்றோர்கள் சிலர். வீட்டில், சுகாதாரமான முறையில் நாம் தயாரிக்கும் இட்லி, தோசை, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சட்னி... சாம்பார், காய் பொரியல், கீரை, கூட்டு, ரசம் என சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்படாத நம் அன்றாட சமையலே ஆரோக்கியமான உணவுதான். ஆப்பிள், ஆரஞ்சைவிட, கொய்யா, சப்போட்டா, மா, வாழை என நம் மண்ணின் தோட்டத்தில் விளையும் பழங்கள் தரவல்ல சத்துகள் நிறைய! சிறுதானியங்கள் பற்றிய விழிப்பு உணர்வு பெருகியுள்ள நிலையில், ஏற்கெனவே சில அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவற்றை விரும்பும் சுவையில் சமைத்துத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கோலா பானங்களுடன் சோம்பேறித்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, மோர், பானகம், பழ ஜுஸ் செய்து தந்தால், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அது எந்தளவுக்கு பலம் சேர்க்கும் தெரியுமா?!

அடுத்ததாக, குழந்தைகளுக்கு சாப்பிடும் முறையே தெரியவில்லை. எப்படித் தெரியும்? பெற்றோர் கற்றுக்கொடுத்தால், அவர்கள் அதன்படி நடந்தால்தானே குழந்தைகளுக்கு அது பற்றித் தெரியும். அம்மாக்கள், தட்டு நிறைய சோறு போட்டுக்கொண்டு, 'இன்னிக்கு கூட்டு நல்லாயிருக்கா', 'இந்த மட்டன் சூப் குடிச்சா பீமன் மாதிரி ஆயிடலாம்' என்று உணவைப் பற்றிய சிறு அறிமுகம் கொடுத்து, பின்னர் குழந்தைகளின் கண்கள் விரிய கதை சொல்லிக்கொண்டே கைகளால் ஊட்டிவிட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. குழந்தையின் ஒரு கையில் தட்டையும், இன்னொரு கையில் ரிமோட்டையும் கொடுத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போகும் 'பரபர' அம்மாக்களால், டி.வி பார்த்துக்கொண்டே, என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்றே அறியாமல் சாப்பிடுகிறார்கள்... இல்லை, விழுங்குகிறார்கள் குழந்தைகள்.
 
தரையில் சம்மணமிட்டு அமர வைத்து, தட்டும் தண்ணீரும் வைத்து, 'சூப், குழம்பு, ரசம், தயிர்... இந்த வரிசையில்தான் சாப்பிடணும். கடைசியில பாயசம் குடிச்சா, அந்த இனிப்பு செரிமானத்துக்கு உதவும்' என்று கற்றுக்கொடுத்து, 'சிங்கராஜா எப்பவும் சாப்பாட்டை நல்லா மென்றுதான் சாப்பிடுவார். அதனாலதான் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கார். நீயும் நல்லா மென்று சாப்பிடணும்', 'கேரட் சாப்பிட்டா, கண்ணுக்கு அவ்வளவு நல்லது', 'குட்டிப் பாப்பாவுக்கு நிறைய முடி வளரணும்னா, கொஞ்சம் கீரை சாப்பிடணும்' என்று கதைகள் பேசி... இப்படியெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணவு முறைக்காக மெனக்கெட்டும், அவர்கள் 'டி.வி போட்டாதான் சாப்பிடுவேன்' என்றால், பிறகு சொல்லுங்கள்!

'அய்யோ... நான் எவ்வளவு போராடியும் என் பிள்ளை சாப்பிடவே மாட்டேங்குது. சாப்பாட்டைப் பார்த்தாலே அதுக்கு உமட்டுது!' - முக்கியப் பிரச்னை இதுதான். இதற்கு சில தீர்வுகளைப் பார்ப்போம். ஒரு விஷயத்தை குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தி திணித்தால், ஒரு கட்டத்தில் அது அவர்கள் மனதில் வெறுப்பாக மாறிவிடும். எனவே, அவர்களுக்குப் பசி எடுத்த பின்னரே உணவு கொடுங்கள். பசிக்காத வயிறுடன் இருக்கும் பிள்ளையை, 'சாப்பிடு சாப்பிடு' என்று அரற்றினால், வாயைத் திறக்காது. 'அவ காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும்கூட பட்டினியா கிடப்பா' என்றால், சரி கிடக்கட்டும்! அதற்கு மேல்..? 'அம்மா பசிக்குது!' என்று நிச்சயமாக வரும். அப்போது, அதற்குப் பிடித்த உணவைக் கொடுங்கள்.

சில குழந்தைகள் எந்த உணவின் மீதும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். தோசையை பொம்மை வடிவில் ஊற்றிக் கொடுப்பது, ஆங்கில எழுத்துக்களின் வடிவில் ஊற்றிக் கொடுப்பது, மினி இட்லிகள் செய்து கொடுப்பது, சாதத்தில் கேரட் பொரியலை ஸ்மைலை வடிவில் பரப்பி சாப்பிடச் சொல்வது, அரைக்கீரையை மாவுடன் கலந்து 'க்ரீன் தோசை'யாக ஊற்றிக் கொடுப்பது என, குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில், நிறத்தில் உணவு வகைகளைச் செய்து கொடுத்து, அதன் ஆர்வத்தை தூண்டி, சாப்பிட வையுங்கள். கீரை, பாகற்காய் போன்ற குழந்தைகள் அதிகம் விரும்பாத உணவுகளை, விசேஷம், விருந்து, சுற்றுலா போன்ற ஒரு சந்தோஷ தருணத்தில் அறிமுகப்படுத்துங்கள்.

உணவை வீணாக்கும், சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பிளாட்ஃபார்மில் ஒருவேளை உணவுக்காக கஷ்டப்படும் பிள்ளைகளைக் காட்டுங்கள். அவர்கள் கையாலேயே அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு உணவுப் பொட்டலமோ, பழமோ கொடுக்க வைத்து, 'இப்படியெல்லாம் குழந்தைங்க சாப் பாட்டுக்குக் கஷ்டப்படும்போது, நீ உணவை வீணாக்கலாமா?' என்று அதன் மனதுக்கு நெருக்கமாகப் பேசுங்கள். மனித நேயத்தையும் சேர்த்தே வளர்க்கலாம்!

காய்கறி, சிக்கன், மீன் வாங்கும்போது அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். உணவுப் பொருட்கள் தேர்வு தொடங்கி, நுகர்வோர் அறிவு வரை அவர்கள் அறியப் பெறுவார்கள்.

குழந்தை ஆர்வத்துடன் சாப்பிடுவதற்கும், ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவதற்கும் பெற்றோரே பொறுப்பு!

ஹெல்மெட் - போலீசிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

மிழகத்தில் இன்று முதல், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர், 'ஹெல்மெட்' அணிவதுகட்டாயமாக்கப்பட்டு உள்ளது.கண்காணிப்பு பணியில், 1 லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவு:


* இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர், ஹெல்மெட் அணிந்து இருந்தால், தேவையில்லாமல் அவர்களைதொந்தரவு செய்யக்கூடாது.


* சாலையில் தடுப்பு அமைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், சோதனை நடத்தக்கூடாது.


* ஹெல்மெட் அணியாமல் பிடிபடுவோருக்கு, எந்த வகையிலும் சலுகை காட்டக் கூடாது. ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று உள்ளிட்ட அனைத்து ஒரிஜினல்ஆவணங்களையும், பறிமுதல் செய்ய வேண்டும்.

* வாகனம் மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கான, ஒப்புகை சீட்டைகட்டாயம் வழங்க வேண்டும்.


* ஆவணங்களை, நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும்; லஞ்சம் வாங்கி திரும்ப ஒப்படைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பணம் கேட்கும் போலீஸ் பற்றிஅவசர போலீஸ் எண், '100'க்கு தகவல் தெரிவிக்கலாம்.


* ஹெல்மெட்டை, வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்து பயணித்தல், தொங்க விடுதல், பின் பக்கத்தில் பூட்டு போட்டு இருத்தல் கூடாது.


* அவ்வாறு செய்தால், ஹெல்மெட் அணியாதவர் என்றே கருதப்படும். அவர்களிடமும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்.


* வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து, மாற்றுப்பாதையில்தப்பித்து விடாத வகையில், மறைவிடங்களில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.


* ஹெல்மெட் கண்காணிப்பை காரணம் காட்டி, சாலை விதிகளை மீறி செல்வோரையும் கோட்டை விட்டுவிடக் கூடாது.


* பெண்களும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்; அவர்களுக்கு எவ்வித சலுகையும் காட்டக் கூடாது.இவ்வாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப் போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேவையற்ற உயிரிழப்பை தவிர்க்க, ஜூலை 1ம் தேதி முதல் (இன்று) இரு சக்கர வாகன ஓட்டி கள், பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அமல்படுத்த வேண்டியது போக்குவரத்து போலீசாரின் கடமை. அதை, 100 சதவீதம் அமல்படுத்துவோம்.


ஜார்ஜ், 
போலீஸ் கமிஷனர், சென்னை

குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கும் வழிகள்!

குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கும் வழிகள்!

புத்தகத்தின் பெயர்: கேரக்டர் மேட்டர்ஸ் (Character Matters)

ஆசிரியர்: தாமஸ் லிக்கோனா (Thomas Lickona)

பதிப்பாளர்: Touchstone


தாமஸ் லிக்கோனா எழுதிய 'கேரக்டர் மேட்டர்ஸ்' (Character Matters: How to Help Our Children Develop Good Judgment, Integrity, and Other Essential Virtues) என்னும் புத்தகம், குழந்தைகளுக்கு நல்ல பகுத்துணரும் திறன் (ஜட்ஜ்மென்ட்), நேர்மையாய் இருத்தல் மற்றும் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தேவையான இன்னபிற விஷயங்களைத் தெரிந்துகொள்ள நாம் எப்படி உதவுவது என்பது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட வழிகளைச் சொல்கிறது.



இன்றைக்கு நாம் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களான வன்முறை, பேராசை, லஞ்ச லாவண்யம், பணிவின்மை, லாகிரி வஸ்துகள் உபயோகம், செக்ஸ் கொடுமைகள் / அக்கிரமங்கள், பணியிடத்தில் நெறிமுறை தவறுதல் போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன தெரியுமா என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

'இவற்றுக்கெல்லாம் காரணம், நல்ல பண்புகள் இல்லாதது தான்' என்று சொல்லும் ஆசிரியர், அதனாலேயே நற்பண்புகளை வளர்ப்பதற்கு உதவுகிற கல்வி என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்றாகிறது. ஏனென்றால், குழந்தை கள் இன்றைக்கு இருக்கும் மொத்த ஜனத்தொகையில் சுமார் 25 சதவிகி தமே இருந்தாலும், எதிர்காலத்தில் இவர்களே நூறு சதவிகிதம் நாட்டின் குடிமக்களாவார்கள். நல்லதொரு குடிமக்கள் நிறைந்த நாடாக நாம் நம் நாட்டை மாற்ற நினைத்தோமே யானால், முதலில் நாம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தின் அவசியத்தைப் போதித்து, அவர்களை நல்ல குடிமக்களாய் ஆக்க முயற்சிக்க வேண்டும்.


இதில் இரண்டு வகையான பொறுப்பு நமக்கு இருக்கிறது. முதலாவதாக, அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் நாம் நடந்துகாட்ட வேண்டும். இரண்டாவதாக, சிறுவயதிலேயே நல்லொழுக் கங்களையும் பண்புகளையும் அவர்களிடத்தில் கொண்டுவர வேண்டும் என்பதை ஒரு பெரிய குறிக்கோளாக மனதில்கொண்டு செயல்பட வேண்டும்.


இந்தப் புத்தகம் ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நல்லொழுக்கம் என்பது தனிநபரின் நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கிறது என்பதில் தொடங்கி, நம்முடைய ஒட்டுமொத்த சமூகமும் ஒருங்கிணைந்து குழந்தைகளிடத்தில் நற்பண்புகளை எப்படி வளர்த்தெடுக்க முடியும் என்பது குறித்துச் சொல்கிறது.

நற்பண்புகள் என்றால் என்ன என்ற கேள்விக்கு நேரடியான பதில், தனிமையில் நேர்மைதான் என்று குறிப்பிடும் ஆசிரியர், இதுகுறித்த ஓர் ஆராய்ச்சியின் முடிவை புத்தகத்தில் கொடுத்துள்ளார்.


தொலைந்த பர்ஸ் என்ற இந்த ஆராய்ச்சி மிகவும் சுவையான முடிவுகளைத் தந்துள்ளது. ஐம்பது டாலர்கள் (அல்லது அதற்கு இணையான பணத்தினை) மணிபர்ஸ் உரிமையாளரின் விலாசம், தொலைப்பேசி எண் போன்ற விவரத்தை உள்ளே வைத்து சுமார் 2,500 மணி பர்ஸ்களைப் பல்வேறு நாடுகளில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டெலிபோன் பூத்துக்கள், நடைபாதைகள் போன்ற இடங்களில் போட்டுவிட்டு ஆராய்ச்சியாளர்கள் மறைந்திருந்தார்களாம். தனிமையில் நேர்மையைச் சோதித்த சோதனை இது.


இவற்றில் 56 சதவிகித மணிபர்ஸ்களே திரும்ப வந்ததாம். மீதமிருக்கும் 1,100 மணி பர்ஸ்களை எடுத்தவர்கள் உள்ளே உரிமையாளர் பெயர், விலாசம் மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருந்த போதிலும் அவற்றைக் கமுக்கமாக அமுக்கிக் கொண்டார்களாம்.


இதில் நாட்டுக்கு நாடு நியாயஸ்தர்களின் எண்ணிக்கை வேறுபட்டது என்கிறார் ஆசிரியர். நார்வே மற்றும் டென்மார்க்கில் 100 சதவிகிதம் பர்ஸ் திரும்பவந்ததாம். இத்தாலியில் 35 சதவிகிதமும், சுவிட்சர்லாந்தில் 35 சதவிகிதமும், ஹாங்காங்கில் 30 சதவிகிதமும், மெக்சிகோவில் 27 சதவிகிதமும், அமெரிக்காவில் 66 சதவிகிதமும் பர்ஸ்கள் திரும்ப வந்ததாம்.


இந்தக் கதையில் இருந்து அறியும் நீதி என்ன? கலாசாரம் நியாயஸ்தர்களை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது என்பதே. நியாயத்தை மதிக்கும் எண்ணத்தைக் கலாசாரமாக மாற்றிவிட்டால், அந்த இடத்தில் ஒழுங்கு நிலைத்து நிற்கும் என்பதுதான் என்கிறார் ஆசிரியர்.


சரி, நியாயமாய் இருப்பதைத் தூண்டுவது எது என்று கேட்கிற ஆசிரியர், இந்தத் தொலைந்த மணிபர்ஸ் சோதனையில் பர்ஸை திருப்பிக் கொண்டுவந்து தந்தவர்களிடம் எது உங்களை நியாயமாய் இருக்கத் தூண்டியது என்று கேட்டார்களாம்.


வயதில் சிறியவரானாலும் சரி, பெரியவரானாலும் சரி பலரும் சொன்னது, 'எங்களுடைய தாய் தந்தையர் நியாயமாய் நடந்துகொள்; அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைப்படாதே' என்று வலியுறுத்தியதுதான் என்றனராம்.


சிலர், என்னுடைய இறை நம்பிக்கை அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதே என்று சொல்வதால் என்றனராம்.

மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வேலையை இழந்து பொது இடங்களில் இருக்கும் பழைய பாட்டில்கள் மற்றும் டின்களைச் சேகரித்து விற்றுப் பிழைக்கும் ஒருவர், 'டெலிபோன் பூத்தில் கீழே உள்ள ட்ரேயில் பர்ஸ் இருந்ததைப் பார்த்து எடுத்தேன். நிறையவும் குறைவான உயரத்தில் இருக்கிறதே! ஒருவேளை உடல் ஊனமுற்ற வருடையதாய் இருக்குமோ என நினைத்தேன். கைகால் திராணியாய் இருக்கும் நம்மால் இதைச் சம்பாதிக்க முடியும். உடல் ஊனமுற்றவருக்கு இது நிறையப் பெரிய பணம் என நினைத்தே தேடிக் கண்டுபிடித்துத் திருப்பிக் கொடுக்க முயன்றேன்' என்றாராம்.


 'தன் நிலை மிகவும் தாழ்ந்திருந்த போதிலும் தனக்கும் கீழே இருந்து கஷ்டப்படுபவருடைய பொருளை எடுப்பது தவறு என நினைத்தது ஆச்சர்யமூட்டுவதாய் இருந்தது.'


''நீங்கள் பள்ளியில் ஆசிரியரா? நீங்கள் ஒவ்வொரு பாடத்துடனுமே நல்லொழுக்கங்களைச் சொல்லித் தரலாம். நல்ல மாணவனாய்/மாணவியாய் இருப்பதினால் என்ன பலன்கள் என்று சொல்லலாம்.


 எதிலும் உயர்ந்த நோக்கம் வேண்டும் என்று சொல்லுங்கள். எதிலும் நேர்த்தி முக்கியம் என்பதைப் புரியவையுங்கள். நீதி, நேர்மை, நியாயம் என்பதன் முக்கியத்துவத்தைப் புரியவையுங்கள்.


படிப்பதில் அவர்களால் பொறுப்பெடுத்துக் கொள்ள முடியும் என்பதை நெஞ்சார உணரும்படி நடந்துகொள்ளுங்கள். பேச்சு, பாடம் எடுத்தல், நடை, உடை, பாவனைப் போன்ற அனைத்திலுமே ஒழுக்கம் என்பது மிக முக்கியம் என்பது வெளிப்படும் அளவுக்குச் செயல்படுங்கள்.


 மிகவும் முக்கியமாக, ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் பள்ளி என்ற நிலையில் இருந்து மாற்றி ஒழுக்கமான பள்ளி என்ற நிலைக்கு உங்கள் பள்ளியை கொண்டுவர முயலுங்கள். பள்ளியில் இருக்கும் எல்லா பணியாளர்களையும் இந்த ஒழுக்கச் சிந்தனையை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.


எல்லாவற்றுக்கும் மேலாக நம் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் எந்த மாதிரியான நபராக எதிர்காலத்தில் உருவெடுப்பார்கள் என்பதை மனதில்கொண்டு செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள்.


 ஒழுக்கத்தைப் பயிற்று விற்பதிலும் கடைப்பிடிப் பதிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் பங்குதனை அதிகப்படுத்திக்கொண்டே செல்லுங்கள்.


மாணவர்களால் மாணவர்களுக்காக எனும்போது அதில் கிடைக்கும் ரிசல்ட்டே அலாதியானது'' என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.


பள்ளி, கல்லூரி சம்பந்தப்பட்ட அனைவருமே படிக்க வேண்டிய புத்தகம் இது என்றால் அது மிகையாகாது.





Friday, June 26, 2015

இனி ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டும் !

இனி ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டும் !
 
தலைகீழாக மாறும் கல்யாண சந்தை

திருமணங்களை முடிவு செய்வதற்கான சம்பிரதாயங்கள், முன்பெல்லாம் சுருக்கமானவை. கல்யாணத் தரகர்களிடம் ஒப்படைக்கப்படும் ஜாதகங்கள், 'நல்ல வேலையில் இருக்கிற பையனா இருந்தா போதும்...' என்று காத்திருக்கும் பெண் வீட்டார், 'பொண்ணு அழகா இருக் கணும்...' என எதிர்பார்க்கும் பையன் வீட்டார், பஜ்ஜி, காபியுடன் பெண் பார்க்கும் படலம், முகூர்த்தம்... இப்படி!

இன்றோ, கல்யாண சந்தையில் பற்பல மாற்றங்கள். குறிப்பாக, பையன் வீட்டார் 'டிமாண்ட்' செய்வது போலவே, பெண் வீட்டாரின் 'டிமாண்ட்'களும் இப்போது பெருகியுள்ளன. 'பொண்ணு, பையனை விடப் படிச்சிருந்தா என்ன... நல்லதுதானே..?' என்று மாப்பிள்ளை வீட்டார் மாறியிருக்க, 'தனிக் குடித்தனம் வெச்சாதான் பொண்ணு கொடுப் போம்...' என்று வெளிப்படையாகவே நிபந்தனை விதிக்கும் பெண் வீட்டார்கள், நவீன கல்யாண புரோக்கர்களாக உருவெடுத்து இருக்கும் மேட்ரிமோனியல் வெப்சைட்டுகள், மணக் கயிறின் மஞ்சள் தேயும் முன் பிரியும் தம்பதிகள்... என ரொம்பவே மாறி இருக்கின்றன கல்யாண காட்சிகள்.

''எனக்கு ஒரே மகன். நல்ல வேலையில் இருக்கான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, அஞ்சு வருஷமா அவனுக்குப் பெண் தேடறேன். எதுவுமே அமையல. அந்தக் காலத்துல, பொண்ணுங்களக் கட்டிக் கொடுக்க படாதபாடு படுவாங்க. இப்ப, நிலைமை தலைகீழ்...'' என்று கவலையுடன் சொன்ன சென்னை, மயிலாப் பூரைச் சேர்ந்த அந்தத் தந்தைக்கு, மனது முழுக்க வருத்தமும், விரக்தியும்.

''பெரிய சம்பளம் வாங்குறேன்... ஆளும் பார்க்க ஸ்மார்ட்டாதான் இருக்கேன். மேட்ரி மோனியல் சைட்ல புரொஃபைல் அப்லோட் பண்ணி ஆறு மாசமாச்சு. இன்னும் ஒரு ரெஸ் பான்ஸ் கூட வரல. இந்த பொண்ணுங்க என்ன எதிர்பார்க்கிறாங்கனே புரியலையே!'' என்று குழம்புகிறார் சாஃப்ட்வேர் இளைஞர் ஒருவர்.

'நல்ல பெண்... நல்ல பையன்...'

ஆயிரம் திருமணங்களுக்கு மேல் செய்து வைத்தவர், சென்னை, அடையாறைச் சேர்ந்த 70 வயதாகும் திருமண தரகர் சாம்பசிவம். ''போட்டோ வேண்டாம்...'' என்றபடி பேச ஆரம்பித்தவர்,

''25 வருஷத்துக்கு முன்ன இங்க இருக்கிற பிள்ளையார் கோயில்ல போய் உட்கார்ந்தேன்னா, பெண்களோட ஜாதகக் கட்டை எடுத்துட்டு, ஒரு நாளைக்கு குறைஞ்சது 10 தாய்மார்களாவது வரு வாங்க. 'ஏதாச்சும் ஒரு வேலையில் இருந்தா போதும். அரசு உத்தியோகம்னா ரொம்ப சந்தோஷம். ஓரளவுக்கு நகை போட்டு, திருமணத்தையும் நல்லா செஞ்சு கொடுத்துடுவோம்'னு சொல்லுவாங்க. படிச்ச பெண்களோட வரன் ஒண்ணு, ரெண்டு வரும். 'பையனைவிட, அதிகம் படிச்ச பொண்ணு வேண்டாம்'னு நிப்பாங்க மாப்பிள்ளை வீட்டுக் காரங்க. இதனாலயே, மேல படிக்கணும்னு கேட்கிற பெண் பிள்ளைகளை, 'உன்னைவிட படிச்ச மாப்பிள்ளையை நாங்க எங்க போய் தேடுறது?'னு மறுப்பாங்க பெத்தவங்க. இதெல்லாமே குறைச்சலான சதவிகிதம்தான். பெரும்பாலும் சட்டு சட்டுனு வரன்கள் அமைஞ்சுடறதுதான் அதிக சதவிகிதம்'' என்றவர்,

''இன்றைய சூழ்நிலையில் மாப்பிள்ளை வீட்டார்கூட தகைஞ்சு வந்துடறாங்க. ஆனா, பெண் வீட்டார்தான் நிறைய நிராகரிக்கறாங்க. இப்போ இருக்கிற பெண்களின் படிப்பு, எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா மாப்பிள்ளை கிடைக்கறதில்லை. அப்படியே அமைஞ்சாலும், கட்டிக்கிட்டவங்க ரெண்டு பேரும், போன தலைமுறையைப் போல் விட்டுக்கொடுத்து வாழறதில்லை. 'நீ இல்லைனா எனக்கு வாழ்க்கை இல்லையா?'னு சட்டுனு பிரிஞ்சுடறாங்க. இதனாலேயே, 'நல்ல பொண்ணு...', 'நல்ல பையன்...'னு எந்த வரனுக்கும் உத்தரவாதம் கொடுத்து சம்பந்தம் பேசி வைக்கத் தயக்கமா இருக்கு'' என்றவரின் குரலில் ஏகத்துக்கும் சோகம்.

'பையன் படிப்புக்கு லோன் போடலைதானே!'

அம்பத்தூரை சேர்ந்த மாலதி - கிருஷ்ணசாமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். நாத்தனார், ஓர்ப்படி என்று கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவர், மகனுக்கு வரன் தேடி அலைந்ததை வருத்தத் துடன் பகிர்ந்து கொண்டார். ''எங்க வீட்டுல எல்லோருமே நல்லா படிச்சவங்க. என் மகளுக்கு வரன் தேட நான் எந்தச் சிரமமும்படல. முதன் முதலா பார்த்த இடமே முடிஞ்சுடுச்சு. ஆனா, பையனுக்கு நியூஸ்பேப்பர், மேட்ரிமோனியல்னு வரன் தேடி அலைஞ்சேன். இத் தனைக்கும் நல்ல வேலையில இருக்கான். லட்சணமான பையன். 'பையனோட படிப்புக்கு லோன் எதுவும் போடலை இல்லே..?', 'வீட்டு லோன் எல்லாம் முடிச்சுட்டீங் களா...?', 'கல்யாணம் ஆனதும், தனிக்குடித்தனம் வெச்சுட ணும்'னு வரிசையா கண்டிஷன் போடறாங்க பொண்ணு வீட்டுக்காரங்க. ம்... அலைஞ்சு திரிஞ்சு ஒரு அருமையான வரன் வந்தது. போன வருஷம் தான் அந்த பெண் கையில் பிடிச்சுக் கொடுத் துட்டேன்'' என்று மலர்ச்சியுடன் சொன்னார்.

படிப்பு ஒரு தடையல்ல!

'பெண், ஆணைவிட அதிகம் படித்திருப்பது திருமணத்துக்கு தடையாக இருக்கிறது' என்கிற பழைமை உடைந்திருப்பதைப் பேசினார்கள், ஸ்ரீ காளிகாபுரத்தைச் சேர்ந்த செல்வமணி - ஜெனீமா தம்பதி. செகண்ட் கிரேட் டீச்சராக இருக்கும் செல்வமணி, கரஸ்பாண்டன்ஸில் எம்.எஸ்சி படிக்கிறார். பொறியியல் பட்டதாரியான ஜெனீமா, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் லெக்சரர்!

''கல்யாணப் பத்திரிகையில 'ஜெனீமா B.E., செல்வமணி DTed., M.Sc, இப்படி இருந்ததைப் பார்த்து என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், 'உன்னை விட குறைச்சலா படிச்சவர ஏன் கல்யாணம் பண்ணிக்கிறே..?'னு கேட்டாங்க. நல்லா படிச்சுருக்கணும், நிறைய சம்பாதிக் கணுங்கிறதைவிட, குணமானவரா இருக்கணுங் கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. எங்களுக்குள்ள எந்தச் சண்டைகளும் கிடை யாது. புரிதல் நிறைய இருக்கு. இப்பக்கூட, நான் ரெகுலர்ல எம்.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர் படிக்கிறேன்...'' என்றவருடன் செல்வமணியும் சேர்ந்து ஒரே குரலில்,

''அறிவுக்காகவும், பொருள் சம்பாதிக்கறதுக் காகவும்தான் படிப்பு. அதை குடும்பத்துக்குள்ளே நுழைச்சு குழப்பம் பண்ணக் கூடாது. எந்த விதத்துலயும் எங்களுக்குள்ள ஈகோ எட்டிப் பார்க்கல. எல்லாத்துக்கும் காரணம்... மனசுதான்!'' என்று இயல்பாகப் பேசி, இன்றைய இளம் தம்பதிகளுக்குச் சொல்லாமல் பாடம் சொன்னார்கள்!

'ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டியிருக்கும்!'

வரன்களின் வரவு பற்றி தமிழ் மேட்ரி மோனியல் டாட் காம் நிறுவனர் முருகவேல் ஜானகிராமனிடம் பேசியபோது, ''70% ஆண் களும், 30% பெண்களும் பதிவு செய்திருக்கின்றனர். பிலோ மிடில் கிளாஸ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆன் லைன் பதிவை செய்வ தில்லை. கொஞ்சம் மேல்மட்டத்தினர் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பெற்றோர், உறவினர்கள் கலந்து முடிவெடுத்து திருமணம் செய்வார்கள்.

இன்று சம்பந்தப்பட்ட பெண், ஆணின் முடிவே முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்வதால் பொருளாதார பலம் தரும் தைரியத்தால், பெண்களின் எதிர்பார்ப்பு இப்போது பல கோணங்களிலும் விரிந்துள்ளது. அதன் காரணமாக, பையன் வீட்டார் இறங்கி வரவேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், மேல்தட்டு வர்க்கத்தில் ஜாதி, மதம் அதிகம் பார்ப்பதில்லை. இதனால், குறிப்பிட்ட சில சமூகத்தில் பெண்கள் இல்லாமலும் போய் விடுகிறது. ஆண்கள், பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய நிலை கிட்டத்தட்ட வந்துவிட்டது!'' என்றார்!

நல்ல விஷயம்!

Thursday, June 25, 2015

சீமந்தம் எதற்காக...?

சீமந்தம் எதற்காக...?
 
ரிக் வேதத்தில் உள்ள சீமந்த கல்யாணம் பற்றிய குறிப்பு, அதன் பழைமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டு. 'உலகில் தோன்றிய முதல் நூல் ரிக் வேதம்' என்று வெளி நாட்டவர்களும் பாராட்டுவார்கள். 'தேவ மாதா அதிதிக்கு சீமந்தம் செய்து அவளின் வம்சத்தை என்றும் சிரஞ்ஜீவியாக நிலை நிறுத்தினார் பிரஜாபதி. அதைப் போல் கர்ப்பமுற்ற என் மனைவிக்கு சீமந்தம் செய்து அவளின் பரம்பரையைச் செழிப்புடன் _ அதாவது பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் என்ற வரிசையில் அவள் குலத்தை சிரஞ்ஜீவி ஆக்குகிறேன்' என்ற மந்திரம் ரிக் வேதத்தில் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ( யேனாதிதே: ஸீமானம் நயதி ப்ரஜாபதிர் மஹதே ஸெளபகாய ).

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் உறுப்புகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து அதன் இதயம், இன்ப துன்பங்களை அறியும் தன்மை யைப் பெற்றுவிடும். அவள் இதயத்துடன் குழந்தையின் இதயத்துக்குத் தொடர்பு இருக்கும். அவள் இரு இதயங்களைப் பெற்றவள் த்வி ஹ்ருதயாம்ச தௌர்ஹ்ரிதினீமாசக்ஷதே என்று ஆயுர்வேதம் கூறும். அவள் இதயத்தின் மூலம் குழந்தையின் இதயத்தைச் சுத்தப்படுத்த வேண் டும். அவளது எண்ணங்கள் குழந்தையின் மன தில் வேரூன்றிவிடும். ஆகையால், அவளின் மன நிறைவு, குழந்தையிடம் மன நிறைவை ஏற் படுத்தும் என்ற தகவலை ஆயுர்வேத அறிஞர் சுஸ்ருதரின் நூலில் காணலாம்.

பத்து மாதம் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, தன் சிந்தனையில் தன்னை முழுமையாக்கிக் கொள்ளும் திறனை இந்த சீமந்த சம்ஸ்காரம் உண் டாக்கிவிடும். ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவன் மனம் முக்கியக் காரணம். மன ஏவ மனுஷ் யானாம் காரணம் பந்த மோக்ஷயோ:

நமது தொடர்புகள், புலன்களால் ஈர்க்கப்படும் விஷயங்கள் அத்தனையையும் மனம் வாங்கிக் கொண்டு இன்ப துன்பங்களாக மாற்றி நம்மை உணர வைக்கிறது. சுத்தமான மனம், உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு நம்மை மகிழ்விக்கும். கலக்கமுற்ற மனம், தவறாகப் புரிந்து கொண்டு தப்பாகச் செயல்பட வைத்துத் துன்பத்தை அனுபவிக்கச் செய்துவிடும். குழந்தையின் மனதை ஆரம்பத்திலேயே அதாவது முளையிலேயே செம்மையாக்கும் தகுதி சீமந்தத்துக்கு உண்டு. தற்காலச் சூழலில் பல ஆசாபாசங்களில் சிக்கி அல்லல்பட்டு வெளிவரத் தெரியாமல் தவிக்கும் மக்கள் ஏராளம். அவர்கள் மனதின் பலவீனம் அவர்களை அறியாமையில் ஆழ்த்துகிறது. அந்த பலவீனத்தை அகற்றி வீரனாக மாற்ற வேண்டும் என்று சீமந்தம் வலியுறுத்துகிறது.

கர்ம வினையின் தாக்கம், குழந்தையின் மனதில் பிரதிபலிக்கும். 'கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு முன்ஜென்ம வாசனை தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு' என்பதை ஆதிசங்கரர் சுட்டிக் காட்டுகிறார். 'கர்ம வினையின் பயனாக ஏற்பட்டது என் கர்ப்ப வாசம். மலம், மூத்திரம், புழு ஆகியவை கலந்த சூழலில் நான் வேதனை அடைகிறேன். அது தவிர, தாயின் பசியின் வெப்பம் என்னை சுட்டெரிக்கிறது. மனதுக்குத் துன்பத்தை விளைவிக்கும் கர்ப்ப வாசத்தை எனக்கு மீண்டும் கொடுக்காதே ஆதௌ கர்ம ப்ரஸங்காத் கலயதிகலுஷம் மாத்ரு குªக்ஷளஸ்தி தம்மாம்' என்று அவர் கடவுளை வேண்டுகிறார்.

நமது சித்தத்துக்கும் சிந்தனைக்கும் எட்டாத விஷயங்களை வேதத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையோடு வேதக் கருத்துகளை வரவேற்பது தவிர, வேறு வழி இல்லை. நம் முன்னோர் நம்மையும் நம் சிந்தனைகளையும் அளந்து பார்த்தவர்கள். நம்மை வாழ்வாங்கு வாழ வைக்க சம்ஸ்காரத்தை வகுத்துத் தந்தது அவர்களது கருணை உள்ளம். தந்தையின் உபதேசம் பிரகலாதனை மாற்றவில்லை. விபீஷணனின் நல்லுரைகள் ராவணனை மாற்ற வில்லை. தூய்மையான உள்ளம் கலக்கமுறவில்லை. கலங்கின மனம் தெளியவில்லை. பிரக லாதன் மனதில் ஆண்டவன் குடிகொண்டிருந்தான். ராவணனின் மனதில் அகங்காரம் குடியிருந்தது. இந்த வித்தியாசம் இடையில் வருவதல்ல. கர்ப்பத்தில் இருக் கும்போதே நீறு பூத்த நெருப்பு போல் உறங்கிக் கிடந்தவை. சந்தர்ப்பம் வரும்போது விழித்து எழுந்து கொள்கின்றன.

குழந்தையின் மன இயல்பு தாய், தந்தையிடம் இருந்து வந்தது என்று கூற இயலாது. அவனது கர்ம வினை இயல்பாக மாறுகிறது. வாழ்க்கைக்கு இடையூ றான கர்ம வினையை அகற்ற வேண்டும். அதற்கு ஒத்துழைப்பது சீமந்தம். ஆயுள், கர்மம் (செயல்பாடு), பொருளாதாரம், அறிவு, மரணம் இவை ஐந்தும் பிறக்கும் போதே நிச்சயிக்கப்படுகிறது. ஆயு: கர்ம வித்தம் ச என்று ஜோதிடம் சுட்டிக் காட்டும். அதில் கர்ம வினையும் சேர்ந்து இருப்பதால் முன்ஜென்ம வினையை அகற்ற முந்திக் கொள்ள வேண்டும்.

Wednesday, June 24, 2015

Make Up for This Loss

Make Up for This Loss

 

Baba: This Marwadi Bagchand whose stack caught fire begged for help to avoid loss. Gain and loss, birth and death are in the hands of God. But how blindly do these people forget God! If profit comes, they rejoice. If loss comes, they weep. Why? Why say? "This is mine"? What does it mean?

 

The stack is not the Marwadi. It is only hay and not his body. It grew from seeds on the earth, and was fed by rains from the clouds and by sun light. Earth, Clouds and the Sun are its owners. This fellow's claim is ungrounded. Fire is in all these three and it consumed the stack. We are not the owners. God gives with one hand and takes away with the other. Sait, go home. You will make up for this loss in some other transaction.

(from Baba's Charters and Sayings, No. 256)

Guruvaar Prarthna

Guruvaar Prarthna

 

 

Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy day of Guruvaar. Baba, one of your charters is 'Why fear, when I am here?' because you know our fear filled life and our inability to overcome without your grace. Please bless all and embrace us with safety and security. With you, we are confident and comfortable, we will step ahead to meet all challenges and achieve success. On this holy day we start our prayers by reading your divine words in Shri Sai Samartha Satcharita.

 

 

The soul is Brahman itself. Bliss from understanding knowledge is Brahman. By the knowledge of the untrue nature of the world, the illusion about the world will pass away. Brahman is Truth. That is ME.

 

I am eternal, pure, enlightened, the liberated one. I am Vasudeva, the sacred letter 'Aum'. I am the truth. Your good lies in worshipping ME with true faith and devotion.

 

Thus realising my true nature serve ME in the right way. Moreover, surrender to ME completely. And be one with ME.

 

When the river surrenders to the ocean, can it come back? Will there be a separate identity when she embraces the ocean?

 

Just as a wick soaked in oil when joined to a flame of light, becomes itself a bright light, in the same way a person reaches the status of a sage at the feet of the sage.

 

He who thinks of nothing but Allah Malik, the Supreme Being and the Pure Consciousness, he has peace, has no desires and looks upon all with an equal eye. How can he have a separate identity from the Supreme Being?

 

Where there is not the awareness of oneself, where there is no ego, where there is absence of strife or quarrel (twofold nature of the world), where there is no wish for worldly possessions, where these four virtues reside, can there exist the ego? "

 

Summing up, in Sai's nature these eight virtues exist in their complete form. Where is the place then for the ego? How can I then nurse such egotism?

 

"He whose self is pervading in the universe, I am part and parcel of Him. Surrender at the feet of Sai. This will mean MY service.

 

 

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

 

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter  3, Ovi 96 - 104)

http://babaprayers.blogspot.in/

Monday, June 22, 2015

10 'hidden' Gmail features you must try

Gmail is a pretty powerful email service, but you can still find all sorts of goodies and extra features in Gmail Labs. The list is pretty massive, so we've narrowed down our 10 favourite Lab features to help increase your email productivity.

Here's over to 10 Gmail Labs features you should enable right now.
 

1. Undo send

 
 
Undo send
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
We've all been there: You spend half an hour writing a strongly worded letter, hit send, and realize you probably shouldn't have done that. Thankfully, Gmail's Undo Send feature — available in Gmail Labs — is there to save you from yourself.

After sending an email, Gmail will wait a predefined number of seconds (5, 10, 20, or 30, configurable in Gmail's settings) before sending. During this period, you can hit the "Undo" button to take back your mistake.

Even if you don't foresee needing it, it's a lot better than yanking out your Ethernet cable, so you might as well keep it around just in case. I use it far more than I'd like to admit.

2. Custom keyboard shortcuts

Custom keyboard shortcuts
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
We love keyboard shortcuts. It's no secret. The shortcuts in Gmail are some of our favorites, allowing you to ninja your way through Gmail with just your keyboard — and they even add a few every once in a while.

However, if you don't find Gmail's default keybindings very intuitive, the Custom Keyboard Shortcuts feature — available in Gmail Labs — lets you customize your own shortcuts from Gmail's Settings page.

3. Preview external services in messages

Preview external services in messages
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Gmail has quite a few labs that let you preview things like videos, documents, voicemails, and images in emails if they're sent from certain services. For example, if one of your contacts sends you a message with an address in it, the Google Maps Preview Lab will automatically show you that address on a map.

There are also preview Labs for Google Voice, Yelp, and Picasa if you or your contacts use those services.

4. Auto-advance

 
 
Auto-advance
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
If you cycle through a lot of messages at once, it's probably really annoying that Gmail takes you back to the inbox whenever you delete, archive, or mute a conversation.

The Auto-advance feature, available in Gmail Labs, lets you choose what Gmail does in this situation, so you can go straight to the next (or previous) email whenever you delete or archive a message.

It's small, but a good time saver and a fix for a pretty big annoyance.

5. Unread message icon

Unread message icon
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Gmail's tabs might light up when you have new messages, but if you want a quick glance at how many unread emails are in your inbox, Gmail Labs' Unread Message Icon will do the trick.

It's perfect for keeping Gmail in a pinned tab, but make sure it doesn't distract you: after all, you shouldn't be answering email as soon as it comes in. So if having it on tempts you to constantly check your inbox, keep it off.

6. Send & Archive

Send & Archive
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Just head into Gmail's General Settings and click the "Show "Send & Archive" button in reply" radio button. From now on, when you're composing an email, you can send your message and archive the thread in one fell swoop-keeping your inbox clean and tidy.

7. Apps search

 
 
Apps search
If you use Google Docs or Google Sites, Apps Search (available in Labs) is a great feature that extends Gmail's search capabilities to those two apps. That way, when you search for something in Gmail, it'll also bring up matching search results from Docs and Sites below the Gmail ones.

That way you can do all your Google-related work in one, consolidated tab.

8. Default 'Reply All'

Default 'Reply All'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Arguably the most controversial feature of the bunch, this lets you set your default reply action to "Reply All" instead of "Reply". Often, when multiple people are involved in an email thread, one person will break off by accidentally hitting the "Reply" button instead of "Reply All", and then everyone else misses that part of the conversation.

Save yourself from being that person by tweaking this option in Gmail's general settings. On the occasions you want to reply just to one person, you'll still be able to do so by hitting the dropdown menu next to the Reply All button.

9. Canned responses

Canned responses
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
If you find yourself doing a lot of repetitive typing, the Canned Responses lab will save you serious time. Enable it in Gmail Labs, type in the messages you find yourself sending over and over again, and then send them in the future with the click of a button. You can even send them automatically using filters, which makes for a useful vacation responder.

Note also that you can use OS-wide text expansion if you need to do this outside of Gmail — though Gmail's canned responses can be used no matter what computer you're on. They're even available on your phone.

10. Quick links

 
 
Quick links
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
While features like starred messages and Multiple Inboxes are great for accessing oft-needed labels or messages, Quick Links can access just about anything, right from Gmail's sidebar.

Once you enable Quick Links in Gmail Labs, you'll see a box on the left, in which you can add one-click access to any bookmarkable URL in Gmail—including saved searches, specific messages, labels, or anything else.

You can just use them as a handy grab bag of links, or even turn them into a killer to-do list.

Karma and Life

A SHORT STORY AND ESSAY ON PRINCIPLES OF KARMA

There was once a man who got lost in the desert. The water in his canteen ran out two days ago, and he was on his last legs. He knew that if he didn't get some water soon, he would surely perish. The man saw a shack ahead of him. He thought it might be a mirage or hallucination, but having no other option, he moved toward it. As he got closer he realized it was quite real, so he dragged his weary body to the door with the last of his strength.


The shack was not occupied and seemed like it had been abandoned for quite some time. The man gained entrance, hoping against hope that he might find water inside.

His heart skipped a beat when he saw what was in the shack: a water pump..It had a pipe going down through the floor, perhaps tapping a source of water deep
under-ground.

He began working the pump, but no water came out. He kept at it and still nothing happened. Finally he gave up from exhaustion and frustration. He threw up his hands in despair. It looked as if he was going to die after all.

Then the man noticed a bottle in one corner of the shack. It was filled with water and corked up to prevent evaporation.

He uncorked the bottle and was about to gulp down the sweet life-giving water when he noticed a piece of paper attached to it. Handwriting on the paper read: "Use this water to start the pump. Don't forget to fill the bottle when you're done."

He had a dilemma. He could follow the instruction and pour the water into the pump, or he could ignore it and just drink the water.

What to do? If he let the water go into the pump, what assurance did he have that it would work? What if the pump malfunctioned? What if the pipe had a leak? What if the underground reservoir had long dried up?

But then... maybe the instruction was correct. Should he risk it? If it turned out to be false, he would be throwing away the last water he would ever see.

Hands trembling, he poured the water into the pump. Then he closed his eyes, said a prayer, and started working the pump.

He heard a gurgling sound, and then water came gushing out, more than he could possibly use. He luxuriated in the cool and refreshing stream. He was going to live!

After drinking his fill and feeling much better, he looked around the shack. He found a pencil and a map of the region. The map showed that he was still far away from civilization, but at least now he knew where he was and which direction to go.

He filled his canteen for the journey ahead. He also filled the bottle and put the cork back in. Before leaving the shack, he added his own writing below the instruction: "Believe me, it works!"

This story is all about life. It teaches us that we must give before we can receive abundantly. More importantly, it also teaches that faith plays an important role in giving. The man did not know if his action would be rewarded, but he proceeded regardless. Without knowing what to expect, he made a leap of faith.

Water in this story represents the good things in life. Think of it as positive energy, or something that brings a smile to your face. It can be material objects or intangible qualities. It can represent money, love,
friendship, happiness, respect, or any number of other things you value. Whatever it is that you would like to get out of life, that's water.

The water pump represents the workings of the karmic mechanism. Give it some water to work with, and it will return far more than you put in. This mechanism traces a great circle, an unbroken path that eventually comes back to its point of origin. The energy of this circulation gathers power as it moves along, so that when it finally returns, it is greatly amplified.

Perhaps you have done a good deed that no one knows about, so you assume there will not be an effect associated with this particular cause. In reality, you have but initiated the karmic mechanism in the spiritual realm. You cannot see it, but it is there all the same, and it begins gathering energy and seeking its way back to you immediately.

As we have already noted from the story, the man filled the pump without knowing if his effort would be rewarded. In the same way, when we emulate and nurture others, we also act without expecting rewards of any sort.

This principle applies to everything, not just money. For instance, in order to win the respect of others, one must start by giving others the appropriate respect without quibbles or qualms.

Would you like more recognition for the work that you do? If so, then start by recognizing the achievements of everyone around you. When you truly accept that others are deserving of recognition, their esteem for you will increase as if by magic.

Would you like to have more friendship in your life? If so, then start by being friendly. Do not expect anything in return, and you'll be pleasantly surprised by the flood of goodwill and friendliness that comes your way.

Would you like people to see beauty in you? If so, then start noticing beauty in others. It's easy to see when you pay attention. Everyone around you has an intrinsic beauty that goes well beyond the physical. When you can see this and start to appreciate it and marvel at it, a transformation takes place: You become truly beautiful yourself.

In general, whatever goodness you want from life, give it to others first. Give it cheerfully and willingly, without calculating your gain versus loss as if you are working a balance sheet. Initiate the circular exchange and relax in the certain knowledge that no one ever gets short-changed.

Think of planting flower seeds in a garden as a metaphor for the karmic mechanism. Each seed you plant is a process you have set into motion. You understand the principles that govern the growth of plants and you know the soil is fertile, so you know that you will see results in the fullness of time. You do not know exactly when or how the flowers will bloom, and that's perfectly fine.


The only thing we need is the courage to take charge and jump start the water pump.


Believe me, it works!
Believe me, it works

அன்பு வழி!



 
 



பத்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். கண்ணகி சிலையை ஒட்டிய மெரினா கடற்கரையில் காலை 6 மணியளவில் அவர்கள் இருவரையும் பார்த்தேன். பையனுக்கு 8 வயது இருக்கக்கூடும். போலியோ தாக்கி மெலிந்த கால்கள். இடுப்பு ஒடுங்கியிருந்தது. சற்றே பெரிய தலை. சுருங்கி, ஒடுங்கிப் போன முகம்.
 
அவனை தூக்கிக் கொண்டு மணலில் நடந்து வந்து கொண்டிருந்த பெண் ணுக்கு 30 வயது இருக்கலாம். ஏழ்மையான தோற்றம். அடர்நீலவண்ணச் சேலை கட்டியிருந்தார். கைகளில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் தண்ணீர் பாட்டில், ஒரு துண்டு. அந்தப் பெண் தனது மகனை மணலில் உட்கார வைத்துவிட்டு பத்தடி தள்ளிச் சென்று இரண்டு கைகளாலும் மணலைத் தோண்டி குழி பறித்துக் கொண்டிருந்தார். பையன், தூரத்தில் தெரியும் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பையனைத் தூக்கிக் கொண்டுபோய் இடுப்பளவு உள்ள மணற்குழியினுள் இறக்கி நிற்கவைத்து, சுற்றிலும் மணலைப் போட்டு மூடினார். அந்தப் பையன் எதிர்ப்பு காட்டவே இல்லை.
 
மண்ணில் புதைந்து நின்ற பையன் அம்மாவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா அவன் அருகில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடியே, தனது கையில் இருந்த ஒரு பையைத் திறந்து பைண்டிங் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை வெளியே எடுத்து வாசித்துக் காட்ட ஆரம்பித்தார். மணலுக்குள் புதைந்திருந்த பையன் அமைதி யாக அம்மா படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
 
என்ன செய்கிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
அம்மாவின் மெல்லிய குரல் சீராக எதையோ சொல்லிக் கொண்டிருந்தது. அதைக் கேட்க வேண்டும் என்பதற் காகவே அருகில் நடந்து போனேன். அவர் படித்துக் கொண்டிருப்பது ஒரு கதை. அதுவும் பழைய அம்புலிமாமா இதழில் வெளியான கதை.
 
அந்தப் பெண் என் வருகையைக் கண்டதும் படிப்பதை நிறுத்திவிட்டு, என்னை ஏறிட்டு பார்த்தார்.
 
''பையனுக்கு என்ன செய்கிறது?'' எனக் கேட்டேன். ''காலு சரியில்லை. போலியோ வந்து முடங்கிப்போச்சி. அதான் ஈரமணலில் நிற்க வச்சா கால் சரியாகிரும்னு சொன் னாங்க. தினமும் கூட்டிட்டு வந்து நிக்க வைக்கிறேன். ஒரு மணி நேரம் நிக்கணும்ல, அதான் கதை படிச்சிக் காட்டுறேன். அதைக் கேட்டுக்கிட்டே வலியை மறந்து நிற்பான். நானும் செய்யாத வைத்தியமில்லை. காட்டாத டாக்டரில்லை. புள்ள சரியாகலை. பெத்த மனசு கேட்க மாட்டேங்குது.
அதான் கோடம்பாக்கத்துலேர்ந்து தினமும் பஸ் பிடிச்சி பையனைக் கூட்டிட்டு கடற் கரைக்கு வர்றேன். நாலு மாசமா மணல்ல நிக்கிறான். பாவம் பிள்ளை. வலியைப் பொறுத்துகிட்டு நிக்கிறான். வீட்டுக்காரர் பழைய பேப்பர் வியா பாரம் செய்றாரு. நான் அச்சாபீஸ்ல வேலை பாத்தேன். ஆனா, இப்போ முடியலை. வீட்ல வேற ஆள் துணையில்ல. ஒத்த ஆளா இவனை தூக் கிட்டு அலையுறேன். ஆனா, சாமி புண் ணியத்துல என் பிள்ளைக்கு சரியா கிரும்னு நம்பிக்கையிருக்கு…'' என தன்னை மீறி பீறிடும் கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னார்.
 
அதைக் கேட்டபோது மனது கனத்துப் போனது. ஒரு தாயின் வலியை, வேதனையை எவரால் புரிந்து கொள்ள முடியும்? உலகில் இதற்கு இணையான அன்பு வேறு என்ன இருக்கிறது?
 
''உங்கள் மகனுக்கு நிச்சயம் சரியாகிடும்மா…'' என்று சொன்னேன். அந்தத் தாயின் முகத்தில் நிமிஷ நேரம் மலர்ச்சி தோன்றி மறைந்தது. அந்தப் பையன் தன்னைப் பற்றிப் பேசுவதை விரும்பாதவன் போல, ''படிம்மா…'' என்றான். அந்தத் தாய் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள்.
 
நம்பிக்கைதான் இந்த உலகின் மகத்தான சக்தி! அதை கொஞ்சம் கொஞ்சமாக மகனின் மனதில் அந்தத் தாய் உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். வேறு எவர் தரும் நம்பிக்கையை விடவும் தாய் தரும் நம்பிக்கை மேலானது. அதுதான் ஒரு மனிதனை வலுவேற்றி வளரச் செய்கிறது!
 
இந்தத் தாயைப் போல எத்தனை பேர் தனது உடற்குறைபாடு கொண்ட, மன வளர்ச்சியில்லாதப் பிள்ளைகளைத் தூக்கிச் சுமக்கிறார்கள்? அவர்கள் நலம் அடைவதற்காக அல்லாடு கிறார்கள்? கண்ணீரால் பிரார்த்தனை செய்கிறார்கள்? அவர்களின் அன்பை விட அரிய பொருள் இந்த உலகில் எதுவுமே இல்லை! கடலை விட்டு மேலேறி சூரியன் அவர்களை பார்த்தபடியிருந்தது. மகன் வலி தாளமுடியாமல் முனங்கினான். அந்தத் தாய் ''பொறுத்துக்கோ, இன்னும் பத்து நிமிஷம்தான்…'' என ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார்.
 
அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவேயில்லை. இந்த நிகழ்வின் வழியே தாயின் அன்பை மட்டுமில்லை; மனிதர்களை ஆற்றுப்படுத்த புத்தகங் கள் துணை நிற்கின்றன என்பதை யும் முழுமையாக உணர்ந்து கொண்டேன். ஆம் நண்பர்களே! வலியை மறக்க செய்யும் நிவாரணியாக கதைகள் இருப்பதை அன்று நேரில் கண் டேன். கதை, கவிதை, இலக்கியம் என்பதெல்லாம் வெறும் பொழுது போக்கு விஷயங்கள் இல்லை. அவை மானுடத் துயரை ஆற்றுப்படுத்துகின்றன. மனிதனை நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. மனித மனதை சந்தோஷம் கொள்ளவைத்து, வாழ்வின் மீதான பிடிப்பை உருவாக்குகின்றன.
 
நீண்ட காலத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணையும் அவள் மகனையும் நினைவுபடுத்தியது அருண்ஷோரி எழுதிய Does He Know A Mother's Heart என்கிற புத்தகம் . 40 வருஷங்களாக மனத் துயரை அடக்கி வைத்திருந்த ஒரு தந்தையின் வலியைச் சொல்கிறது இந்தப் புத்தகம்! முன்னாள் மத்திய அமைச்சர், பொருளாதார நிபுணர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட அருண்ஷோரி, தனது மூளை வளர்ச்சி குறைவான மகனை வளர்ப்பதற்காக எப்படி எல்லாம் போராடினார் என்பதை நெகிழ்வாக விவரிக்கிறார்.
 
அருண்ஷோரியின் மகன் ஆதித்யா 'செரிபரல் பேல்சி (Cerebral Palsy)' எனப்படும் உடற்குறைபாடு கொண்டவன். இதன் காரணமாக கைகால்கள் சீராக இயங்கவில்லை. ஆகவே நடக்க இயலாது. பார்வை திறனும், மன வளர்ச்சியும் குறைவு. ஆதித்யாவை அவனது அம்மா அனிதா மிகுந்த அக்கறை எடுத்து கவனித்துக் கொள்கிறார். மருத்துவரீதியாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் அருண்ஷோரி கவனிக்கிறார். மன வளர்ச்சியற்ற பிள்ளையை தங்களின் காலத்துக்குப் பிறகு யார் கவனிப்பார்கள்? யார் தூக்கிக் குளிக்க வைப்பார்கள்? இந்த உலகம் அவனை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்ற துயரமே இப்புத்தகம் எழுதக் காரணமாக இருந்திருக்கிறது.
 
ஆதித்யாவின் பிறப்பு, அவனது பிரச்சினைகள், அதை தீர்க்க அவர்கள் மேற்கொண்ட முறைகள் இவற்றை விவரிப்பதுடன்; கடவுள் ஏன் இப்படி குழந்தைகளை சோதிக்கிறார்? உடல்குறைபாடு கொண்ட, மனவளர்ச்சி இல்லாத குழந்தைகளைவுடைய பெற்றோர்களின் வலியை ஏன் இந்த உலகம் புரிந்துகொள்ள மறுக்கிறது? அவர்கள் எப்படி நம்பிக்கை கொள்கிறார்கள்? அதற்கு மதமும், தத்துவமும் எப்படி உதவி செய்கின்றன என்பதை அருண்ஷோரி இதில் விவரிக்கிறார்.
 
'உங்கள் பாவம்தான் பிள்ளைக்கு இப்படி குறையாக வந்துள்ளது…' என யாரோ ஏளனமாக சொல்லும் போது, அது பெற்றோர் மனதை எப்படி பாதிக்கிறது என்பதை கண்ணீர் துளிர்க்க அருண்ஷோரி எழுதியிருக்கிறார்.
 
அருண்ஷோரியின் அரசியல் கருத்துகளுடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட இந்தப் புத்தகத்தை படிக்கும்போது, ஒரு தந்தையின் வலியை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

-->